Wednesday, July 27, 2011

பாலிவுட்டை வாங்கியது ஹாலிவுட்... தமிழ் சினிமாவில் புதிய திருப்பம்...


இந்திய பொழுதுபோக்குத் துறையில் முக்கிய நிறுவனமாகத் திகழும் யுடிவியை ரூ 2014 கோடி கொடுத்து வாங்குகிறது உலக அளவில் பிரபல நிறுவனமான வால்ட் டிஸ்னி.

யுடிவி நிறுவனத்தில் ஏற்கெனவே டிஸ்னி 50.44 பங்குகளை வாங்கியுள்ளது. இந்த நிலையில் மீதியுள்ள பங்குகளை தலா ரூ 1000 வீதம் வாங்க முடிவு செய்து ஒப்பந்தமும கையழுத்தானது. 

யுடிவியின் புரமோட்டர்களான ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் அவரது குடும்பத்தினர் வசமுள்ள பங்குகளையும் சேர்த்து வாங்கிக் கொள்கிறது டிஸ்னி.

இதன் மூலம் புதிதாக $ 454 மில்லியன் டாலர் அதாவது ரூ 2014 கோடியை முதலீடு செய்கிறது வால்ட் டிஸ்னி.

யுடிவி இந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் பலமாக காலூன்றி வரும் ஒரு நிறுவனமாகும். இப்போது டிஸ்னி வசம் முற்றாக இந்த நிறுவனம் செல்வது, தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்கை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டிஸ்னி மூலம் தமிழ் சினிமாவுக்கான சர்வதேச மார்க்கெட் பெரிதாகவும் பிரகாசமான வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே யுடிவி வெளியிட்ட தெய்வத் திருமகள் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது. அடுத்து வேட்டை, வழக்கு எண் 18/9 மற்றும் கும்கி படங்களின் உரிமையையும் யுடிவி பெற்றுள்ளது. இந்தப் படங்கள் இனி வால்ட் டிஸ்னி பேனரில் வெளியாகும் எனத் தெரிகிறது.

யுடிவியின் நேரடித் தயாரிப்பில் உருவாகும் முகமூடி படமும் வால்ட் டிஸ்னி தயாரிப்பாக வெளியாகிறது.

ஏற்கெனவே வார்னர் பிரதர்ஸ் தனது துணை நிறுவனம் மூலம் நேரடி தமிழ் படங்களைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. சினிமா ரசிகர்களுக்கு நல்ல செய்திதான். நம் இந்திய சினிமா இன்னும் எளிதாய் உலகலவில் எடுத்துச்செல்லப்படும் சாத்தியம் உண்டு.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...