உலகளவில் நடத்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில், 200 பல்கலைக்கழகங்களின் பெயர்களில், நம் இந்திய பல்கலைக்கழகங்களின் பெயர், ஒன்று கூட இடம்பெறவில்லை. எப்படி, தரவரிசைப்பட்டியலை பட்டியல் இடுகின்றனர்?
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் தகுதி. உலகளவில் புகழ் பெற்றுள்ள இதழ்களில், அவர்கள் எழுதிய கட்டுரை. அக்கட்டுரைகள், உலகளவு அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்டவை. புதிய கண்டுபிடிப்புகளின் ஆய்வு அறிக்கை. அப்பல்கலைக் கழகத்தில் பயிலும், அன்னிய நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை. இந்த வகை தகுதியை வைத்து, தரவரிசை நிர்ணயிக்கப்பட்டன.
சுதந்திரம் பெற்று, 66 ஆண்டு கடந்தும், இன்னும் மரணப்படுக்கையிலிருந்து கல்வி எழ அடம்பிடிக்கக் காரணம், நாம் கல்வியை போதிக்கக் கூடிய சரியான ஆசிரியர்களை தேர்வு செய்யவில்லை என்பதும், நம் கல்வி முறை அறிவை துாண்டும் விதமாக இல்லாமல், பியூன் வேலைக்கு தகுதியான முறையில் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.
உலககெங்கும், ஒரு ஆசிரியருக்கு, 20 மாணவர் என்ற விகிதம் உள்ளது. ஆனால், இங்கு ஆசிரியருக்கு, 80 என்ற விகிதத்தில், 1:80 நிலையில் உள்ளது. இது தவிர பெரும்பாலான கல்விக்கூடங்களில், கட்டட அமைப்பு, விளையாடுத்திடல், சுகாதார வசதி, குடிநீர், நுாலகம் ேபான்றவை இல்லை.
அடிப்படை கல்வியை ஒழுங்கான முறையில் அளிக்காத போது, இவர்கள் பல்கலைக்கழகத்தில் என்ன சாதித்து விடமுடியும்? ஆசிரியர் தகுதி தேர்வு, எப்படி நடத்தப்படுகிறது இங்கே? ஒருவர் அப்பட்டத்திற்கான தகுதி இருக்கிறதோ, இல்லையோ கையில், பி.ஏ., – எம்.ஏ., – எம்.எஸ்சி., என்ற பட்டத்துடன், பி.எட்., பட்டத்தையும் சேர்த்து சுமக்கிறோம்.
அரசு இப்படிப்பட்ட பட்டங்களை நம்பாமல், அரசு எதற்கும் பயன்படாத தேர்வு முறையை புகுத்தி, ‘மம்தா பானர்ஜியின் தாயார் பெயர் என்ன?’ என்ற கேள்விக்கு யார் சரியாக பதிலை அளிக்கின்றனரோ, அவர்களையே அதிபுத்திசாலிகளாக நினைத்து, அவர்களிடம் மாணவர்களை ஒப்படைத்தால், மாணவர் எப்படி உருப்படுவர்?
கடந்த, 1948ல் நம் நாட்டைப் போலவே, நம் எதிரி நாடான சீனா இருந்தது. ஆனால், அந்நாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்கள் முதல் பத்து இடத்தில் இடம் பெற்றதற்கு என்ன காரணம்? அங்கு, தாய்மொழியாகிய சீன மொழியையே ஆரம்ப கல்வியில் துவங்கி, பல்கலைக்கழகம் வரை படித்து, படிப்பின் தன்மையை புரிந்து கொண்டு, அவர்கள் நம்மை விட எல்லா வகையிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர்!
இங்கே படிக்கும் பாடமே எதுவுமே புரிதல்படாத மனப்பாடம் செய்து, செய்த மனப்பாடத்தை அப்படியே ஒருவரி பிறழாமல் எழுதி விடுவர். ஒரு வாரம் கழித்து அப்பாடத்தை பற்றி கேட்டால் கையை பிசைந்து நிற்பர். எம்.பில்., – பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சிக் கட்டுரைகள், யாரோ ஒருவர் எழுதி தர, அவரிடம் ஒரு குறிப்பிட்ட பட்டத்திற்கு, பணம் கை மாறியவுடன், அம்மாணவன் இப்பட்டத்திற்கு தகுதியானவர் என்று இங்குள்ள கீழ்தரமான நிலையை அறிந்த பிரான்ஸ் போன்ற நாடுகள், நம் நாட்டு பல்கலைக்கழகங்கள் அளிக்கும் முனைவர் பட்டத்தை துாக்கி குப்பையில் போட்டு விடுகின்றன.
நம் ஆசிரியர்களில், 100க்கு, 90 பேர் ஆசிரியர்களுக்கான தகுதியே இல்லாதவர்கள் என்பதை உறுதியாக அறியலாம். மாத ஊதியம் மட்டும் இவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் வரை அரசு கொட்டி அழுகிறது. உடல் ஊனமுற்றவனை, ராணுவ வீரராக தேர்வு செய்து, லடாக் பகுதியில் பாதுகாப்பிற்கு நிறுத்துவது எப்படி முட்டாள்தனமானதோ, அதே போல் தான், ஆசிரியராக தேர்வு செய்யும் தேர்வு முறையும்.
சீனர்கள் நமக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால், அவர்களிடம், பால பாடம் படித்து, நம் கல்வியாளர்கள் கல்விமுறையை மாற்றினால் நல்லது. இல்லையேல், ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாத நிலையில் நம் கல்வியை சமாதியில் அடக்கம் செய்யலாம்.
மாற்றம் வரும்... நம்பிக்கை கொள்வோம்...
ReplyDeleteஎன்ன பாஸ்,
ReplyDeleteயாரை இவ்வளவு கேவலமாத்திட்டுறீங்க...
வாத்தியருங்களையா? இல்ல அரசாங்கத்தையா?
ரெண்டுபேருமே இப்ப மகாஆஆஆ.......................................கேவலமாத்தானிருக்குறாய்ங்க!!!
என்ன செய்ய...
நிச்சயமா...நான் என்ன நினைக்கிறேன்னா..இதுக்காக மத்திய கல்வி மந்திரி முட்டாள் கபில்சிபில்..அப்புறம் அறிவு ஜீவின்னு சொல்லிகிட்டு அலையிற மூதேவி பயலுங்க எல்லாம் அமெரிக்காகிட்ட காசு வாங்கிகிட்டு இதுமாதிரி செய்யுறாங்கன்னு நெனைக்கிறேன்......
ReplyDeleteஇதுக்கும் அமெரிக்காவா ? என்ன கொடும சார் இது ?
Delete