Showing posts with label ஸ்ரீசாந்த். Show all posts
Showing posts with label ஸ்ரீசாந்த். Show all posts

Thursday, May 23, 2013

ஐபிஎல் சூதாட்டம்... சிக்கும் 6 முன்னணி தமிழ் நடிகைகள்!


ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரபல தமிழ் நடிகைகளுக்கும் தொடர்புள்ளதாக போலீஸ் சந்தேகிக்கிறது. எனவே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதால், சம்பந்தப்பட்ட நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது புகார்களும் சதிகளும் சூதாட்ட மோசடிகளும் அம்பலமாகி வருகின்றன. சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள். 

அடுத்த கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது.


கிரிக்கெட் போட்டிகளில் தொடர்பு உள்ள நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது,

"நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் சூதாட்ட தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாக படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது. அதுபற்றி விசாரணை நடத்தப்படும்," என்றார். 

கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று போட்டிகளை பார்த்து ரசித்த நடிகைகள், கிரிக்கெட் வீரர்களுக்கு அளித்த விருந்தில் பங்கேற்ற நடிகைகள், கிரிக்கெட் வீரர்களுடன் சுற்றிய நடிகைகள் யார் யார் என்று போலீசார் விசாரித்து ஒரு லிஸ்ட் தயாரித்துள்ளார்கள். இதில் சில முன்னணி தமிழ் நடிகைகள் இடம்பெற்றுள்ளனர். 

கிரிக்கெட் அணிகள் ஒவ்வொன்றுக்கும் விளம்பர தூதுவர்களாக நடிகைகள்தான் நியமிக்கப்பட்டனர். கிரிக்கெட் போட்டியை காண மைதானத்துக்கு வந்து விசில் போட்ட சில நடிகைகள் கட்டணமாக ரூ.2 லட்சம் வரை வாங்கியுள்ளனர். 

அவர்களுக்கும் சூதாட்ட தரகர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமாக உள்ள 6 நடிகைகள் இந்த விசாரணை வளையத்தில் வருகின்றனர். விரைவில் அவர்களிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

Wednesday, May 22, 2013

நான் தவறு செய்யவில்லை- ஸ்ரீசாந்த் விளக்கமும்... வாசகர்கள் குமுறலும்....

இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் சமீபத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டதுடன், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது ஸ்ரீசாந்த் கூறியதை அவரது வழக்கறிஞர் ரிபிக்கா ஜான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விசாரணையின் போது ஸ்ரீசாந்த் கூறியதாவது : நான் எந்த ஸ்பாட் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை; நான் அர்ப்பணிப்பு உணர்வுடனும், முழுமனதுடனுமே போட்டியில் கலந்து கொண்டேன்; நான் அப்பாவி; எனது வாழ்க்கையில் இது சோதனை காலம்; நமது சட்டத்துறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது; நான் அப்பாவி என்பதை நிரூபிப்பேன் என எனக்கு நம்பிக்கை உள்ளது, எனது நேர்மை மற்றும் மதிப்பை நான் நிரூபித்து திரும்பபெறுவேன். இவ்வாறு ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

