Friday, September 30, 2011

பிறந்த நாள் பரிசு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா விடுவிப்பு.. நிலுவையிலுள்ள வழக்கு பட்டியல்..!


முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாள் பரிசாக ரூ 2 கோடி காசோலைகள் வந்தது தொடர்பான வழக்கிலிருந்து அவரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, அவரது பிறந்த நாளுக்குப் பரிசாக ரூ. 2 கோடி அளவிலான காசோலைகள் வந்தன. இதை அரசுக் கணக்கில்சேர்க்காமல்தனது கணக்கில் அவர் போட்டுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிஐ நடத்தி வந்தது. இத்தனை காலமாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை பத்து ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்ஷா, சிபிஐ காலதாமதமாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதற்கான காரணத்தை அது கூறவில்லை என்று கூறி இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டார்.

தற்போது அழகு திருநாவுக்கரசு திமுகவில் இருப்பது நினைவிருக்கலாம். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜெயலலிதா மீதான வழக்குகளில் மேலும் ஒன்று குறைந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மீது திமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகள்

1995ம் ஆண்டு ரூ. 8.5 கோடிக்கு 45,302 கலர் டிவி பெட்டிகளை வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு (விடுதலை), டான்சி நில வழக்கு (விடுதலை) , ரூ. 2 கோடி கிப்ட் காசோலை வழக்கு (விடுதலை), பிளசன்ட் ஸ்டே வழக்கு (தண்டனை-அப்பீல் நிலுவையில் உள்ளது), நிலக்குமதி இறக்குமதி ஊழல் (நிலுவை), திராட்சைத் தோட்ட வழக்கு (விடுதலை), சாப் விளையாட்டு விளம்பர ஊழல் (விடுதலை), சொத்துக் குவிப்பு வழக்கு (நிலுவை), கிரானைட் குவாரி ஊழல் (நிலுவை) , டிட்கோ முதலீட்டு விலக்கு ஊழல் (விடுதலை), வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது (நிலுவை).

Thursday, September 29, 2011

ரஜினிக்கு ரசிகர்கள் நடத்தும் பிரமாண்ட பிறந்த நாள் விழா... ரஜினிக்கும் அழைப்பு....


வரும் டிசம்பர் 12 -ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள். இந்த நாளை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாகக் கொண்டாட சென்னை மாவட்ட ரஜினி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.

உடல்நிலை சீரடைந்து, புதுப்பிறவி எடுத்து வந்துள்ள ரஜினிக்கு, மிகப் பிரமாண்டமாக இந்த விழாவை எடுப்பதற்கான ஏற்பாடுகளில் சென்னை மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் என் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.

டிசம்பர் 12-ம் தேதி ரசிகர்கள் அந்தத்தப் பகுதியில் எளிமையாக ரஜினி பிறந்த நாளைக் கொண்டாடுவதென்றும், அதற்கடுத்த நாள் டிசம்பர் 13-ல் வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பங்குபெறும் பெரிய நலத்திட்ட விழாவாக நடத்துவதென்றும் ரஜினி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கவிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதி ரசிகர் மன்றமும், தங்கள் பெயரிலேயே இந்த உதவிகளை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து வழங்கலாம்.

ரஜினிக்கும் அழைப்பு

ரஜினி சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பிறகு, ரசிகர்களைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியிருந்தனர். ஆனால் போயஸ் தோட்ட இல்லத்தின் பணிகள் மற்றும் ரஜினியின் ஓய்வு கருதி இதுவரை அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

எனவே, ரஜினி ரசிகர்களை அழைத்துச் சந்திப்பதைவிட, ரசிகர்கள் ஒன்று திரளவிருக்கும் அவரது பிறந்த நாள் விழாவுக்கே வருகை தந்து அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டால், ரசிகர்களின் மனக்குறை தீரும் என்ற நோக்கத்தில், ரஜினியையே விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே இதுகுறித்து லதா ரஜினியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அழைப்பாக இல்லாமல் ஒரு கோரிக்கையாக ரஜினியின் முன் வைத்துள்ளனர்.

ஒருவேளை இந்த விழாவுக்கு ரஜினி வரவில்லை என்றால், அவர் ரசிகர்களுக்கு விடுக்கும் பிறந்த நாள் செய்தியை வீடியோவாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் என் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் ஆர் சூர்யா, கே ரவி, சைதை ரவி உள்ளிட்டோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாசரத்தில் வைகை புயல்.... பரபரப்பு தகவல்...


கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஹைலைட்டாக அமைந்தது நடிகர் வடிவேலுவின் பிரச்சாரம்.

விஜயகாந்துக்கு எதிராக அவர் செய்த அந்தப் பிரச்சாரம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போகப் போக நாராசமாகி, அவர் திரையுலக வாழ்க்கையை தற்காலிக ஓய்வு கொள்ள வைத்தது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், வடிவேலு சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார் எனும் அளவுக்கு அமைதியாக உள்ளார். இத்தனைக்கும் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன் அவர்தான். அவரை வைத்துப் படமெடுக்க இயக்குநர்கள் பெரும் ஆர்வத்தோடு இருந்தாலும், அவரிடம் போக முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலிலும் அவர் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

"முன்பாவது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார் விஜயகாந்த். இப்போதோ அவரே ஒரு கூட்டணிக்குத் தலைமை வகிப்பதால், நீங்கள் பிரச்சாரம் செய்ய எந்த தயக்கமும் இல்லையே, முதல்வரும் கூட இதை அமைதியாக ரசிப்பாரே," என்று வடிவேலுவிடம் எடுத்துக் கூறினார்களாம்.

