Monday, July 29, 2013

உடலின் எல்லா நோயையும் கட்டுப்படுத்தும் ஒரே பழம்....


புற்றுநோயில் இருந்துமனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக"காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன..

புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதா ன் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக் கும்,ஆராய்ச்சியாளர்க ளுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.

புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும்உண்டு.

புற்றுநோய் வந்தபிறகுகொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ்,மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்க ு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள் ளனர்.அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது.

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும ், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும் , தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும்விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிற
து.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அதிகமான ஊட்டச்சத்துக்கள ைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட் டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.

பக்கவிளைவுகள் இல்லை

காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளு ம்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும்உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது.அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூட ியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

Saturday, July 27, 2013

ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ..!


ஒரு ஊர்ல.. ஒரு வெங்காயம், தக்காளி, ice cream அப்படின்னு மூன்று நண்பர்கள் இருந்தாங்களாம்.

ஒரு நாள் மூவரும் கடற்கரைக்குப் போனாங்களாம். அப்ப சொல்ல சொல்லக் கேக்காம ice cream, தண்ணீருக்குப் போய் கரைஞ்சிப் போச்சாம்.

தக்காளியும் வெங்காயமும் அங்கேயே புரண்டு புரண்டு அழுதாங்களாம். வீட்டுக்கு வரும் வழியில் லாரி மோதி தக்காளி நசுங்கிப் போச்சாம்.

உடனே வெங்காயம் அழுதுக்கிட்டே கடவுள் கிட்ட வேண்டிக்கிச்சாம். " ice cream செத்தப்ப நானும் தக்காளியும் அழுதோம், இப்போ தக்காளி செத்தப்ப நான் அழுதேன்.. ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா? ன்னு கேட்டுச்சாம். 

அதற்கு கடவுள், "சரி இனிமே நீ சாகும் போது பக்கத்துல இருக்குற எல்லாருமே அழுவாங்க" ன்னு சொன்னாராம். 

அதனால் தான் வெங்காயம் நறுக்கும்போதெல்லாம் நாம் அழறோம்:)))

***********************

ஒரு அதிகாரி, 


"நேரம் பொன்னானது. அதை வீணாடிக்கக் கூடாது" என்பதில் குறிக்கோளாக இருந்தார். 


அதனால், காலை அலுவலகத்துக்குப் புறப்படுமுன் முக சவரம் செய்துகொண்டே குளிப்பார். கழிவறையில் பேப்பர் படிப்பார். தோசையோ, இட்லியோ வெகுவாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, கையை காலை ஆட்டி, உடற்பயிற்ச்சி பண்ணிக்கொண்டே, வானொலியில் பக்திப் பாடல்கள் கேட்பார். 


இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்தையும் விரயமாக்காமல் பணம் சம்பாதிப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒருமுறை இந்த அவசரத்தின்போது ஒரு சின்ன பிழை நேர்ந்துவிட்டது. 


மாறுதலுக்காக ஆம்லெட் சாப்பிட எண்ணி, அதைக் கையால் சாப்பிட்டால் நேரமாகும்; கை கழுவ வேண்டும் என்று, முள் கரண்டியால் சாப்பிடும்போது செய்திதாளில் கவனமிருந்ததால், அக்கரண்டி அவர் கண்ணைக் குத்திவிட்டது. 


கண்ணின் விழி கரண்டியோடு வந்துவிட்டது. 


இப்போது அவர் ஒரு கண்ணால் ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கிறார். நேரம் பொன்னானது என்று யாராவது சொன்னால் சீறுகிறார். அவ்வப்போது அமைதியாக மீன் பிடிக்கச் சென்று விடுகிறார். 


மணிக்கணக்காக ஒரு மீனுக்காகக் காத்திருகிறார். பிடித்து மறுபடி நீரில் விட்டு விடுகிறார். 


நீதி : *நேரத்தைவிட, வாழ்க்கை பொன்னானது*.

***********************



எனக்கும் என் மனைவிக்கும் பயங்கர சண்டை.

பின்னே என்னங்க ... 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து "வாக்குவம் கிளீனர்" வாங்கிக் கொடுத்த பிறகும், வாரத்துக்கு ஒரு விளக்குமாறு வாங்கிக்கிறா.

"உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலேயே அடிச்சிக்கணும்" என்று கோபத்தில் கத்தினேன் நான்.

அவள் அமைதியாகச் சொன்னாள்,

"செருப்பு இருக்கு ... புத்திக்கு எங்கே போவீங்க??"

Friday, July 26, 2013

ரசிகர்களுக்கு ரஜினி திடீர் வேண்டுகோள்

 
 
 தன் மகள் இயக்கத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு நிம்மதியாக உட்கார்ந்துவிட்டார் ரஜினிகாந்த். கடைசியாக கோச்சடையான் திரைப்படத்தில் இளவரசன் செங்கோடகனாக நடிக்கும் சரத்குமார் சமீபத்தில் தான் டப்பிங் பேசிமுடித்தார்.





கோச்சடையான் திரைப்படத்திற்கான டப்பிங் வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் பணிகளை துவங்கிவிட்டார். படப்பிடிப்பு எப்போதோ முடிந்து இன்னும் ரிலீஸ் பற்றி செய்தி வரவில்லையே என ரசிகர்கள் சௌந்தர்யாவின் டுவிட்டர் அக்கவுண்டை சுற்றி சுற்றியே வந்துகொண்டிருந்தனர்.


படப்பிடிப்பை விட கிராஃபிக்ஸ் வேலைகள் தான் அதிகம் என்பதால் ஸ்டூடியோவிலேயே அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறது கோச்சடையான் டீம். இந்நிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ‘கோச்சடையான் ரிலீசாகும் வரை அமைதியாக காத்திருப்போம்’ என்று படம் ஒன்றை போட்டிருந்தார்.


அதை ரீடுவீட் செய்த சௌந்தர்யா “நீங்கள் ரசிக்கக்கூடிய விதத்தில் கோச்சடையானை தரவேண்டும் என்பதற்காகவே நாங்கள் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். எங்களை நம்புங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இளம் பெண்ணை பலிவாங்கிய பேஸ்புக்..! இன்னும் என்ன ஆகும்..!



திருமணமான ஒரு மாதத்தில் பேஸ்புக்கில் வெளியான படம் ஒன்று இளம் பெண்ணின் உயிரை பறித்துள்ளது.

ஆம்! பேஸ்புக்கில் வேறொருவருடன் இருப்பதாக வெளியான படத்தினால் கணவன் சந்தேகப்பட மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் இளம் பெண்.

சென்னை திருவான்மியூர் பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணின் பெயர் அனு. இவர் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றிவந்தார்.

இவருக்கும் ரமேஷ் பாபு என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் சென்னையில் பணியாற்றிவந்தார்.

இந்த நிலையில் ஆடி மாதம் என்பதால் அனு தனது பெற்றோருடன் திருவான்மியூரில் தங்கியிருந்தார். 

இத்தருணத்தில் கணவர் ரமேஷ் பாபு...


