Monday, September 24, 2012

விஜய் நடிக்கும் துப்பாக்கி... பெயர் மாற்றம்


விஜய் நடிக்கும் துப்பாக்கியின் தலைப்பு பிரச்சினை ஒன்பதாவது முறையாக ஒத்திவைப்புக்குப் போயிருக்கிறது சென்னை நீதிமன்றத்தில்.

இந்த போராட்டத்தில் துப்பாக்கி தரப்பு சோர்ந்து போயிருக்கிறது. மீண்டும் வரும் அக்டோபர் 3-ம் தேதிக்கு வழக்கு தள்ளிப் போயிருப்பதால், நவம்பர் 13-ம் தேதி ரிலீசாகவிருக்கும் இந்தப் படம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்று கருதும் தயாரிப்புத் தரப்பு, இரு மாற்றுத் தலைப்புகளை தேர்வு செய்து வைத்துள்ளதாம்.

அதில் ஒன்று சரவெடி. தீபாவளிக்கு வரும துப்பாக்கிக்கு சரியான மாற்றுத் தலைப்பு இதுதான் என்பது ஒரு தரப்பின் அபிப்பிராயம்.

இன்னொன்று மும்பைத் தமிழன். படம் முழுக்க மும்பையில் நடப்பதால், இந்தத் தலைப்பு கதைக்கு பொருத்தமாக இருக்கும். எனவே இதையே வைக்கலாம் என்று இன்னொரு தரப்பு கூறுகிறதாம்.

அக்டோபர் 3-ம் தேதிக்கு மேலும் தடை நீடித்தால், அநேகமாக இந்த மாற்றுத் தலைப்புகளில் ஒன்றை சூட்டி, தீபாவளி களத்தில் இறக்கப் போகிறார்களாம்.

Saturday, September 15, 2012

சுந்தரபாண்டியன் - சினிமா விமர்சனம்

sd
தன் பலம், தனக்கேற்ற கதையை சரியாக தேர்வு செய்வதில் மீண்டும் ஒரு முறை ஜெயித்திருக்கிறார் சசிகுமார். அந்த வகையில் சுந்தரபாண்டியன் அவருக்கு இன்னொரு சுப்பிரமணியபுரம்.

நண்பர்களுக்குள் நெருக்கமும் சரி, பெரும்பகையும் சரி... அதன் பின்னணி காதல்தான் என்பது அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கண்டமனூர் பெரிய வீட்டுப் பையன் சசிகுமார். அவரது நண்பர்கள் பரோட்டா சூரி, இனிகோ பிரபாகரன். சசிகுமார் ஒரு பெண்ணைக் காதலிக்க, அந்தப் பெண்ணை அவர் நண்பனும் ரூட் விட, அதே பெண்ணை நண்பனின் நண்பனும் டார்கெட் பண்ண, அதில் சசிகுமார் ஜெயிக்கிறார்.

தோல்வியை ஒரு நண்பன் சகித்துக் கொள்ள, மற்றொருவனோ லட்சுமியிடம் வம்பு செய்கிறான். தொடரும் கைகலப்பில் பஸ்ஸிலிருந்து தள்ளப்பட்டு செத்துப் போகிறான். கொலைப் பழியை சசிகுமார் ஏற்று சிறை சென்று, 15 நாள் காவலுக்குப் பிறகு வெளியில் வர, காதலி கண்டு கொள்ளாமல் போகிறாள்.

இருவரும் இணைந்தார்களா என்பது மறுபாதி. இந்தப் படத்தைப் பொறுத்தவரை அந்த மறுபாதிக் கதைதான் செம த்ரில்லிங் என்பதால், திரையில் பார்த்து சசிகுமார் அண்ட் நண்பர்களுக்கு மரியாதை செய்யுங்கள்!

காதல் அரும்பும் பருவத்தில் இனி இளைஞர்கள் ரொம்ப சூதானமா நடந்துக்கணுமப்பா... என்று சொல்லவைக்கும் ஷார்ப்பான திரைக்கதை. புதிய இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரனை வாழ்த்தி வரவேற்கலாம்.