இன்னொரு பக்கம், விஜயகாந்த் அணியை மட்டும் குறிவைத்துப் பிரச்சாரம் மேற்கொள்ள முடியுமா என முக்கிய பிரமுகர் ஒருவரிடமிருந்தும் வடிவேலுவுக்கு தூது வந்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனால் வடிவேலு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லையாம். நமது பிரச்சாரம் எதிர்மறை விளைவைத் தந்துவிடுமோ என்ற நினைப்பு அவருக்கும் இருப்பதால், யோசித்து ஒரு முடிவைச் சொல்வதாகக் கூறியுள்ளாராம்.

எதற்கும் ஒரு முறை கருணாநிதி மற்றும் முக அழகிரியை பார்த்துவிடவும் வடிவேலு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Wednesday, September 28, 2011

அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவுகள்! - அதிர்ச்சி தகவல்


உலகளவில் அதிகளவிலான இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது.

நேற்று உலக கருத்தடை நாள் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் பாலியல் உறவு மற்றும் கருத்தடை முறைகள் குறித்த கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம் உலகளவில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. உலகில் பாதுகாப்பற்ற முறையில் பலரிடம் செக்ஸ் உறவு கொள்ளும் முறை அதிகரித்து வருவது தெரிந்துள்ளது.

புதிய நபருடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளும் இளவயதினரின் எண்ணிக்கை, கடந்த 3 ஆண்டுகளில் 20 சதவீதமும், பிரன்சில் 2 மடங்கும், அமெரிக்காவில் 40 சதவீதமும் அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள இளம்வயதினருக்கு கூட தகுந்த கருத்தடை மற்று பாதுகாப்பான உடலுறவு குறித்த தகுந்த அறிவு இல்லை என தெரிகிறது.

ஐரோப்பிய நாடுகளில் 50 சதவீதம் இளம் வயதினர் பள்ளிகளின் மூலம் செக்ஸ் கல்வியை பெற்றுள்ளனர். தென் அமெரிக்கா, அமெரிக்கா, மற்றும் ஆசியா பசிவிக் பகுதிகளில் 30 சதவீதம் மக்கள் செக்ஸ் கல்வியை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பல நபர்களுடன் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வில் சிலி, போலாந்து, சீனா உள்ளிட்ட 26 நாடுகளை சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் உலகிலேயே தாய்லாந்தில் 62 சதவீதம் மக்களும், அதற்கு அடுத்தப்படியாக சீனாவில் 58 சதவீதமும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 32 சதவீதம் இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, உலகளவில் பாதுகாப்பற்ற உறவுகளால் இளம் வயதினர் இடையே தேவையற்ற கர்ப்பமடைவது அதிகரித்து வருகிறது. கருத்தடை முறைகளை குறித்து கேட்பதற்கு சில நாடுகளில் மக்கள் வெட்கப்படுவதால், அது குறித்த சரியான அறிவு இல்லை. 

எகிப்தில் உள்ள 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளம் வயதினர் உறவு கொண்ட பின்பு, குளித்தால் கருத்தரிக்க மாட்டார்கள் என எண்ணுகின்றனர். இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள 35 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது மிகவும் பாதுகாப்பானது என கருதுகின்றனர். இதில் உலகளவில் பொதுவாக 15 சதவீதம் பேருக்கு கருத்தடுப்பு முறைகளில் விருப்பமே இல்லை என தெரிவித்துள்ளனர். (That's Tamil)

Monday, September 26, 2011

மகிழ்ச்சி செய்தி.... போர் குற்றத்திற்க்காக ராஜபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!


தற்போது அமெரிக்காவில் உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே மீது தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கில், அவருக்கு நியூயார்க் மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது .

விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த கர்னல் ரமேஷின் மனைவி வத்சலாதேவி நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில், போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளார் (வழக்கு எண்: 1:11-cv-06634-NRB). 

இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் தன் கணவர் கர்னல் ரமேஷை படுகொலை செய்துவிட்டதாக, வத்சலாதேவியின் சார்பில் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 -ம் தேதி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

ரமேஷின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கில் இலங்கை ராணுவ தளபதிக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜபக்சேவுக்கும் இப்போது சம்மன் அனுப்ப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து அவர் அவசரமாக இலங்கை திரும்பும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்.

ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்க சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற ராஜபக்சேவுக்கு அங்குள்ள தமிழர் மற்றும் அவர்களுக்கு ஆதரவான இன மக்கள் பெரும் எதிர்ப்பு காட்டினர். இதனால் நியூயார்க்கை விட்டு எங்கும் செல்ல வேண்டாம் என ராஜபக்சேவுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. 

மேலும் அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா இந்த முறை ராஜபக்சேயை சந்திக்கவும் மறுத்துவிட்ட நிலையில், அவருக்கு போர்க்குற்ற வழக்கில் நீதிமன்ற சம்மன் அனுப்பப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Saturday, September 24, 2011

என்னுடைய இந்த கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியுமா...?



எனக்கு சில சந்தேகங்கள் உங்களுக்கு எவ்வளவு அறிவு
 இருக்கிறது என்று சோதிக்க... 

அதனால் தான்  இந்த பதிவு..

கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம் அப்படி 
சொல்லிவிட்டால் நீங்கள் அறிவாளிதான்....


பகலில் நிலவு தெரியுமா? தெரியாதா?

தெரியும் என்ற சொல்லுக்கு எதிர்பதம் என்ன..?

பெண்ணின் மனதில் என்ன இருக்கு தெரியுமா?