மனைவி அனுவின் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்க நேரிட்டது. இதில் அனுவும் அவருடன் பணியாற்றும் ஒருவரும் சேர்ந்து இருந்த படம் வெளியாகியிருந்தது. தன் மனைவி வேறு ஒருவருடன் இணைந்து இருப்பது போன்ற படத்தை கண்டதும் ரமேஷ் பாபு அதிர்ந்தார்.

உடனே மனைவி அனுவிடம் இதுபற்றி கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருகுடுபத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் கடும் மனவேதனை அடைந்த அனு தன் தாத்தா வீட்டில் மின்விசிறியில் புடவையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


திருமணமாகி ஒருமாதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Thursday, July 25, 2013

இனிமேல் நீங்க அவசரப்படுவீங்களா..?


“குருவே, எனக்கு பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது’ என்று சொன்னவனைப் பார்த்தார் குரு.

“என்ன சங்கதி’ என்றார்.

“என் வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் பிரச்னைகள் தான் தெரிகிறது. அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரிய வில்லை’ என்றான் வந்தவன்.

இதைக் கேட்டதும் குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.“ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார். தினமும் அவருக்கு ஒரே ரூட் தான். ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது. நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. ஒரு நிறுத்தத்தில் முரட்டுத்தனமான மனிதன் ஒருவன் ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய் இருந்தவனைப் பார்த்த எல்லோரு க்குமே கொஞ்சம் அச்சமாய்தான் இருந்தது. கண்டக்டர் அவனிடம் சென்று, “டிக்கெட்’ என்று கேட்டார். அவன் உடனே, “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று சொல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டான். “ஏன் டிக்கெட் வேண்டாம்’ என்று கேட்க கண்டக்டருக்குப் பயம். தள்ளி வந்து விட்டார்.

மறுநாளும் இதே கதை. “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று முறைத்தக் கொண்டோ சொல்லக் கண்டக்டர் வந்து விட்டார். இப்படியே ஒரு வாரம் கழிந்தது. கண்டக்டருக்கு எரிச்சல் அதிகரித்தக் கொண்டே இருந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார்.

அவன் பலசாலியாக இருப்பதால்தானே பயமாக இருக்கிறது, நாமும் பலசாலியாவோம் என்று எண்ணி உடற்பயிற்சிகள் செய்யத் துவங்கினார். தற்காப்பு கலை வகுப்புகளுக்குப் போனார். ஆறு மாதங்கள் இப்படியே போனது. கண்டக்டரின் உடல் வலுவானது. பயம் கொஞ்சம் போனது. இன்று அந்த தடியனிடம் டிக்கெட் ஏன் எடுப்பதில்லை என்று கேட்டுவிட வேண்டும் என்று பஸ்ஸில் ஏறினார்.

இரண்டு ஸ்டாப்புகள் கழித்து அவன் ஏறினான். கண்டக்டர் டிக்கெட் கேட்க அவன் வழக்கம் போல், “நான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை’ என்று சொல்லி தலையைத் திருப்பிக் கொண்டான். கண்டக்டர் தன் தைரியத்தையெல்லாம் வர வழைத்துக் கொண்டு “ஏன் தேவையில்லை?’ என்று விறைப்பாய் கேட்டார். அதற்கு அவன் சொன்ன பதில், “நான் பஸ் பாஸ் வைத்திருக்கிறேன்’.’

இந்தக் கதையைச் சொன்னதும் வந்தவனுக்கு எல்லாவற்றையும் பார்த்து மிரளும் தன்னுடைய குணம் புரிந்தது.  அப்போது குரு அவனுக்கு சொன்ன  ஒரு பழமொழி:

பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!

Wednesday, July 24, 2013

சிம்புக்கு ஹன்சிகாவின் பதிலடி...!



எஸ், நான் சிம்புவை காதலிக்கிறேன், அடுத்த வருஷம் திருமணம் என்று போல்டாக பேசிய ஹன்சிகா இப்போது திடீரென்று பல்டியடித்திருக்கிறார். 



சினிமா நட்சத்திரங்களின் காதல், வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போலதான் எப்போது பிரகாசிக்கும், எப்போது பாய்ந்து மறையும், தெரியாது. கல்யாணத்துக்கு முதல்நாள்வரை, எங்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான் என்று ஜல்லியடிப்பவர்களுக்கு மத்தியில், ஆமாம் நாங்க காதலிக்கிறோம் என்று ஹன்சிகா சொன்னது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் அதுவே 


இப்போது ஹன்சிகாவின் மார்க்கெட்டுக்கு உலை வைத்திருக்கிறது. 


காதலிக்கிறாங்க…... சட்டுன்னு கல்யாணம் பண்ணிகிட்டா, நம்ம படம் என்னாகிறது என்று ஹன்சிகா ஒப்பந்தம் செய்தவர்கள் யோசிக்கிறார்கள். புதிதாக யாருக்கும் அவரை படத்தில் நடிக்க வைக்க விரும்பவில்லை. பீக்கில் இருக்கிற நேரம் இப்படி பீல்ட் அவுட் ஆகணுமா என்பது நேர்மையான அறிவுரைதான். 


எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்த ஹன்சிகா, காதலிக்கிறோம், ஆனா கல்யாணம் ஐந்து வருஷத்துக்கு பிறகுதான் என மாற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்.


அதுவும் நல்ல முடிவுதான். சிம்பு காத்திருப்பாரா?

Tuesday, July 23, 2013

’சொன்னா புரியாது’ படத்தின் கதை

 
 ‘மிர்ச்சி’ சிவா நடித்த தில்லுமுல்லு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, தனது வெற்றியையும் உறுதியாக்கிவிட்டது. இந்நிலையில் சிவா, வசுந்தரா கஸ்யப் ஜோடியாக நடிக்கும் சொன்னா புரியாது திரைப்படம் ஜூலை 26-ஆம் தேதி ரிலீஸாகிறது.





சொன்னா புரியாது திரைப்படத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாக நடிக்கிறாராம் சிவா. சொன்னாபுரியாது திரைப்படத்தில் நடித்தது(!) குறித்து பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு சிவா பேட்டியளித்துள்ளார்.


பேட்டியில் பேசிய போது ” டைட்டிலே இல்லாம தான் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணோம். ஆனா ஷூட்டிங் முடிஞ்சதும் டைட்டிலுக்காக ரொம்ப யோசிச்சோம். அப்ப பல டைட்டில் யோசிச்சாலும் அது புரியாது, இது புரியாதுனு சொன்னாங்க. அதனால ’சொன்னா புரியாது’-னு டைட்டில் வெச்சிட்டோம். டைரக்டர் கதை சொல்லி முடிச்சதும் எனக்கு அவர் சொன்னது எதுவுமே புரியல. உண்மைய சொல்லனும்னா கதைக்கேத்த டைட்டில் தான் இது.