சசிகுமாரின் முகத்தில் முன்பெல்லாம் எப்போதாவது எட்டிப் பார்க்கும் செயற்கைத்தனம் கூட இதில் இல்லை. ஒரு நடிகராக இந்தப் படத்தில் நூறு சதவீதம் ஜெயித்திருக்கிறார். ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி ஒரு ரஜினி ரசிகன் நிச்சயம் இருந்தே தீருவான். அதை அழகாக நம்முன் நிறுத்தியிருக்கிறார்.

ரஜினி ரசிகராக அமர்க்களமாக அறிமுகமாவதில் தொடங்கி, நம்மைக் கொலை பண்ண வந்தது நம்ம நண்பனா இருந்தா அவனைக் காட்டிக் கொடுக்கக் கூடாதுடா என முத்திரை வசனம் சொல்வது வரை... சசிகுமார் கொடி பறக்குது!

லட்சுமி மேனனுக்கு இது முதல் படம். ஒப்பனையில்லாத அழகி. பிரகாசமான எதிர்காலம்.

இந்தப் படத்தின் Show stealer என்றால் அது சசிகுமாரின் தந்தை ரகுபதி தேவராக வரும் நரேன். லட்சுமியை பெண் கேட்கும் காட்சியில் அப்படி ஒரு கம்பீரம்.. காட்சிப்படுத்திய விதம், இடம்பெற்ற நடிகர்களின் பங்களிப்பு என எல்லா வகையிலும் அந்த 4 நிமிடக் காட்சி.. .A pure manly show!

தென்னவன் இன்னொரு மிகச் சிறந்த நடிகர். ஒரு பெண்ணைப் பெற்றவனின் ஆத்திரம், அக்கறை, வேதனை, பாசம் அனைத்தையும் நிஜமாகக் காட்டியிருக்கிறார்.

பரோட்டா சூரியின் ராஜ்ஜியம்தான் முதல் பாதியில். அவரது ஒன்லைனர்கள் நிச்சயம் நண்பர்களின் உதடுகளில் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இருக்கும்.

இனிகோ பிரபாரகரன், விஜய் சேதுபதி, சவுந்தரராஜன், அந்த பாட்டிகள், சித்தி, அத்தைப் பெண் என அத்தனை பேரும் நடிகர்களாகத் தெரியாமல், கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள்.

அப்புக்குட்டி கிட்டத்தட்ட வில்லன். கொஞ்சம் வெறுப்பைச் சம்பாதிக்கும் ரோல்தான். நன்றாகவே செய்திருக்கிறார்.


ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு பெரிய ப்ளஸ். பாடல் காட்சிகளில் பாலுமகேந்திரா சொன்னதைத்தான் திரும்ப சொல்ல வேண்டும்! அந்த முள்காட்டு பயங்கரத்தை முதுகு தண்டு சில்லிடும் அளவுக்கு சொன்னதில் இயக்குநருக்கு இணையான பங்கு, காமிராக்காரருக்கும்!

படத்தின் ஆகப் பெரிய மைனஸ் இசை. இசையமைப்பாளர் ராஜாவின் ரசிகரோ அல்லது ராஜா இசையால் பெரிதாக பாதிக்கப்பட்டவரோ தெரியவில்லை. காதல் வந்து பொய்யாக, ரெக்கை முளைத்தேன், நெஞ்சுக்குள்ளே... என அவர் போட்ட பாடல்கள் திரையில் வரும்போது, நமக்கு ராஜாவின் ஏதோ மோகம், ஒருகிளி உருகுது, அம்மம்மா (தாலாட்டுப் பாடவா...), பாடல்கள்தான் காதுகளில் கேட்கின்றன!!

இன்ஸ்பிரேஷனுக்கும் இமிடேஷனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இரண்டாவது படத்திலேயே காணாமல் போகும் இசையமைப்பாளராக ரகுநந்தன் மாறாமலிருக்கக் கடவது!