பாகிஸ்தான் தீவிவாதத்தை கைவிடுமா?

என்ன ஒரு கேள்விக்கும் பதில் தெரியாதா..?

போய் நல்லா படிச்சிட்டு வாங்க பாஸ்..

நான் என்னவே உங்களை அறிவாளின்னு நினைச்சேன்...

எப்பூடி...


Thursday, September 22, 2011

அடப்பாவிகளே என்னையே 'தல' குனிய வச்சிட்டீங்களே! - வருத்தத்தில் அஜீத்


மங்காத்தா தண்ணி பார்ட்டியில் சோனாவை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என ஊரெங்கும் பேச்சாய் கிடப்பது, படத்தின் நாயகன் அஜீத்தை வருத்தப்பட வைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது மங்காத்தா மூலம் அஜீத்துக்கு.

ஆனால் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் தம்பி பிரேம், படத்தில் நடித்த மகத், வைபவ் என எல்லோருமே மது விருந்து கொண்டாடிய லட்சணம், படத்தின் வெற்றிக்கே கரும்புள்ளி போலாகிவிட்டதே என பெரிதும் வருத்தப்படுகிறாராம் படத்தின் ஹீரோவான அஜீத். 

ஏற்கெனவே ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் ஏக நம்பிக்கை கொண்டவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பார்ட்டியில் அஜீத்தும் கலந்து கொண்டார் என்றாலும், அவர் வந்த வேகத்தில் எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

'தல' போனபிறகுதான், தண்ணியில் கவிழ்ந்து தலை கால் புரியாமல் சோனா பலாத்காரம் வரை போய்விட்டதாம் நிலைமை. அடுத்தநாள் சோனா போலீசில் புகார் கொடுத்த பிறகுதான் விவரம் தெரிய வந்ததாம் அஜீத்துக்கு. விளைவு, மதுவிருந்து வைத்தவர், அதில் அத்துமீறியவரின் நண்பர் என அனைவரையும் கூப்பிட்டு, 'என்னங்க இது... தல தலன்னு சொல்லி தல குனிய வச்சிட்டீங்களே... இனி இதை மங்காத்தா பார்ட்டின்னு வெளிய சொல்லாதீங்க," என்று சொன்னதாக கிசுகிசுக்கிறார்கள்.

'பெரிய நட்சத்திரங்களுக்கு வரும் வழக்கமான சங்கடங்களில் இதுவும் ஒன்று. ஆனா ரசிகர்களுக்கு 'தல'யைப் பத்தி தெரியும்... விடுங்க', என்கிறார்கள் அஜீத்துக்கு நெருக்கமானவர்கள்!

Wednesday, September 21, 2011

நியூயார்க்கை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிகாரிகள் திடீர் தடை


ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள ராஜபக்சேவை, ஐநா. கூட்டத்தைத் தவிர வேறு எங்கும் போக வேண்டாம். நியூயார்க்கை விட்டு வெளியேற வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எங்கும் போக முடியாமல் நியூயார்க்கோடு முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜபக்சே.


ராஜபக்சேவுக்கு இலங்கையை விட்டு எங்கும் சுதந்திரமாக இருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து சென்ற அவர் லண்டனில் மிகப் பெரிய தமிழர் எதிர்ப்பைச் சந்தித்தார்.மேலும் அவர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் போன வேகத்தில் அவர் நாட்டுக்கு ஓடி வர வேண்டியதாயிற்று.

இந்த நிலையில் தற்போது ஐநா. கூட்டத்தில் பேசுவதற்காக வந்துள்ள ராஜபக்சேவை, நியூயார்க் நகரை விட்டு வெளியேற வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனராம். வெளியேறினால் போர்க்குற்ற வழக்கில் சிக்கிக் கைதாக நேரிடலாம் என்றும் அவருக்கு எச்சரிக்கப்பட்டுள்ளதாம்.

ஐநா. கூட்டத்திற்கு வருவதற்கு மட்டும்தான் உரிய பாதுகாப்பு தர முடியும். மாறாக பிற இடங்களுக்குப் போவதாக இருந்தால் அந்தப் பாதுகாப்பு தர முடியாது என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் நியூயார்க்கைத் தவிர வேறு எங்கும் போக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜபக்சே.

அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் உடையவர் ராஜபக்சே. இதனால் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புக்கும் அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். தற்போது அதில் அமெரிக்க அதிகாரிகள் மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர்.

Tuesday, September 20, 2011

அரசு கேபிளில் இன்று முதல் விஜய் டிவி, போகோ சேனல்: ஆனால், சன் டிவி இல்லை!


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் இன்று முதல் விஜய் டிவி, போகோ உள்ளிட்ட கட்டணச் சேனல்களைக் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கேபிள் டிவி இணைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நடவடிக்கைகளை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் சென்னை நீங்கலாக ஏனைய 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்கவும் தமிழக அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பின் மூலம் 90 சேனல்கள் ஒளிபரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவையைப் பெறும் சந்தாதாரர்களிடம் இருந்து மாதம் 70 ரூபாய் மட்டுமே கேபிள் டிவி ஆப்பரேட்டர்களால் வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இந்தச் சேவையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 2.9.2011 அன்று தொடங்கி வைத்தார். முதலில் இலவச சேனல்களை மட்டும் ஒளிபரப்பும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பின்னர் கட்டணச் சேனல்களையும் ஒளிபரப்பு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று முதல் விஜய் டிவி, ஜீ தமிழ், டிஸ்கவரி தமிழ், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், அனிமல் பிளாநெட், நியோ கிரிக்கெட், சோனி மேக்ஸ், ஏஎக்ஸ்என், எச்பீஓ, நேஷனல் ஜியாகிரபிக், என்டிடிவி, சிஎன்என், டைம்ஸ் நவ், ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், டென் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டணச் சேனல்களும் எவ்விதக் கூடுதல் கட்டணமும் இன்றி ஒளிபரப்பப்படும்.