நான் ஸ்பாட்ல பீடா சாப்பிடும்போது டைரக்டர் பாத்துட்டு, எனக்கு இந்தி தெரியும்னு நினைச்சிகிட்டு ’இந்த படத்துல நீ தான் ஒரு இந்தி பாட்டு எழுதி பாடனும்’னு சொல்லிட்டாரு. நானும் பீடா போட்டுகிட்டு 20 நிமிஷத்துல பாட்டு எழுதி 10 நிமிஷத்துல பாடிட்டேன். இந்திலயும் கால் வெச்சிட்டதால இனி என்னோட ஒரே போட்டி ஷாருக் கான் தான்(இத சொன்னதும் அவரே சிரிச்சிட்டாராம்).


தாய்லாந்துல இருக்க 'No Man's Land'(மனிதன் இல்லாத பூமி) தீவுல ஷூட்டிங் எடுக்க போனோம். ஆனா அங்க 30,000 மனுஷங்க இருந்தாங்க. இந்த படத்துல இயக்குனர், ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் என எல்லாரும் புதுமுகம். மக்கள் இந்த மாதிரியான படங்களையும் ஆதரிக்கனும்” எனக் கூறியுள்ளார்.

Monday, July 22, 2013

அரசியலில் விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர்.. எஸ்.ஏ.சி ஏற்படுத்திய பரபரப்பு...!


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இனி வரும் அரசியலில் நான் அண்ணா... என் மகன் விஜய்தான் எம்ஜிஆர், என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் சொன்னதாக வெளியாகியுள்ள செய்திகள் இரு கழகங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது விஜய்க்கு பெரும் நெருக்கடியாக அமையும் என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த போதே அரசியலை மனதில் வைத்து மகனுக்கு இளைய தளபதி என்று பட்டம் சூட்டிவிட்டவர் எஸ் ஏ சந்திரசேகரன். இத்தனைக்கும் அன்றைக்கு அவர் ஒரு நடிகராகவே யார் மனதிலும் இடம்பெறாத நேரம். 



காதலுக்கு மரியாதை வரை சுமாரான வெற்றிகள்தான். அதன் பிறகு வந்த வெற்றிகளை அரசியல் பிரவேசத்துக்கான முன்னோட்டமாகவே பார்த்தனர். அதன் பிறகு ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினர். அதற்கு தலைவராக எஸ்ஏ சந்திரசேகர்தான் இருக்கிறார். 

திமுக ஆட்சிக் காலத்தில் விஜய்யின் அரசியல் பிரவேச முஸ்தீபுகள் இரு தரப்பிலும் உரசலைத் தோற்றுவிக்க, சடாலென அதிமுகவுக்கு வெளிப்படையாக ஆதரவளித்தனர். அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், அந்த வெற்றியில் தன் பங்கு ஒரு அணில் அளவுக்கு இருந்ததாக விஜய்யே அறிக்கை விடுத்தார். 

அதிமுக ஆட்சிக்கு வந்த முதல் ஒன்றரை ஆண்டுகளில் விஜய்க்கு பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் இரண்டாம் ஆண்டில் அவரால் வாய் திறந்து எதுவும் சொல்ல முடியாத நிலை. வருங்கால முதல்வரே, ஜனாதிபதியே என்கிற ரேஞ்சுக்கு பிறந்த நாளுக்கு போஸ்டரெல்லாம் அடித்து, பிரமாண்ட பந்தல் போட்டும், அதைக் கொண்டாட முடியாமல் கமுக்கமாகப் பிரிக்க வேண்டிய நிலை. 



இந்த நிலையில் இனி வெளிப்படையாக தங்கள் இயக்கம் சார்பில் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளார்களாம். "தமிழகத்தின் முதல்வராகும் தகுதி விஜய்க்கு இருப்பதாகவே நினைக்கிறார் எஸ்ஏசி. அவரைப் பொறுத்தவரை, திராவிட கட்சிகளில் அண்ணாவும் எம்.ஜி.ஆரும்தான் தலைவர்கள். அதேபோல இப்போது அண்ணா ரேஞ்சுக்கு தன்னையும், எம்.ஜி. ஆருக்கு நிகராக தன் மகனையும் ஒப்பிட்டு பல இடங்களிலும் பேசி இருக்கிறார். 

இது ஆட்சி மேலிடத்துக்கும் தெரியும். எதிர் தரப்புக்கும் தெரியும். இந்தப் பேச்சுதான் அவர்கள் இருவருக்கும் பெரும் பிரச்சினையைத் தரப் போகிறது. 

ஒருவேளை அதை வைத்தே அரசியலைத் தொடங்கிவிடலாம் என எஸ் ஏ சி தரப்பு நினைத்திருக்கிறதோ என்னமோ?" என்கிறார்கள் உளவுத் துறை வட்டாரங்களில். ஆனால் எஸ்ஏசி தரப்பிலோ, யாரிடமும் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்ற ஒற்றை வரி மறுப்போடு அமைதி காக்கிறார்கள். 

அரசியல்வாதிகளுக்கு உச்சநீதிமன்றம் வைத்த அதிரடி ஆப்பு..!



"குற்றப் பின்னணியுடைய எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்படும்" என்று, உச்ச நீதிமன்றம் போட்ட, சாட்டையடி உத்தரவால், அரசியல்வாதிகள் அனைவருமே சற்று, ஆடித் தான் போயிருப்பர். 
காரணம், "கிரிமினல்'களின் புகலிடமாக அரசியல் இருப்பது தான். 

லஞ்சம், கொள்ளை, கொலை, ஆள் கடத்தல், நில அபகரிப்பு, பாலியல் வன்முறை என்று, பல்வேறு குற்றங்களை செய்து விட்டு, பண பலம், ஆள்பலத்தால், பதவியில் அமர்ந்து விடுகின்றனர். 

அநாகரிக அரசியல் நடத்தி, தங்கள் வாரிசுகளையும் பதவியில் அமர்த்தி, கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் இடம் பிடித்து விடுகின்றனர். நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத இவர்களுக்கு, "மக்கள் பிரதிநிதிகள்' என்ற, மதிப்பான பெயர் வேறுகுற்றவாளிகளே வேட்பாளர்களாக இருக்கும் போது, "எரிந்த கொள்ளியில், எந்த கொள்ளி நல்ல கொள்ளி?' என்ற விரக்தியில், ஏதோ ஒரு கொள்ளியைத் தேர்ந்தெடுக்கும், இக்கட்டான நிலைக்கு, மக்கள் தள்ளப்படுகின்றனர்.


இந்த நிலையில், மேற்கண்ட உச்ச நீதிமன்ற உத்தரவு, வாக்காளர்களுக்கு வரப்பிரசாதம். நல்லவர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் கையில் நாட்டை ஒப்படைக்க, சிந்தித்து ஓட்டளிக்கமுடியும். 

நீதித்துறையை மட்டுமே நம்பியிருக்கும் மக்களுக்கு, நிறைவை தருவதாக அமைந்துள்ளது, உச்ச நீதிமன்ற உத்தரவு. என்றாலும், அரசியல்வாதிகள், பலே கில்லாடிகள். சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து, அதிகாரத்தில் ஒட்டிக் கொள்வர். 

