Friday, May 11, 2018

இதை கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களா பெற்றோர்கள்...



கல்வி, தெளிவை மட்டும் தருமே அன்றி, அறிவை தராது என்பதை, கல்வியாளர்கள் உணர வேண்டும். ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவை பெற முடியாது. புரிதலின்றி பயிலும் எவ்வகை கல்வியானாலும், மாணவர்கள் கரை சேர முடியாது.

சுதந்திரம் பெற்ற ஓராண்டிலேயே, சீனா, தன் மக்களை தாய் மொழியில் படிக்க செய்து, இந்தியாவை விட, 20 ஆண்டுகள் முன்னேறி விட்டது. தாய் மொழியை புறம் தள்ளி, புரிதல் படாத ஆங்கில மொழியை கட்டி அழுது, இன்னும் முன்னேற முடியாமல் தவிக்கிறோம்.

இன்று, ஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவிக்கும், எல்லா தனியார் பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக அசுர வேகத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன; அதற்காக, அப்பள்ளிகள், 60 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளன. 

ஒரு மாணவன், சி.பி.எஸ்.இ., பள்ளியில் சேர வேண்டும் எனில், குறைந்தபட்சம், 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் தந்தாக வேண்டும். அங்கு, ஏழைகள், தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியாது. வசதி படைத்தோர் பிள்ளைகள் மட்டுமே முன்னேற வேண்டுமா...

மாநிலத்தில், 884 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 34 மேல்நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மேல்நிலைப் பள்ளிகளில், வேதியியலில், 421; பொருளாதாரத்தில், 370; வணிகவியலில், 215; இயற்பியலில், 156; தமிழில், 284; மற்ற துறைகளில், 194 என, 1,640 பயிற்சி பெற்ற முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன; இதே கதி தான், உயர்நிலைப் பள்ளிகளிலும் உள்ளது.

'மந்தைகளில் பயணிக்கும் செம்மறி ஆடுகளை பின் தொடர்ந்து, குருட்டு ஆடுகள் செல்லுமாம்' என்ற அடைமொழியை பின்பற்றுவது போல் தான், இன்றைய கல்வி நிலை உள்ளது.

டாக்டர் அப்துல் கலாம், சிவன், அண்ணாதுரை போன்றோர் எல்லாம், தமிழ் மொழி வாயிலாக, கல்வி கற்று தான் விஞ்ஞானிகளாகினர். இதை புரிந்து, தமிழர்கள், தாய் மொழியை அரவணைப்பரா?
சிவ அண்ணாமலை தேசிகன், விழுப்புரம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...