இதன் மூலம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைந்துள்ள கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் இன்று முதல் மாதம் 70 ரூபாய் கட்டணத்திலேயே மேலே குறிப்பிடப்பட்ட கட்டணச் சேனல்களையும் கண்டுகளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மையினர் பார்க்கும் சன் டிவி சேனல்கள் குறித்து அதில் எந்தத் தகவலும் இல்லை.

Monday, September 19, 2011

ரா ஒன்னை இந்தியாவின் பரபரப்புக்குரிய படமாக்கிய ரஜினி!!


'ஒரே நிமிடம்... ஜஸ்ட் ஒரே காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கப் போகிறார்' - இந்த ஒரு செய்தி இத்தனை நாளும் தென்னிந்திய மக்களால் பெரிதாக பேசப்படாமல் இருந்த ஷாரூக்கானின் ரா ஒன் படத்தை, தலைப்புச் செய்திளில் இடம்பெறச் செய்துவிட்டது.

இதுவரை இந்தப் படத்தை ரஜினியின் ரோபோ காப்பி என்று பேசி வந்த வட இந்திய ரசிகர்களோ, ரஜினியே நடிக்கிறார் என்று தெரிய வந்ததும் மிக ஆவலுடன் அந்த செய்தி உண்மையாகும் தருணத்துக்காக காத்திருக்கின்றனர்.

அதுதான் 'ரஜினி மாஜிக்'!

வட இந்திய செய்தித் தாள்கள் மற்றும் இணையதளங்கள் இப்படித்தான் தொடர்ந்து சில தினங்களாக எழுதிவருகின்றன.

'ரா ஒன் படத்தை நம்பர் ஒன்னாக்கிவிட்டார் ரஜினி' என குறிப்பிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ். 'ரா ஒன்னை ரெட் ஒன்னாக்கிவிட்டார் சூப்பர் ஸ்டார்' என புகழாரம் சூட்டியுள்ளார் பிரபல சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை.

வட இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் படத்தில் ரஜினி நடித்தால், ரோபோவின் காப்பி என்ற இமேஜ் நிச்சயமாக மாறிவிடும் என்கிறார் பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ்.

சரி... இது சாத்தியம்தானா...ரஜினி உண்மையில் நடிக்கப் போகிறாரா ரா ஒன்னில்?

இந்தக் கேள்விதான் பெரும்பாலான ரசிகர்கள் மனதில்.

ரா ஒன் படத்தின் தயாரிப்பாளர் ஈராஸ் இன்டர்நேஷனல். இவர்கள்தான் ரஜினியின் ராணா படத்தை சௌந்தர்யாவுடன் இணைந்து தயாரிக்கிறார்கள். ஷாரூக்கான் ஏற்கெனவே ரஜினியிடம் 'இந்தக் காட்சியில் நடித்துத் தந்தால், படத்துக்கே அது ஒரு பெரிய கவுரவமாக இருக்கும்' என கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு ரஜினி என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.

ஈராஸ் நிறுவனத்தினரும் இதை தங்கள் விருப்பமாக தெரிவித்துள்ளனர். ஷாரூக்கானுக்காக இல்லாவிட்டாலும், ராணா தயாரிப்பாளர்கள் நலன் கருதியாவது ரஜினி இதைச் செய்யக்கூடும் என்பதுதான் திரையுலகில் பேச்சாக இருக்கிறது.

மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ள ரஜினி, பூரண ஒய்வுக்குப் பிறகு கேமராவுக்கு முன் நிற்கும்போது, அந்த அதி உயர்மின் வெளிச்சம் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும் இந்த ஒரு நாள் ஷூட் பயன்படும் என்று திரையுலகினர் சிலர் தெரிவித்தனர்.

இன்னொரு பக்கம், விநியோகஸ்தர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர், ரஜினி நடிக்கிறாரா இல்லையா என்பதைப் பார்த்த பிறகு இந்தப் படத்தை வாங்க. ரஜினி நடித்தால் தென்னிந்திய உரிமை பெரும் விலைக்குப் போகும் என்பதால், படத்தை நேரடியாக ஈராஸின் துணை நிறுவனமான அய்ங்கரனே ரிலீஸ் செய்யத் தயாராக உள்ளது.

இவை எல்லாமே ரஜினி சொல்லப்போகும் ஒற்றை வார்த்தை பதிலைப் பொறுத்து இருக்கிறது!

விதிமுறை மீறல்.. என்ன செய்வது இந்த இளைஞர்களை...


அதிக குதிரை சக்தி கொண்ட, இரு சக்கர வாகனங்களில் வீதி உலா வரும் இளைஞர்கள், வாகனங்களை சாலைகளில் கண்மூடித்தனமாக ஓட்டிச் செல்கின்றனர்.

தேவையே இல்லாமல், அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டி, அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், தாங்களும் விபத்தில் சிக்கி, மற்றவர்களையும் 

விபத்துக்கு உள்ளாக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது. சாலையைத் தங்களுக்குத்தான் பட்டயம் எழுதிக்கொடுத்துவிட்டதாக நினைத்து, இவர்கள் செய்யும் சாகசங்கள், மக்களை பயமுறுத்தி வருகிறது.