குற்றம் செய்தவர்கள், நல்ல பிள்ளைகள் போல் ஒதுங்கி, தாங்கள் இருந்த இடத்தில், "பினாமி'களை உட்கார வைத்து, திரை மறைவில் நின்று, சாவி கொடுத்த பொம்மைகளாக, அவர்களை, தங்கள் இஷ்டப்படி செயல் பட வைத்து, ஆட்சி நடத்துவர்.நீதித்துறை தடுக்கில் பாய்ந்தால், குற்றவாளிகள் கோலத்தில் பாய்வர். 

இம்மாதிரியான, தகிடுதத்த அரசியல்வாதிகளின் குறுக்கு வழி, சட்டத்தால் அடைக்கப்பட வேண்டும்.நல்லவர்கள் மட்டுமே, மக்களின் பிரதிநிதியாக வர முடியும் என்ற நம்பிக்கையோடு, உச்ச நீதிமன்ற உத்தரவை இரு கரம் நீட்டி வரவேற்போம்; ஜனநாயகத்தை காப்போம்.

Saturday, July 20, 2013

மரியான்- சினிமா விமர்சனம் (தட்ஸ் தமிழ்)



கடல் சார்ந்த கதைகளுக்கும் நவீன தமிழ் சினிமாவுக்கும் அவ்வளவாக ஒத்துப் போகவில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு கடல் புறத்துக்கு டூயட் பாட்டு எடுக்க மட்டுமே போவார்கள் தமிழ் சினிமாக்காரர்கள் என்ற வகையில் ஆறுதல் கொள்ளலாம். 

நீரோடியில் இடைவேளை வரை ஒரு காதல்.. சூடானில் ஒரு ஆள் கடத்தல்.. இந்த இரண்டையும் எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்திருக்கிறார் பரத்பாலா. அதிகபட்சம் முக்கால் மணி நேரத்துக்குள் முடிய வேண்டிய கதையை, இரண்டரை மணி நேரத்துக்கு இழுத்தால்... மே மாத வெயிலில் வேலூரிலிருந்து கோயம்பேட்டுக்கு நடந்தே வந்த எஃபெக்ட்! 

சின்ன வயசிலிருந்தே தனுஷை விழுந்து விழுந்து காதலிக்கிறார் பார்வதி. ஆனால் தனுஷ் அந்தக் காதலை ஏற்காமலே இருக்கிறார். தன்னைக் காதலித்து கஷ்டப்படக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் ஏற்காமல் இருக்கிறாராம். அப்புறம் ஒருவழியாக இடைவேளை நெருங்கும்போது காதலிக்கிறார்கள். ஆனால் இந்தக் காதலுக்கு குறுக்கே வருகிறது, 

பார்வதியை வளர்த்த 'தொம்சு' வாங்கிய கடன். பணத்தைக் கொடு, இல்லையென்றால் பெண்ணைக் கொடு என்று வந்து நிற்கிறான் கடன்காரன். காதலியாயிற்றே... ஆப்பிரிக்க எண்ணெய்க் கிணற்றில் வேலை செய்ய ஒப்புக் கொண்டு பணம் வாங்கி கடனை அடைக்கிறார் தனுஷ். 

சூடான் போகிறார். இரண்டு ஆண்டுகள் வேலை. ஊருக்குத் திரும்ப ஒரு வாரமிருக்கும்போது, அந்த ஊர் தீவிரவாதிகளிடம் சிக்குகிறார். எப்படி மீண்டு வந்து காதலியைக் கைப்பிடிக்கிறார் என்பது அரை மணி நேர க்ளைமாக்ஸ்! ஒவ்வொரு காட்சியையும் நீட்டி முழக்கினால்தான் உயர்ந்த படம் என ஒப்புக் கொள்வார்கள் என்பது பரத் பாலா நம்பிக்கை. ஒரு சாம்பிள்... 

தொழிலுக்கு கடலுக்குச் செல்லும் நண்பன் பிணமாகக் கரை திரும்புகிறான் (யார் சுட்டாங்கன்னு சொல்லத் தைரியமில்லேன்னா சும்மா இருக்கலாமே..!). சாதாரணமானவர்கள் சட்டென்று கதறி அழுவார்கள். நம்ம ஹீரோ தேசிய விருது வாங்கினவராச்சே... அப்படியெல்லாம் அழுதிட முடியுமா... வாந்தியெடுப்பது போல ஒரு பாவனை.. அப்புறம் உதட்டைக் கடிக்கிறார்.... எதையோ பார்த்து பயப்படுவது போல ஒரு முறுக்கல்... அப்படியே தலையைப் பிடித்துக் கொள்கிறார்... பிணத்தை எதிரில் வச்சிக்கிட்டு எப்படி அழுதா எடுப்பா இருக்கும்னு ஒத்திகையா பார்ப்பாங்க.. அழுதுத் தொலைக்க வேண்டியதுதானே! 

அடுத்த காட்சி... நண்பனைப் புதைத்த குழி அருகே அழுது கொண்டிருக்கிறார் தனுஷ். அப்போது தன்னைப் பெண் கேட்டு கடன்காரன் வந்திருப்பதை பரபரப்பாக வந்து சொல்கிறாள். அவள் கஷ்டம் அவளுக்கு. ஆனால் அடுத்த நிமிடம் தனுஷ் காதலியை போட்டு புரட்டி எடுக்கிறார்..


 அடி உதைதான்.. இதுக்கு வில்லனே பெட்டராச்சே... சூடானில் கடத்தல் காட்சிகள் எல்லாம் ஓகேதான். ஆனால் தனுஷின் நண்பனைப் போட்டுத் தள்ளும் தீவிரவாதிகள், தனுஷால் பணம் வராது என்று தெரிந்தும் விட்டு வைத்திருப்பதாகக் காட்டுவது... 2.30 மணி நேரத்துக்கு 'கன்டென்ட்' வேண்டும் என்பதற்காகவா! அனைத்துக் காட்சிகளையும் சுலபத்தில் ஊகிக்க முடிகிறது. 
 
தனுஷும் நண்பரும் தப்புவார்கள். எப்படியும் நண்பர் இறந்துவிடுவார்.. தனுஷ் கடைசியில் அந்த பெண்ணா ஆணா என்று ஊகிக்க முடியாத வில்லனை கொன்றுவிடுவார்... அத்தனைக் காட்சிகளையும்! 

அந்தப் புலிகள் கனவா... பிரமையா... மனப் பிராந்தியா... இதையும் கொஞ்சம் தெளிவுபடுத்தியிருக்கலாம். அடுத்த நிமிடமே கனவில் பார்வதி வந்து தனுஷுக்கு பாலைவனத்தில் வழிகாட்டுவதைப் போல காட்டியிருப்பதால் 'புலிகள்' பிரமை என்று நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான்! 