தினமலரில் வெளிவந்த இந்த செய்திக்கு சில வாசகர்கள் கொடுத்த கருத்துக்கையும் பாருங்கள்...!
////////////
Ganesh - Yathum oore,இந்தியா
22-மே-201311:16:50 IST Report Abuse
Ganesh உனக்கு ஏன் இந்த வேலை, நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவதனா? மக்களே இவன் சொல்றதெல்லாம் நம்பாதிங்க,அத்தனையும் பொய்.பாருங்க பண்றதெல்லாம் பண்ணிட்டு திருவிழா கூட்டதில காணமல் போன புள்ளமாதிரி... அடே உன்ன பத்தி எனக்கு தெரியும் மகனே...நீ ஆணியே போடுங்க வேண்டாம்..கிளம்புடி..காத்து வரட்டும்.. 
////////////////////
ஆரூர் ரங - chennai,இந்தியா
22-மே-201310:45:31 IST Report Abuse
ஆரூர் ரங ஏடுகொண்டல வாடா சீனிவாசா மெய்யாலுமே இந்த சூதாட்டத்தின் முக்கிய //குருநாதர் // சென்னையை சேர்ந்த பெரிய பரம்பரை சினிமா ஸ்டூடியோ வீட்டுப் பேரன் இவரது மாமனார் பி சி சி ஐ யின் பெருந்தலை மற்றும் முன்னணியிலிருக்கும் ஒரு அணியின் உரிமையாளர் ..ஏற்கனவே போலீஸ் பிடியிலிருக்கும் முக்கிய சூதாட்டப் புள்ளியின் வாக்குமூலம் இது .பிரசாந்த் இது மெய்யாப்பா? .ஆகமொத்தம் இந்த ஐ பி எல் துவக்கப்பட்டது கிரிக்கெட்டை வளர்க்க அல்ல..சூதாட்டத்தை வளர்க்க எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது  

//////////////////////

jasmine banu - madras,இந்தியா
22-மே-201310:20:00 IST Report Abuse
jasmine banu ஐயோ பாவம் என்ன செய்ய நம் காவல் துரை இப்படி தவறு செய்யாத அப்பாவி மனிதரை கைது செய்து விட்டது பாவம் விடுங்க சார் இவரை. அவர் முகத்தை பாருங்க. இவரை போய்????????????? 
///////////////////
PRAKASH - chennai,இந்தியா
22-மே-201310:14:29 IST Report Abuse
PRAKASH யப்பா இது உலகமாக நடிப்பு டா சாமி... தம்பி ரீல் அறுந்து 1 வாரம் ஆச்சு .. இன்னும் பிட்டு போடாத 
/////////////
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
22-மே-201309:54:47 IST Report Abuse
Baskaran Kasimani சிலர் எத்தனையோ கோடிகளை திருமணத்துக்கு தண்ணீர் போல செலவு செய்தார்கள். அவர்களை பிடிக்காத காவல்த்துறை ஒரு விளையாட்டு வீரர் 1.95 லட்சத்துக்கு உடை வாங்கியது குற்றம் என்கிறது. 2 லட்சம் என்பது சர்வதேச அளவில் மிக கம்மியான தொகை. தவறான ஆளாய் பார்த்து பிடிப்பது காவலர்களின் வேலை போல அல்லவா இருக்கிறது... 
///////////////////////
Shekar - Nellai,இந்தியா
22-மே-201310:58:29 IST Report Abuse
Shekarஎத்தனை கோடிக்கும் அவர் வாங்கட்டும் அது பிரச்சனை இல்லை அந்த பணம் எப்படி வந்தது என்பதற்கு விளக்கம் வேண்டும், அவன் கோடி செலவு செய்தான் அவனை பிடிக்கவில்லை இவனை ஏன் என்பது சரியான வாதம் இல்லை. ஸ்ரீசாந்த் தன வருமானம் வந்த விதம் பற்றி கணக்கு காட்டிவிட்டால் இது ஒரு பிரச்சனை ஆகாது. அந்த பணம் சட்டபூர்வமாக ஒப்புக்கொள்ளககூடியதாக இருக்கவேண்டும்.... 
///////////////
Narayan Arunachalam - DELHI,இந்தியா
22-மே-201311:04:20 IST Report Abuse
Narayan Arunachalamதவறான உதாரணம்.. லஞ்சபணத்தில் வாங்கியது என்று தான் காவல் துறை கூறியுள்ளது.. வாங்கினது தவறு என்று கூறவில்லை ... ஓரளவுக்கு ஆதாரங்களை சமர்பித்தால் தான் கைது மற்றும் காவல் நீடிப்பு எல்லாம் செய்ய முடியும்...../
./////////////////////
Ramesh - Now Malaysia,இந்தியா
22-மே-201309:56:37 IST Report Abuse
Ramesh அழகிகளுடன் குதாடும் போது நன்றாக இருந்தது, இப்போது "நான் அவன் கிடையாது என்று சொல்கிரையா".

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...