ஆக்சிலேட்டரை முழுவதுமாக முறுக்கிக்கொண்டு, சாலைகளில் பாம்புகளைப் போல் வளைந்து, நெளிந்து தாறுமாறாக ஓட்டுவது, குறுகிய இடைவெளியில் முந்துவது, முந்த முயற்சிப்பது, ஓடிக்கொண்டிருக்கும், இரு வாகனங்களுக்கு இடையே புகுந்து, "கட்' செய்வது, இடதுபுறமாக முந்துவது என, பலரை பயமுறுத்தி வருகின்றனர்.

தலைக்கவசம் அணிந்து கொண்டோ, அணியாமலோ தலை தெறிக்கும் வேகத்தில், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஓட்டுவதால், பாதசாரிகள் பீதியில் உறைந்து போகின்றனர்.பல இரு சக்கர வாகனங்களில், பின்புறமாக வரும் வாகனங்களைப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும், "ரியர் வீயூமிர்'களை காணமுடிவதே இல்லை. அவை அப்புறப்படுத்தப்படுவது ஏன் என்றும் தெரியவில்லை.

தனக்கும், மற்றவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இத்தகைய அசுரவேக, இரு சக்கர வாகன ஓட்டுனர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.சாலை விதிகளைப் பின்பற்றாமல், அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்களைப் பிடித்து, கடுமையான அபராதம் விதிக்கவும், தொடர்ந்து சாலை விதிகளை மீறும்பட்சத்தில், வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும், போக்குவரத்து போலீசார் முன்வர வேண்டும்.

Sunday, September 18, 2011

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை! (காணொளி,படங்கள் இணைப்பு)


என்னதான் விஞ்ஞானம் வளர்ந்துகொண்டு சென்றாலும் வினோதமான மனிதப்பிறப்புக்கள் அவ்வப்போது உலகில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறான ஒரு விபரீதமான மனிதப்பிறப்பினையே நாம் இன்று பார்க்கப்போகின்றோம். கிட்டத்தட்ட இச்சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் அமெரிக்காவின் அனைத்து தொலைக்காட்சி சானல்களிலும் இது தொடர்பான காணொளி காண்பிக்கப்பட்டது என்றே கூறவேண்டும். 

சரி அப்படி என்னதான் சம்பவம் அது? அமெரிக்காவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிறந்த பெண்குழந்தைதான் Julianna இவரது தந்தை ஒரு கடற்படை அதிகாரி. அவரது அம்மா Collins Syndrome ஒரு 
ஆசிரியை.


ஆனால் இவருக்கு பிறந்த குழந்தையோ முகம் முழுமையாக இன்றி முற்றிலும் சிதைத்த நிலையில் பிறந்துள்ளது. குழந்தையின் அசாதாரண நிலைமைய கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு இது முற்றிலும் மாறுபட்ட ஒரு சம்பவம் எனவும் தெரிவித்தனர்.


இச்சிறுமியின் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர்கள் சாதாரண மனிதனின் முகத்தில் காணப்படுகின்ற சதை எழும்புகளில் இவருக்கு 40% சதவீத எழும்புகள் இல்லாமல் காணப்படுவதாக தெரிவித்தனர்.


மேலும் சிறுமியின் தாடை, பற்கள், காது, கண்கள் ,மூக்கு என அத்தனை அங்கங்களும் வினோதமான முறையில் அமைந்துள்ளது. இவரின் இந்நிலைமை தொடர்பில் பெற்றோர்கள் பெரிதும் கவலைப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுவரை 20 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.


எனினும் சத்திர சிகிச்சை மூலம் ஒருபோதும் முற்றிலுமாக சரிசெய்ய முடியாது எனவும் வைத்தியர்கள் தெரிவித்தார்கள். குறித்த சிறுமி குழாய் மூலமாகவே சுவாசித்து வருகிறார். மற்றவர்களுடன் சிரித்து பழகி வருவதாகவும், வாசிக்க பழகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இது பற்றி கருத்து தெரிவித்த சிறுமியின் தயார் இதெல்லாம இறைவன் எமக்கு தந்த சோதனைகளே.. இது பற்றி கவலைப்பட்டாலும் இந்த உலகிற்கு நாம் ஒரு வினோதமான குழந்தையை காட்டியிருக்கிறோம் என தெரிவித்தார். இவரின் எதிர்காலம் சிறப்பாக அமைய நாமும் இறைவனை பிரார்த்திப்போம்.

Saturday, September 10, 2011

முல்லைத்தீவில் காமுக தந்தையால் 15 வயது சிறுமி கற்பழிப்பு!


முல்லைத்தீவில் 15 வயதுச் சிறுமி ஒருவர் அவரது தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அச்சிறுமியின் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கடும் நோய்வாய்ப் பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

குறித்த சிறுமி இடம் பெயர்ந்து முகாமில் தங்கியிருந்த வேளையில் தந்தையால் பாலியல் ரீதியான தொந்தரவுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. 

சிறுமி இதுதொடர்பாக தனது தாயாரிடம் தெரிவித்தபோதும் தாயார் அது தொடர்பில் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை.

பின்பு முல்லைத்தீவில் மீளக் குடியமர்ந்த பின்னரும் குறித்த சிறுமியின் தந்தை சிறுமி மீது பாலியல் பலாத்காரம் மேற் கொண்டுள்ளார். 

தொடர்ச்சியாகப் பாலியல் பலாத்காரம் மேற் கொள்ளப்படுவதைப் பொறுக்க முடியாத தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். (இலங்கை செய்தி)

Friday, September 9, 2011

ராணா கதையில் மாற்றமில்லை... மேலும் மெருகேற்றப்பட்ட திரைக்கதை... புதிய தகவல்கள்!