புத்திஜீவிகள் என தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலர் படமெடுத்தால், காட்சிகள் - வசனங்களில் ஏக அபத்தங்களும் ஆபாசங்களும் கொட்டிக் கிடக்கும். மரியானும் அதற்கு விலக்கில்லை. ஐந்து வயசுக் குழந்தை கூட ஆத்தா என்ற புனித வார்த்தையை அசிங்கமாய் திட்ட பிரயோகப்படுத்தும் தமிழகத்தின் நச்சு சூழலில் கடல், மரியான் மாதிரி படங்கள் தொடர்ந்து வந்தா... வெளங்குன மாதிரிதான்! 

அதற்காக படத்தில் எந்தக் காட்சியும் நன்றாக இல்லையா என்றால்... இருக்கின்றன. அந்த இந்திக்காரனை ஜெகன் ஓட்டுவது, கடத்தப்பட்ட பிறகு பட்டினிக் கொடுமையில் தலைவாழை விருந்து சாப்பிடும் பாவ்லா, ஆப்ரிக்க பாலைவனங்களை ஒளிப்பதிவாளர் மார்க் கோனிக்ஸ் காட்சிப்படுத்தியிருக்கும் நேர்த்தி... 

படத்தின் ஹீரோக்களில் ஒருவரான ஏஆர் ரஹ்மானின் இசையைச் சொல்லியாக வேண்டும். இன்னும் கொஞ்சம் நேரம், கடல் ராசா, நெஞ்சே எழு பாடல்கள்தான் படத்தின் வெறுமையான காட்சிகளை கொஞ்சம் மறக்கடிக்க வைக்கின்றன. குறிப்பாக அந்த நெஞ்சே எழு.. பாடலை பயன்படுத்தியிருக்கும் காட்சி (வந்தே மாதரம் பாதிப்பு இயக்குநருக்கு போகவில்லை!). 'நான் நடிக்கிறேன் நான் நடிக்கிறேன் பாருங்க' என்று காட்டுவதற்கான பிரமாண்ட 'கேன்வாஸ்' மாதிரித்தான் தெரிகின்றன தனுஷ் வரும் காட்சிகள். 

'நான் மட்டும் இளைச்சவளா... இதோ பாரு என் பர்மான்ஸை' என்று அஞ்சு ரூபாய்க்கு கேட்டால் ஆயிரம் ரூபாய்க்கு நடிப்பை அள்ளி வீசுகிறார் பார்வதி. ஒரு படத்துக்கு டிக்கெட் எடுத்தா இரண்டு படங்களை இடைவேளையில்லாமல் பார்க்க வைத்த பாதிப்பைத் தரும் இயக்குநர்... (கொஞ்ச நாள்ல இவர்கிட்ட 'என் படத்தை ரசிக்கத் தெரியல யாருக்கும்'னு ஒரு அறிக்கை வரும் பாருங்களேன்!) இந்த மிகைப்படுத்தல்களைத் தாங்கிக் கொள்ளத் தயாராக இருந்தால்.. மரியானைப் பாருங்க!

நடிப்பு: தனுஷ், பார்வதி, அப்புக்குட்டி, ஜெகன், சலீம் கான் 
இசை: ஏ ஆர் ரஹ்மான் 
ஒளிப்பதிவு: மார்க் கோனிக்ஸ் 
தயாரிப்பு: ஆஸ்கர் ரவிச்சந்திரன் 
இயக்கம்: பரத் பாலா 

நன்றி : தட்ஸ் தமி‌ழ்

ரஜினி ஷங்கர் சந்திப்பு...! விலகாத மர்மம்..!


இயக்குநர் ஷங்கர் ரஜினியைச் சந்தித்துப் பேசினார் எனவும், இருவரும் அடுத்த படத்தில் இணையப் போகிறார்கள் எனவும் செய்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.


ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' தான் ரஜினி நடித்து கடைசியாக வெளிவந்த படம். வசூலில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படம் வெளிவந்து 3 ஆண்டுகள் ஆகின்றன.

அதன்பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'ராணா' படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அந்தப் படம் டிராப்பானது.

அதைத் தொடர்ந்து மகள் செளந்தர்யா இயக்கத்தில் 'கோச்சடையான்' படத்தில் நடித்தார். மோஷன் கேப்சரிங் முறையில் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.



இதுவரை 'கோச்சடையான்' படத்தின் 3 ஸ்டில்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. பாடல் வெளியீடு, டிரெய்லர் வெளியீடு குறித்து எந்தத் தகவலும் இதுவரை சொல்லப்படவில்லை.

இந்த நிலையில், ரஜினியுடன் இயக்குநர் ஷங்கர் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் நட்பு ரீதியாகச் சந்தித்தார்களா இல்லை அடுத்த படம் குறித்துப் பேசினார்களா என்பது தெரியவில்லை.

ஒருவேளை, 'கோச்சடையான்' படத்தின் டிரெய்லரை போட்டுக் காட்டுவதற்காக ரஜினியே ஷங்கரை வரச்சொல்லி இருக்கலாம் என்றும் பேச்சுக்கள் நிலவுகிறது. 

இதற்கிடையில், ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போகிறார் என்றும் தகவல் பரவியது.

ரஜினியின் படம் திரைக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்த வெற்றியைக் கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்திலா அல்லது ஷங்கரின் இயக்கத்திலா என்பதை ரஜினி தான் முடிவு செய்ய வேண்டும்.

Wednesday, July 17, 2013

சூர்யாவுக்கு அதிரடியான அடுத்த கதை..!


ரன், சண்டக்கோழி,வேட்டை என இளைய நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்த லிங்குசாமி, நடிப்பில் தங்களை அற்பணித்து முன்னணி நடிகர்களாக இருந்த அஜித், விக்ரம் நடித்த ஜி, பீமா திரைப்படங்களை வெற்றிபெறவைக்க முடியவில்லை. 





முன்னணி நடிகர்களையும் வைத்து ஹிட் கொடுக்கவேண்டும் என்ற முடிவில் சூர்யாவின் கால்ஷீட்டை வாங்கி மிகப்பிரம்மாண்டமான கமர்ஷியல் திரைப்படம் ஒன்றை துவங்கியிருக்கிறார் லிங்குசாமி.


கவுதம் மேனன் திரைப்படம் முடிந்த பிறகு லிங்குசாமியின் திரைப்படத்தில் நடிக்கவிருந்த சூர்யா, சில காரணங்களால் லிங்குசாமி திரைப்படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்டதால் தற்போது வேளச்சேரியில் தனியாக ரூம் போட்டு எவ்வித தொந்தரவுமின்றி கவனமாக திரைக்கதையை செதுக்கிவருகிறாராம்.


லிங்குசாமி வெளச்சேரியில் தனியாக ரூம் போட்டு திரைக்கதையை மெருகேற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில், தமிழ்த் திரையுலகெங்கும் அத்திரைப்படத்தின் கதை வெளியாகிவிட்டது. லிங்குசாமி திரைப்படத்தில் சூர்யா முதல் பாதியில் ஒரு மருத்துவராக நடிக்கிறார்.


