Friday, May 10, 2013

இது உலகமகா மொக்கடா சாமி....!


2050-ம் வருடம், மனிதர்களைப்போலவே அனைத்து விலங்குகளும் பேசக் கற்றுக்கொண்டன. தமிழ்மொழி, மலையாள மொழிபோல் கோழிமொழி, ஆடு மொழி என தனித்தனி மொழிகள் உருவாகிவிட்டது. ஆங்கிலம், சீன மொழியை எல்லாம் பின்னுக்குத்தள்ளி கொசுவின் மொழிதான் மிக அதிகமாய்ப் பேசப்பட ஆரம்பித்தது. கொசுக்களின் குடும்பத்தில் மட்டும் ஒருமுட்டைதான் இடவேண்டும் என குடும்பக்கட்டுப்பாடு திட்டமே கொண்டுவரப்பட்டது.



நாயர் ஒருவர் மளிகைக்கடை வைத்திருந்தார். அவரது கடைக்கு சாமான்கள் வாங்க கோழி ஒன்று வந்தது. 


கோழி முட்டை என்ன விலை? என்றது கோழி. 


ஐந்து ரூபாய் 


ஒரு முட்டை கொடுங்க! என்று ஐந்து ரூபாயை நீட்டியது கோழி. 


கடைக்காரருக்கு ஒரு சந்தேகம். கோழி தானே முட்டைபோட முடியுமே இது எதற்காக நம் கடையில் முட்டை வாங்குகிறது? ஒரு முட்டையை எடுத்து கோழியிடம் கொடுத்துவிட்டுக் கேட்டார். “நீயே முட்டைபோட முடியுமே பின் எதற்காகக் கடையில் வாங்குகிறாய்?” 


கோழி எதுவுமே பேசவில்லை. 


கடைக்காரர் திரும்பவும் விடாமல் வற்புறுத்திக் கேட்டார். 


“அது எனக்கும் என் கணவருக்கும் உண்டான ரகசியம், சொல்லக்கூடாது” என்றது கோழி. 


கடைக்காரரால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை, திரும்பவும் கேட்டார், “அப்படியென்ன ரகசியம்?’ 


“என் புருசன் சேவல்தான் சொன்னாரு அஞ்சு ரூபா முட்டைக்காக எதுக்கு உன் அழகிய உடம்பை கெடுத்துக்கிறேனு? அதான் முட்டையை கடைல வாங்கிட்டு போறேன்!”

# படித்ததில் பிடித்தது #

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...