ரஜினியின் ராணா கதையிலோ காட்சி அமைப்பிலோ எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட திரைக்கதையை மேலும் மெருகேற்றியுள்ளோம் என்றும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள ரஜினி, நீண்ட ஓய்வுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

வரும் அக்டோபரில் ராணா படப்பிடிப்பு நடக்கும் என்றும் இதில் ரஜினி பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரஜினி இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். ஜோடியாக தீபிகா படுகோனே, இலியானா ஆகியோர் நடிக்கின்றனர்.

இரு நாயகிகளில் தாங்கள் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை சீக்கிரம் முடித்து விட்டு ராணா படத்துக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களும் அதை ஏற்று படங்களை வேகமாக முடித்து விட்டு ராணா படப்பிடிப்புக்கு வர உள்ளனர்.

இப்படம் சரித்திர கதை என்பதால் அதற்கேற்ப பொருத்தமான ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ராணாவில் காட்சிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், ரஜினிக்கான சண்டைக் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளை பலமாக மறுத்துள்ளது இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் தரப்பு.

இந்தப் படத்தின் கதையில் எந்த மாறுதலும் இருக்கக் கூடாது என ரஜினி கூறிவிட்டதாகவும், சண்டைக் காட்சிகள் தொழில்நுட்ப உதவியுடன் சிறப்பாக எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரஜினியின் ஆலோசனையின் பேரில் திரைக்கதை மேலும் மெருகேற்றப்பட்டிருப்பதாகவும் இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி இடைத் தேர்தலில் மதிமுக போட்டியா - வைகோ


திருச்சி இடைத் தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம். உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


கும்பகோணம் வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். இருப்பினும் இந்தத் தேர்தலில் திமுகவுடனோ அல்லது அதிமுகவுடனோ நாங்கள் கூட்டணி சேர மாட்டோம்.

ஒத்த கருத்துக்களுடைய கட்சிகளை அடையாளம் கண்டு அவர்களுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவோம்.

அதேசமயம், திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடியும் மதிமுக எடுத்துள்ளது. இத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்றார் அவர்.

Thursday, September 8, 2011

ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை


ஃபேஸ்புக், டுவிட்டர், எப்எம், வானொலி ஆகியவற்றில் நான் பேசுவதுபோன்று பொய்யான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வரும் ஊடகங்கள் அவற்றை உடனே நிறுத்தாவிட்டால் வழக்கு தொடருவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார். 

இது குறித்து தேமுதிக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஃபேஸ்புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலி போன்ற ஊடகங்களில் நான் பேசுவது போன்று பொய்யான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன என்று என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இது போன்ற ஊடகங்களிடம் நான் பேசவோ, பேட்டியளிக்கவோ இல்லை. இதற்கு மேலும் இந்த ஊடகங்கள் என் பெயரினைத் தவறான நோக்கத்தோடு பயன்படுத்தினால் சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Monday, September 5, 2011

புலிகளை ஆதரிப்பவர்கள் மனித உரிமை பற்றி பேசக்கூடாது... ராஜபக்சே தாக்கு


தீவிரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்துவிட்டு, மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள் பற்றி பேசுவதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தாக்குதல் தொடுத்துள்ளார்.


ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அடுத்த வாரம் ராஜபக்சே கலந்து கொள்கிறார். இதற்காக நியூயார்க் செய்ய திட்டமிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான 2009ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், 40,000 அப்பாவித் தமிழர்களின் கொலைகளுக்கு இலங்கை அரசு பொறுபேற்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் கோரி வருகின்றன. இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்ததாக, ஐ.நா. சபை அமைத்த விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

இந் நிலையில் கொழும்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராஜபக்சே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் பேசியதாவது:

மனித உரிமைகளை மதிப்பதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இன்று எங்கள் மீது குற்றம் சொல்லும் நாடுகள்தான், எங்கள் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்கு நிதி உதவி அளித்தவர்களுக்கு ஆதரவாக இருந்தன.

இலங்கையில் தீவிரவாத செயலுக்கான கொள்கை வகுத்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் அவர்கள்தான். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக சர்வ தேச நாடுகள் குறிப்பாக மேலை நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் பற்றி அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. சில நாடுகள் இப்போதும் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டி உதவி அளித்து வருகின்றன.

இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுக்கு அவை அடைக்கலம் கொடுத்தன. அவர்களுக்கு ராஜ மரியாதை கொடுத்து வருகின்றன (விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த ஆண்டன் பாலசிங்கம் இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருந்தை மறைமுகமாக சுட்டிக் காட்டி இவ்வாறு பேசினார் ராஜபக்சே)

எங்களிடம் பெரிய அளவில் பலம் இல்லாத நிலையிலும் விடுதலைப் புலிகளை ஒடுக்கி, தெற்கு ஆசியாவை தீவிரவாதத்தில் இருந்து விடுவித்தோம். ஆனால், வல்லரசு நாடான அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிரான தனது போரை இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக போர் தொடுத்துள்ள மற்ற நாடுகளை நாங்கள் பின்பிற்றவில்லை. அவர்களிடம் நவீன ஆயுதங்கள் ஏராளமாக உள்ளன. இருந்தும் 10 ஆண்டுகளுக்கு மேலாக போரை நடத்தியும் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. (ஆப்கானிஸ்தானில் அ- காய்தாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையை கிண்டலடித்து இவ்வாறு கூறினார்) என்றார்.