மருத்துவராக இருக்கும் போது சூர்யாவுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து, வில்லன்களை பழிவாங்க ஐ.ஏ.எஸ் படித்து பிற்பாதியில் ஸ்ட்ரிக்டான போலிஸாக ‘சிங்கம்’ மாதிரி உலா வருவாராம் சூர்யா. 


சிங்கம் 2 திரைப்படத்தில் போலிஸாக நடித்து சூர்யா அடித்த அடியிலிருந்தும், கத்திப் பேசிய வசனங்களிலிருந்துமே ரசிகர்கள் வெளிவராத சமயத்தில் அடுத்த படத்திலும் சூர்யா போலிஸாக நடிப்பது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

Tuesday, July 16, 2013

வாயை மூடிக்கொண்டு இருங்கள்...!


குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது.

குளிர்காலம் வந்தது . குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குறுவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்ததோட் அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது.

அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக்குருவி மீது சாண்ம் போட்டுவிட்ட்ச் சென்றுவிட்டது.

சிட்டு குருவிக்கு மூச்சு திணறினாலும் அந்த சாண்த்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. சூட்டினாலும் , மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது.

அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையை கண்டது. சாண்த்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது.

ஓஷோ சொல்கிறார்

இந்த கதையில் மூன்று கருத்துக்களை காணலாம்.

ஒன்று ; உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டு: உன்னை சாண்த்திலிருந்து அகற்றுபவன் உன் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை

மூன்று: நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், சாண்த்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால், உன் வாயை மூடிக் கொண்டிரு.

ஓஷோ சொன்ன கதைகள்

Monday, July 15, 2013

சினிமாதனமிக்கவர்...! விஜய்யை விமர்சித்த தலைவா படத்தயாரிப்பாளர்..!


விஜய் சினிமாத்தனமில்லாதவர். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர், என்று புகழ்ந்துள்ளார் தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின். 

விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள ‘தலைவா' படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். 

சத்தியராஜ், சந்தானம், ராகிணி, உதயா, அபிமன்யுசிங், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ், மனோபாலா, சுப்பு, பஞ்சு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. அடுத்த மாதம் 9-ம் தேதி ‘தலைவா' படம் ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் தெரிவித்தார். 


அவர் கூறுகையில், "தலைவா' படம் சிறப்பாக வந்துள்ளது. காதல், காமெடி, அதிரடி ஆக்ஷன் என மெகா பொழுதுபோக்குப் படமாக தலைவா இருக்கும். 

மும்பையில் அதிக செலவில் அரங்குகள் அமைத்து 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. சண்டை காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன. 

விஜய் சினிமாத்தனம் இல்லாதவர். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர். சிட்னியில் நிறைய பேரை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து சூட்டிங் நடத்தாமல் பணத்தை விரயம் செய்ததற்காக வருத்தப்பட்டார். 

ரம்ஜான் பண்டிகையையொட்டி ‘தலைவா' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம்," என்றார்.

எம்.ஜி.ஆர்., கற்றுத் தந்த பாடம்!



சமீபத்தில், பாரதிராஜா இயக்கி, தயாரித்து வெளியிட்ட, "அன்னக்கொடி' திரைப்படத்தை தடை செய்யக் கோரி, அவர் வீட்டு முன், பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். திரைப்படம் என்பது, மக்கள், திரை அரங்குகளில் கூடி, தங்கள் கவலைகளை மறந்து ரசிக்கக் கூடிய ஒரு சாதனம். 

திரை அரங்குகள், ஜாதி வேறுபாடு இன்றி, சமரசத்துடன், எல்லா ஜாதி மதத்தை சேர்ந்தவர்களும் அமர்ந்து, படம் பார்க்கும் இடம். திரையுலகில் மன்னராக விளங்கிய, எம்.ஜி.ஆர்., இன்றைக்கும், என்றைக்கும் இனிமையாய், எத்தனை முறை பார்த்தாலும், எப்போது பார்த்தாலும், சலிப்பு தட்டாத வகையில், படங்களில் நடித்து இருப்பார். 

எந்தப் படத்திலும், ஜாதியை பற்றியோ, மதத்தைப் பற்றியோ, காட்சிகளோ, பாடல்களோ இருக்காது. பொழுது போக்கு அம்சமாக, அப்படங்கள் திகழ்ந்ததால், அவர் மறைந்தாலும், மக்கள் அவரை மறக்கவில்லை. 


ஆனால், சமீப காலமாக வந்த சில இயக்குனர்கள், ஜாதி, மதங்களை புண்படுத்தி, தன்னிச்சையாக திரைப்படம் தயாரிக்கின்றனர். தற்போது சர்ச்சைக்குள்ளான, "அன்னக்கொடி' படத்தில், இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது போலவும், கலப்புத் திருமணம் செய்வதும், வேறு ஒருவருடைய மனைவியை அழைத்து வருவது போலவும், சமூகத்திற்கு ஒவ்வாத காட்சிகளும், அருவருப்பு வசனங்களும் நிறைந்த படம். 

அது மட்டும் அல்ல... ஆங்கிலேயர் நாட்டை விட்டு போய் விட்ட நிலையில், விஜய நகர பேரரசை சேர்ந்த தெலுங்கர்கள், இன்னும், இந்த நாட்டை விட்டுப் போகவில்லை என்ற வகையில், தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில், காட்சி உள்ளது. 

சினிமாவில், தனிப்பட்டவர்களின் ஜாதி வெறியைத் திணிக்கக் கூடாது. அதனால், தமிழ் சமுதாயம் பாதிக்கப்படும். (
ஆர்.ராஜகோபால், சென்னை)

Saturday, July 13, 2013

இதற்கு அர்த்தம் இதுதானா....? அப்ப சரிங்க..!


ஒரு பெரிய பணக்காரன் ஒருவன் ஜென் துறவியை சந்தித்து, "நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை நினைவூட்டும் வகையில் ஏதாவது எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டான். 

அதற்கு அந்த மாஸ்டர் ஒரு காகிதத் துண்டை எடுத்து, அதில் "தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்" என்று எழுதிக் கொடுத்தார். 

அதைப் படித்த அவனுக்கு ஒரே கோபம் மூண்டது. 

"என்ன? நான் உங்களிடம் என்னை ஊக்குவிக்கும் வகையிலும், என் வருங்கால சந்ததியினர் அதைப் படித்து வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கேட்டால், நீங்கள் என் மனம் புண்படும் வகையில் எழுதித் தருகிறீர்களே!" என்று ஆத்திரத்துடன் கேட்டான். 

அதற்கு துறவி "ஆமாம். நானும் நீ கேட்டது போல் உன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு மகிழ்ச்சியான ஒன்றைத் தான் எழுதியுள்ளேன். எப்படியெனில், ஒரு வேளை உன் மகன் முதலில் இறந்துவிட்டால், அது ஒவ்வொருவரின் மனதிலும் பெரும் வலியை உண்டாக்கும். 

