Friday, November 29, 2013

தலைவா... வெற்றிகரமான நூறாவது நாளா..? அடங்கமாட்டாங்கபோல...



தமிழ் சினிமாவில் ஒரு வியாதி.... படம் அட்டர் ப்ளாப் என்று அப்பட்டமாகத் தெரிந்த பிறகும், இதை பெருமை பீத்தலுக்காக 100 நாள் வரை ஓட்டுவது.

இந்த ட்ரெண்டை தமிழில் ஆரம்பித்தது யாராக இருந்தாலும், அதிகமாகப் பயன்படுத்திய சாட்சாத் நம்ம விஜய்தான் (பேன்ஸ்ன்ற பேர்ல குதிக்காம, நிதானமா யோசிங்கப்பா!).

முதன் முதலில் விஜய் நடித்த நாளைய தீர்ப்பில் ஆரம்பித்தது இந்த நூறு நாள் ஓட்டும் அழுகுணி ஆட்டம்.




அப்போதெல்லாம் இதற்கென்றே நகரில் சில அரங்குகள் இருந்தன. மோட்சம், கிருஷ்ணவேணி, கமலா, இப்போது கோபிகிருஷ்ணா, ராதா... சில நேரங்களில் தேவி பாலா அல்லது கலா இவற்றில் ஏதாவது ஒரு உப்புமா படம் 100 நாள் காலைக் காட்சியாக ஓடி, அந்த ஆண்டின் நூறு நாள் பட லிஸ்டில் இடம் பிடித்துவிடும்.

விஜய் நடித்த விஷ்ணு, தேவா, செந்தூரபாண்டி, மாண்புமிகு மாணவன், கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், ஒன்ஸ்மோர், நிலாவே வா, என்றென்றும் காதல் போன்ற படங்களின் நூறு நாள் ஓட்டம், மேற்கூறிய திரையரங்குகள் ஏதாவது ஒன்றில் நடந்திருக்கும்.

விஜய் பெரிய நடிகராகி, சில்வர் ஜூப்ளி படங்களைக் கொடுக்க ஆரம்பித்த பிறகும்கூட இந்த பழக்கத்தை அவரால் அல்லது அவர் தந்தையால் விடவே முடியவில்லை. சச்சின் என்றொரு படம் வந்தது நினைவிருக்கலாம். அந்தப் படத்தை வீம்புக்காக கமலா தியேட்டரில் மட்டும் 
நூறு நாட்கள் ஓட்டினார்கள். நூறாவது நாளன்று அந்தத் தியேட்டரில் பதினாறு பேர்தான் இருந்தார்கள்.

நூறாவது நாளிலேயே இந்த நிலை என்றால், அடுத்த நூறு நாட்கள் எப்படி இருந்திருக்கும்! காலக் கொடுமை... அப்படியும் இன்னும் நூறு நாட்கள் ஓட்டி, அதை இருநூறு நாட்கள் ஓடிய படமாகக் காட்டினார்கள்.

இதோ இப்போது தலைவா படம்... 

இந்தப் படம் எப்படி வெளியானது என சினிமா ரசிகர்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். வெளி மாநிலங்களிலெல்லாம் ரிலீசாகி, படம் தேறாது என எல்லோரும் ஒருமனதாக பிறகுதான் தமிழகத்தில் வெளியிட முடிந்தது.

வெளியான முதல் வாரமே பெரும்பாலான திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள். ஆனால் அசராமல் தரணியெங்கும் அதிரடி வெற்றி என்ற அறிவிப்போடு 10வது நாள் போஸ்டர் அடித்தார்கள். சென்னையில் நான்கைந்து அரங்குகளில் கூட ஓடாத நிலையில், ஏகப்பட்ட தியேட்டர்கள் பெயரைப் போட்டு மகத்தான 25வது நாள் என அடுத்த விளம்பரத்தையும் வெளியிட்டார்கள்.

சரி இத்தோடு விட்டுவிடுவார்கள் என்று பார்த்தால், பேபி ஆல்பட் தியேட்டர் பெயரைப் போட்டு வெற்றிகரமான 50 வது நாள் என போஸ்டர்- பேப்பர் விளம்பரங்கள்!

இந்த நிலையில்தான் படத்தை நூறு நாட்கள் ஓட்டாமல் விடப்போவதில்லை என்பதில் தீவிரமாக உள்ளார்களாம். அதாவது ஜனங்க பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் பணம் கொடுத்தாவது படத்தை நூறு நாட்கள் வரை ஓட்டுவது!

விஜய் படங்கள் என்றல்ல... மக்களிடம் தோற்றுப் போன பெரிய நட்சத்திரங்களின் குப்பைப் படங்களை வெட்டியாக ஓட்டும் அத்தனைப் பேருக்குமே இந்த விமர்சனம் பொருந்தும்.

எதுக்கு இதெல்லாம்.... பேசாம தியேட்டர் பெயரே போடாமல் (ரிலீசாகி) வெற்றிகரமான 100வது நாள்னு போஸ்டர் அடிச்சி ஒட்டிக்கிங்கப்பா!

Tuesday, November 12, 2013

நீங்கள் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின்



1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9 மணிக்குள் வந்துவிடுவீர்கள்.

2. ஆறு மாதம் துவைக்காமல் இருந்த ஜீன்ஸ் ஆறு நாளுக்கு ஒரு முறையேனும் துவைக்கப் பட்டிருக்கும்.

3. அப்பா கேட்ட நாலு கேள்விக்கு ஒரு வார்த்தைல பதில் சொல்லி இருப்பீர்கள். இப்ப மனைவி கேட்கற ஒரு கேள்விக்கு, குறைந்த பட்சம் நான்கு பதிலேனும் சொல்வீர்கள்.

4. நண்பர்களுடன் செலவழித்த பல மணி நேரம் இனி சிலமணி நேரங்களாகக் குறையும்.

5. எங்க டா போறேன்னு அம்மா கேட்டப்ப, வந்து சொல்லறேன்னு சொன்ன பதிலை இனி சொல்ல முடியாது.

6. ஒட்டிக் கொண்டே இருந்த உடன் பிறப்புகள் சற்று தூரம் சென்றதாய் உணர்வீர்கள்.

7. அடிக்கடி கைபேசியை வீட்டில் மறந்து விட்டுச் செல்வீர்கள்.

8. நான் வருகிறேன் என்று சொல்லாமல், நான் வரட்டுமா? என்று உங்கள் வீட்டுக்கு வர உங்கள் தந்தையே அனுமதி கேட்கும் நிலைமை வந்திருக்கும்.

9. எல்லாப் பக்கமும் பிரச்சனை என்ற போதும் அலுவலக வேலைகள் தடையில்லாமல் நடந்திருக்கும்.இப்ப காலைல காபி போடறப்ப வந்த சண்டைக்கே வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பீர்கள்.

10. திருமணத்திற்கு பின், இழப்புகள் ஆண்களுக்கும் தான் என்றுச் சொன்னால் இங்கு யாரும் நம்பப் போவதில்லை என்பதை உங்கள் மனம் அடிக்கடி உங்களிடம் சொல்லிச் செல்லும்.  
Thanks : Tamil News

Friday, November 1, 2013

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்



எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில், சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி, செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும், அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ, சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.
 
* புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும், திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியும், பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.

***********************************

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...