சல்மான் கோபிக்கக் கூடாது, அஜீத்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்-பியா


மங்காத்தா படத்தைப் பார்த்த பின்னர் நான் அஜீத்தின் முழுமையான ரசிகையாகி விட்டேன். சல்மான் கான் கோபித்துக் கொள்ளக் கூடாது, அஜீத்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார் நடிகை பியா பாஜ்பாய்.

கோவா படத்தில் நடித்தவர் பியா. அஜீத்துடன் ஏகன் படத்திலும் நடித்தார். அதில் 2வது நாயகியாக வந்தார் பியா. சமீபத்தில் வெளியான கோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் மங்காத்தா படத்தைப் பார்த்து உருகிப் போய் ட்விட்டரில் எழுதியுள்ளார் பியா.

அதில், மங்காத்தா பார்த்தேன். ஒட்டுமொத்தப் படத்தையும் அஜீத் தாங்கி நிறுத்தியுள்ளார். மனதைக் கவர்ந்து விட்டது அவரது நடிப்பு. அப்படியே உருகிப் போய் விட்டேன். அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார். ஸாரி, சல்மான் கான். இப்போது நான் அஜீத்தின் முழுமையான ரசிகையாகி விட்டேன் என்று கூறியுள்ளார் பியா.

Saturday, September 3, 2011

நல்ல மேக்அப் குணத்தை உயர்த்துமா.?


ஆள்பாதி ஆடைபாதி என்பது பழமொழி ஆனால் தற்போது ஆள்பாதி மேக்அப் மீதி என்று புது மொழி உருவாகும் அளவிற்கு ஒப்பனை என்பது அனைவரின் அங்கமாகி வருகிறது. அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் சந்தைகளில் மேக் அப் சாதனங்கள் குவிந்துள்ளன. ஒருவர் மேக் அப் போடுவதை வைத்தே அவரின் குணத்தை கண்டு கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

முகத்திற்கு கொஞ்சம் பவுடர், லிப்ஸ்டிக் என சிறிதளவு மேக்அப் போட்டுக்கொண்டாலே பெண்களின் அழகை உயர்த்திக் காட்டும். ஆனால் ஒரு சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மேக்அப் சாதனங்களை பயன்படுத்தினால் தான் திருப்தியாக இருக்கும். எனவே மேக்அப் போட்டுக்கொள்ளும் பொருளின் அளவை தவிர்த்து, மேக்அப் போட்டுக்கொள்ளும் ஒருவரது ஆர்வத்தை வைத்து அவரது குணத்தை கண்டறியலாம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இதன்படி, மேக்அப் போட்டுக் கொள்பவர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.

அனைத்திலும் கச்சிதம்

ஒருசிலர் மேக்அப் இல்லாமல் வெளியில் தலை காட்ட மாட்டார்கள். அதாவது, வீட்டுக் குள்ளும் கூட இவர்கள் பெரும்பாலான நேரங்களில் மேக்அப்புடன் தான் இருப்பார்கள். வீட்டை விட்டு வெளியில் கால் வைத்தாலே மேக்அப் சகிதமாகத் தான் புறப்படுவார்கள். போட்டிருக்கும் மேக்அப் எப்படி இருக்கிறது? என்பதை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வார்கள். மேக்அப் கொஞ்சம் கலைந்திருந்தாலே உடனடியாக, சரி செய்து விட்டுதான் அடுத்த வேலையில் ஈடுபடுவார்கள்.

இந்த வகையினர் பழகுவதில் கெட்டிக்காரர்கள். ஆண், பெண் பேதமின்றி எல்லோரிடமும் நட்புடன் பழகக் கூடியவர்கள். எப்போதும் இவர்களது முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டே இருக்கும். தன்னை மற்றவர்கள் பெருமையாக பேசவேண்டும் என்று நினைப்பார்கள். ஏதாவது ஒரு வேலையை தாங்களாகவே இவர்கள் செய்ய விரும்பினால் , அதில் முழுக் கவனத்தையும் செலுத்தி கன கச்சிதமாக செய்து முடிப்பார்கள். அடுத்தவர்கள் வேலையை திணிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆடையிலும் அசத்தல்

இவர்கள் ஆடை விஷயத்திலும் அசத்தி விடுவார்கள். எந்த விழாக்களுக்கு எப்படிப்பட்ட ஆடைய அணிய வேண்டும் என்று மற்றவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவிற்கு அதில் எக்ஸ்பெர்ட் ஆக இருப்பார்கள். அடிக்கடி விதவிதமான ஆடைகள் அணிந்து மற்றவர்களை வியப்பில் ஆழ்த்துவார்கள். இந்த தன்னம்பிக்கை பேர்வழிகள் ஈடுபட்ட துறையில் சாதிக்கவும் செய்வார்கள்.

உதவி செய்யும் மனப்பான்மை

இரண்டாமவர்களை மேக்அப் போட்டுக்கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்று கூற முடியாது“ ஆர்வம் இல்லாதவர்கள் என்றும் கூற முடியாது. முதல் வகையை சேர்ந்தவர்களின் ஆர்வத்தில் பாதியளவு ஆர்வத்தை இவர்கள் பெற்றிருப்பார்கள். வீட்டில் இருக்கும்போது மேக்அப்பை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் மாத்திரம் மேக்அப் போட்டுக்கொள்வார்கள். வெளியிடங்களுக்கு செல்லும்போது மேக்அப் கலைந்து விட்டால் அதை பெரியதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இருப்பதை வைத்து சமாளிப்போம் என்று ' அட்ஜஸ்ட்' செய்து கொள்வார்கள்.