அதுவே உன் பேரன் முதலில் இறந்தால், அது தாங்க முடியாத அனுபவமாக இருக்கும். எப்படியிருந்தாலும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் வரிசையாக இறக்கப் போகிறார்கள். அது தான் வாழ்க்கைப் பற்றிய இயற்கையின் உண்மை. ஆகவே நானும் அதை, அந்த காகிதத்தில் எழுதியுள்ளேன். 

எப்படியிருப்பினும் இந்த உலகில் பிறக்கும் அனைவருக்குமே வலி நிச்சயம் இருக்கும். அதையே சந்ததியினரும் பின்பற்றுவர். ஆகவே இந்த காகிதத்தில் இருப்பது எப்போதும் அழியாததாய் இருக்கும்" என்று விளக்கினார்.

Thursday, July 11, 2013

இந்தியாவின் எதிர்காலம் யார்...?


எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு, கடந்த பத்தாண்டுகளாக, நாட்டின் பொருளாதாரம் 
பன்மடங்கு சரிவை சந்தித்துள்ளது. இதனால், விலைவாசி பன்மடங்கு கூடியுள்ளது. 1994ல், டாலருக்கு, 14 ரூபாய் என்றிருந்த ரூபாயின் மதிப்பு, தற்போது, டாலருக்கு, 60 ரூபாய், 16 காசுகள் என்ற அளவிற்கு, மாபெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. 

அதுவும், கடந்த ஆறு மாதத்தில் மட்டும், 6 ரூபாய் சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாகவே, டீசல், பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதாக, மத்திய அரசு கூறுகிறது. ஆனால், எண்ணெய் நிறுவனங்களோ, "டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பில், ஒரு ரூபாய் குறைந்தால், ஆண்டிற்கு, 9,000 கோடி ரூபாய் வீழ்ச்சி எங்களுக்கு ஏற்படுகிறது. அதனால், நாங்கள் விலையை கூட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது' 
என்கின்றன. 

நம் சுதந்திரத்திற்கு பின், நம்மை விட மோசமான நிலையில் இருந்த நாடுகள் எல்லாம், தற்போது, மாபெரும் வளர்ச்சி பெற்று வலம் வருகின்றன. ஆனால், 
நம் நாடு? 


பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்களை புரிந்தவர்கள் மீது, நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டெடுக்கும் ஸ்திரத்தன்மை இல்லாததாலும், பல லட்சம் கோடி ரூபாய், கறுப்பு பணமாய் சுவிஸ் பேங்கில் பதுக்கி இருப்பது தெரிந்தும், அவற்றை மீட்டெடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததாலும், இப்படி மாபெரும் வீழ்ச்சியை, அனைத்து நிலைகளிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. 

இவற்றை மீட்டெடுக்க, ஒரு சீரிய திறமை மிக்க தலைமை வேண்டும். 1920க்கு பின், அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. தொழில்கள் நசிந்தன. எதிர்காலமே இருண்டு கிடந்தது. அப்போது, ரூஸ்வெல்ட் வழி நடத்தி, அந்நாட்டை மீட்டார். 

இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு, வின்ஸ்டன் சர்ச்சில் தலைமை தாங்கி, வெற்றிப் பெற்றுத் தந்தார். 
"அமைதியான காலங்களில், நல்ல நிர்வாகிகள் வேண்டும்; போர்க் காலங்களில், நல்ல தலைவர்கள் வேண்டும்' என்று, ஜான் பி.கோட்டார் சொல்வார்.

அதன் படி, கடினமான போர்க் காலத்தில், தற்போது இருக்கும் நம் நாட்டுக்கு, கைப்பொம்மையாக இல்லாது, எந்த விஷயத்திலும், தன்னிச்சையாக துணிந்து, 
திறமையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும், ஒரு நல்ல தலைவர் வேண்டும். அப்போது தான் இந்தியா உருப்படும். 

Thanks : 
கவிஞர் சு.பொன் இருளாண்டி, சின்னமனூர்

Tuesday, July 9, 2013

மாணவர்களுக்காக... கேரளா போல் தமிழகத்திலும் இப்படி செய்யலாமே...!



கேரள மாநிலம் திருச்சூரில், தனியார் பஸ் நடத்துனர், பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல மறுத்ததற்காக, அவரை, மாணவர்களை இனி மேல் தவறாமல் ஏற்றிச் செல்வேன் என்று, இருநூறு முறை, "இம்போசிஷன்' எழுதச் சொல்லி, போக்குவரத்துப் போலீஸ், தண்டனை தந்ததாக குறிப்பிட்டு, இதுபோல, தமிழகத்திலும் பின்பற்றப்படுமா என்று ஒரு வாசகர் எழுதியிருந்தார்.

தமிழகத்தில், பஸ் நிறுத்துமிடத்தை விட்டு, சற்று தூரம் போய் நிறுத்துவதும், பயணிகளை ஏற்றிக் கொள்ளாமல் ஏமாற்றி, "விர்'ரென்று ஓட்டுவதும் சகஜம். அதுபோல கேரளாவில் நடக்காது. அப்படி நடந்தால், பொது மக்கள் பாடம் கற்பித்துவிடுவர். 

சமீபத்தில், விருத்தாசலம் அருகே, அரசு பஸ், அந்த சாலையில் வராமல் போனதால், தனியார் வாகனத்தில் மாணவர்கள் செல்ல,  அந்த வேன் விபத்துக்குள்ளாகி, பல மாணவர்கள் பலியாயினர். 

அதேபோல், சில மாதங்களுக்கு முன், அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த, நான்கு மாணவர்கள், நின்று கொண்டிருந்த லாரி, குறுக்கே பின்னோக்கி வந்த போது, இடித்து மாண்டனர். 

இதுபோன்ற, பல சம்பவங்கள், அவ்வப்போது நடந்து வருகின்றன. இது போன்ற விபத்துகளை தடுக்க, என்ன செய்யலாம் என்பது, பிரச்னையாகவும், கேள்விக் குறியாகவும் இருக்கிறது. இதற்கு மக்களின், மாணவர்களின், விழிப்புணர்வு அவசியம் தேவை. 



மேற்கூறிய அந்த வாசகரின் ஆலோசனையை, தமிழத்திலும் பின்பற்றலாம். மாணவர்களை, தங்கள் பிள்ளைகளைப் போல நினைத்து, ஓட்டுனரும், நடத்துனரும், கடமையாற்ற வேண்டும். இதை அவ்வப்போது நினைவுபடுத்த, அவர்கள் குடும்ப புகைப்படத்தை அவர்களின் இருப்பிடத்தில், மாட்டி வைக்கச் செய்ய வேண்டும். இவை இல்லாமல் பஸ் எடுக்கக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இதனால் விபத்துகளையும் தடுக்கலாம். 

கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பஸ்களில், ஏறும் வழி, இறங்கும் வழியில் கதவுகள் உண்டு. அவை, வலிமையான கயிற்றால் இணைக்கப்பட்டிருக்கும். தாழ்ப்பாள் உண்டு. இவற்றை அடைத்த பின் தான் பஸ் புறப்படும். 

தமிழகத்தில், தற்போது, சொகுசு பஸ் என்று சொல்லி, பல பஸ்களில் கதவுகள் இருந்தாலும், பெரும்பாலான பஸ்கள் திறந்த நிலையிலேயே உள்ளன. இதற்கு கூட்டம் மிகுதியாக இருப்பதே முக்கிய காரணம். எனவே, பஸ்களில் மிதமிஞ்சிய கூட்டத்தை சேர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

Thursday, July 4, 2013

அடுத்த வியூகம்... தடுமாறும் விஜயகாந்த்..!


2003ல், நடிகர் விஜயகாந்த், தன் ரசிகர்கள், மூன்று லட்சம் பேரை திரட்டி, தே.மு.தி.க.,வை உருவாக்கி, தொண்டர்களாக மாற்றினார். அப்போது அவருக்கு என்று ஓர் எழுச்சி இருந்தது. ஏன் எனில், 1967க்கு பின், தமிழகத்தை, மாறி மாறி திராவிடக் கட்சிகள் ஆண்டு வருவதால், அவர்கள் மீது, வெறுப்புக்குள்ளான நடுநிலையாளர்கள், ஒரு மாற்றத்தை விரும்பியதே காரணம்.

அந்த நடுநிலையாளர்கள் தான், 2006, 2011 சட்டசபைத் தேர்தல்களில், தே.மு.தி.க.,விற்கு ஓட்டு போட்டு வந்தனர்.ஆனால், விஜயகாந்தோ, மக்கள் தனக்கு அளித்த எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை, சரியாக பயன்படுத்தவில்லை. 

கட்சியின் மூத்த உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்களின் அரசியல் ஆலோசனைகளையும் சரியாக கேட்கவில்லை.

லோக்சபா தேர்தல் வரை, கூட்டணியில் இருந்து, தன் கட்சியை வளர்த்து, நல்ல எதிர்க்கட்சி தலைவராக இருந்து, மக்களுக்காக குரல் எழுப்ப வேணடியவர்,சட்டசபையில், சினிமா பாணியில் கோபமாக பேசி வெளியேறினார்.

இன்று, அவர் மனைவி பிரேமலதாவிற்கு இருக்கும் நற்பெயர் கூட, அவருக்கு இல்லை. தன் கட்சி, எம்.எல்.ஏ.,க்களைக் கூட பாதுகாத்துக் கொள்ள முடியாததால், இன்று, ஏழு, எம்.எல்.ஏ.,க்கள் கட்சியை விட்டு வெளியேறி உள்ளனர்.

வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையில் ஓர் அணியும், தி.மு.க., தலைமையில் ஓர் அணியும், தேர்தலை சந்திக்கப் போவது உறுதியாகி விட்டது. தே.மு.தி.க., வைப் பொறுத்த வரை, வருகிற லோக்சபா தேர்தலை விட, அடுத்து வர உள்ள, 2016 சட்டசபைத் தேர்தல் தான் முக்கியமானது.

காங்கிரசை நம்பியவர்கள், கரை சேர்ந்ததாக வரலாறு கிடையாது. அந்த வகையில், தே.மு.தி.க., இன்று, காங்கிரசிடம் பாடம் கற்று விட்டது. எனவே, தற்போது, விஜயகாந்த், குஜராத் முதல்வர் மோடியை சந்தித்து, வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்து, தமிழகத்தில், மூன்றாவது அணியை உருவாக்கி, அதற்கு தே.மு.தி.க., தலைமையேற்றால், நிச்சயம் அது நல்ல பலன் தரும்.அதுவே, தேசிய அரசியலில், தே.மு.தி.க.,விற்கு ஓர் அங்கீகாரம் கிடைக்க வழி வகுக்கும்.

Tuesday, July 2, 2013

விஸ்வரூபம் 2 அப்டேட்‌ஸ்


விஸ்வரூபம் படத்தின் இரண்டாவது பாகத்தை சத்தமில்லாமல் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் எடுத்து வருகிறார் கமல்ஹாசன். வெளிநாடுகளில் படப்பிடிப்பு முடிந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது.

விஸ்வரூபத்தில் பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ராகுல் போஸ் தற்போது சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். கமல்ஹாசன், ராகுல் போஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்‌ரியா, சேகர் கபூர் ஆகியோர் இரண்டாவது பாகத்திலும் இருக்கிறார்கள். சங்கர் எசன் லாய்-க்குப் பதிலாக இரண்டாவது பாகத்தில் ‌ஜிப்ரான் இசையமைக்கிறார். அதேபோல் ஒளிப்பதிவாளரையும் கமல் மாற்றியிருக்கிறார். தற்போது ஒளிப்பதிவு செய்கிறவர் ஷம்தத்.

ஆப்கானிஸ்தான் காட்சிகளை அதேபோன்ற அரங்கில் சென்னையில் படமாக்கியுள்ளனர். முக்கியமாக பதுங்குக்குழி காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

இந்த வருட இறுதியில் விஸ்வரூபம் 2 திரைக்கு வருகிறது.

Monday, July 1, 2013

ராஜ்யசபா எம்.பி. ஆகறது இதற்குதானா...?




ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்றவர், ஆறு ஆண்டு காலம் பதவி வகிக்கலாம். தொகுதி வளர்ச்சிக்காக இவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் அதிகம். 

லோக்சபா தேர்வாளர்களின் பதவி காலம், ஐந்து ஆண்டு தான். தொகுதி வளர்ச்சி நிதியும் குறைவு.லோக்சபா தேர்தலை பொறுத்தவரை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வீதி வீதியாக அலைந்து ஓட்டு கேட்பர். 

கட்சியின் தலைவர் முதல், கிளைச் செயலர் வரை, அவருக்காக, கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் ஆகியவற்றை பொருட்படுத்தாமல், மக்களிடம் காவடி எடுத்து, "அம்மா... தாயே...' என, கெஞ்சி கெஞ்சி ஓட்டு கேட்பர். 

மக்களும், தங்களுக்கு யாரைப் பிடிக்கிறதோ, அவர்களுக்கு ஓட்டளிப்பர். ராஜ்ய சபா தேர்தல் அப்படி அல்ல. நோகாமல் நுங்கு சாப்பிடுவதை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அப்படித் தான், ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெறுபவர்களும், அதிகம் அலட்டிக் கொள்ளாமல், வெற்றி பெறுவர். 

ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்களின் கட்சியின் எம்.எல்.ஏ.,க்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதால், கட்சியின் தலைவருக்கும், கட்சிக்கும், கடமைப் பட்டவராகிறார். இதனால், இவருக்கு அளிக்கப்படும், தொகுதி வளர்ச்சி நிதியை கட்சிக்கு கொடுத்தே ஆகவேண்டும். 

கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு, இ.க்யூ., பாரம் கொடுக்க வேண்டும். இது தான் இவர்களின் அதிகபட்ச கடமை.மக்கள் நலனை, இவர்களிடம் துளியும் எதிர்பார்க்க முடியாது. இதில், எவர் ஜெயித்தால் என்ன,தோற்றால் என்ன?இவர்களால், மக்களுக் கும் எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...