விட்டுக்கொடுத்து செல்லக்கூடியவர்கள் பெரும்பாலும் இந்த வகையினராகத் தான் இருப்பார்கள். இவர்கள் எதற்கும் ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயித்துக் கொண்டு செயல்படுவார்கள். எந்தவொரு செயலையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிக்க மாட்டார்கள். இவர்களது நடவடிக்கைகளில் வேகத்தைவிட விவேகம் தான் மிகுதியாக காணப்படும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது அவர்களை பொறுத்தவரை 100 சதவீதம் பொருந்தும். முகம் தெரியாத நபர் உதவி தேடி வந்து இவர்களை சந்தித்தால், முடியாது என்று கூறாமல் முடிந்தவரையிலான உதவிகளை செய்யக் கூடியவர்கள் இந்த வகையினர். இதனால் இவர்களுக்கு எல்லோரிடத்திலும் நல்ல பெயர் இருக்கும்.

ஆடை விஷயத்தில் இவர்கள் ஓ' போடவும் வைக்க மாட்டார்கள். "ஒன்றும் இல்லை' என்று கூறும் அளவிற்கும் இருக்க மாட்டார்கள். ஆடை விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துபவர்களாக இருக்கும் இவர்களிடம் வெட்டி பந்தா இருக்காது.

மனம் திறக்கும் மங்கையர்

ஒரு சிலர் மேக்அப் போட்டு இருக்கிறார்களா என்பதை உற்று நோக்கினால் தான் தெரியும். இவர்கள் மூன்றாவது ரகத்தை சேர்ந்தவர்கள் ஏதோ, அவர்களும் போட்டார்கள் அதனால், நானும் போட்டுக்கொண்டேன்' என்கிற ரீதியில் இவர்களது மேக்அப் இருக்கும். வீட்டில் இருக்கும்போது இவர்கள் மேக்அப் போட்டுக்கொள்வது அரிதான விஷயம். அப்படியே மேக்அப் போட்டு இருந்தாலும், அதை பிறர் கண்டுபிடிப்பது ரொம்ப கடினம். வெளியிடங்களுக்கு செல்லும்போது மட்டும் லேசாக மேக்அப் போட்டுக்கொள்வார்கள். சென்ற இடத்தில் மேக்அப் கலைந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ள மாட்டார்கள்.

இவர்கள் எந்தச் செயலை மேற்கொண்டாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் கலந்துகொள்ள முயற்சிப்பார்கள். மனதில் உள்ள விஷயங்களை எளிதில் மற்றவர்களிடம் கூறிவிட மாட்டார்கள். பல விஷயங்களை மனதிற்குள்ளேயே பபூட்டி வைத்து புழுங்கிக் கொண்டிருப்பார்கள். மிகவும் நெருக்கமானவர்களிடம் தான் மனம் திறந்து பேசுவார்கள். மற்றவர்கள் இவர்களிடம் பேச்சுக்கொடுத்தால் ஓரிரு வார்த்தைகளில் தான் பதில் இருக்கும். மற்றபடி இவர்களிடம் பெரியதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆடை விஷயத்தில் இவர்கள் எப்போதாவது தான் கவனம் செலுத்துவார்கள்.

புன்னகை என்னவிலை?

இவர்கள் தான் கடைசி வகையினர் என்பதால், மேக்அப் போட்டுக்கொள்வதிலும் இவர்கள் தான் கடைசி நிலையினர். மேக்அப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் நினைத்துப் பார்ப்பதே அரிது. கட்டாயப்படுத்தினால் தான் மேக்அப் போட்டுக் கொள்வார்கள் வீட்டில் இருக்கும்போது மருந்துக்கு கூட இவர்களிடம் மேக்அப்பை எதிர்பார்க்க முடியாது. திருமணம், கோவில் விழா மற்றும் சுப வைபவங்களுக்கு செல்லும்போது மட்டுமே இவர்கள் மேக்அப்பை தேடுவார்கள். அதுவும், ஏனோ, தானோ என்று தான்.

இவர்கள் முகத்தில் புன்னகையை எதிர்பார்ப்பது ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியதாக இருக்கும். யாரிடமும் அதிகம் பேச விரும்பாத இவர்களுக்கு தனிமை தான் பெரும்பாலும் துணையாக இருக்கும். வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களுக்கு உதாரணமாக இவர்களை கூறலாம்.

தாங்கள் அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை இவர்களிடம் மிகுதியாக இருக்கும். இதனால் இவர்களிடம் கலகலப்பை எதிர்பார்க்க முடியாது. எப்போதும் எதையோ பறிகொடுத்தவர்கள் போல் இருப்பார்கள். ஆடை விஷயத்திலும் இவர்கள் அப்படியே!

இந்த வகையான ஆராய்ச்சி அயல்நாடுகளிலும், மேல்தட்டு வர்க்கத்தில் வசிக்கும் பெண்களிடையை நடைபெற்றது. நம் ஊரிலோ வீட்டு வேலையை அவசர அவசரமாக செய்து விட்டு அள்ளிச் சொருகிக் கொண்டு அலுவலகத்திற்கு போகும் பெண்களுக்கு இந்த ஆய்வு சரிப்பட்டு வருமா என்பது தெரியவில்லை.

இந்த நான்கு வகையினரில் நம் ஊர் பெண்கள் எந்த வகையினர் என்பது இப்போது தெரிந்திருக்கும். ஆனால் இதில் உள்ளபடியே கடைபிடிக்க வேண்டியது என்பது அவசியமில்லை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...