சசிகுமாரின் பலம், பலவீனம் புரிந்து திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ் ஆர் பிரபாகரனின், முதல் முயற்சியே சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. வெற்றி தொடர வாழ்த்துகள்!

நடிப்பு: எம் சசிகுமார், லட்சுமிமேனன், நரேன், சூரி, தென்னவன், அப்புக்குட்டி, இனிகோ பிரபாகரன், விஜய் சேதுபதி, சவுந்தரராஜா
இசை: என் ஆர் ரகுநந்தன்
ஒளிப்பதிவு: ச பிரேம்குமார்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
தயாரிப்பு: எம் சசிகுமார்
எழுத்து-இயக்கம்: எஸ் ஆர் பிரபாகரன் (Thanks Thats Tamil)

Wednesday, September 12, 2012

மறக்க முடியாத ரஜினியின் பஞ்ச் டயலாக்ஸ்!!!


திரையுலகில் "சூப்பர் ஸ்டார்" என்றாலே அனைவரது நினைவிற்கும் வருபவர் "ரஜினிகாந்த்" தான். அவர்கள் தென்னிந்தியாவில் மட்டும் புகழ் பெற்று விளங்கவில்லை. உலகம் முழுவதும் அனைவரது மனதிலும் நீங்கா இடத்தைப் பெற்று, அனைவரது வீட்டிலும் ஒருவராக வாழ்ந்து வருகிறார். 

இத்தகைய புகழ் பெற்ற ரஜினிகாந்த், தன் ஸ்டைலால் மட்டும் அனைவரையும் கவரவில்லை, பஞ்ச் டயலாக்குகள் மூலமும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடியதை, தன் படங்களின் வழியாக உண்மையாக வெளிகாட்டி வருகிறார். 

இவரது பெயரைக் கேட்டாலே அனைவரின் மனதிலும் ஒரு குதூகலம் பிறக்கும். இத்தகைய சூப்பர் ஸ்டார் ரஜினியின், சிறந்த, இன்றும் அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கும், மறக்க முடியாத பஞ்ச் டயலாக்குகள் சிலவற்றை படித்து பாருங்களேன்...



* ரஜினியின் சூப்பர் ஹிட் படமான "பாட்ஷா" படத்தில் நிறைய டயலாக்குகள், மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதில் "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற டயலாக், இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளது.

* அதிலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிவந்த சிவாஜி படத்தில் வரும் டயலாக்குகளான "பேரை கேட்டாலே, சும்மா அதிருதுல்ல...", "பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் எப்பவுமே சிங்கிளா தான் வரும்" போன்றவை சிறந்த பஞ்ச் டயலாக்காக உள்ளது.

* ரஜினி அவர்கள் சிவாஜியுடன் நடித்த கடைசி படமான "படையப்பா"-வில் கூட வாழ்க்கையின் உண்மையை வெளிப்படுத்தும் டயலாக்கை சொல்லியுள்ளார். அதுதான் "அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல".

அதுமட்டுமல்லாமல், இன்னும் சில சூப்பர் மற்றும் சிந்திக்க வைக்கும் உண்மை டயலாக்குகளான...

* "எப்பவும் பொன், பெண், புகழ் பின்னாடி ஆம்பளை போகக் கூடாது. ஆம்பளைங்க பின்னாடி தான் இதெல்லாம் வரணும்."

* "நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்."

* "நம்ம வாழ்க்கை நம்ம கையில தான் இருக்கு."

* "நல்லவங்களை ஆண்டவன் நிறைய சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களை சோதிக்க மாட்டான், ஆனா கைவிட்டுருவான்."

* "கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது."

* "வாழ்க்கையில பயம் இருக்கலாம். ஆனால் பயமே வாழ்க்கையாகிடக் கூடாது."

* "கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்குறது எதுவும் நிலைக்காது."

இவை மட்டுமல்ல இன்னும் இருக்கின்றன. மேலும் ரஜினி அவர்களின் பஞ்ச் டயலாக்குகளுக்கு அளவே இல்லை. அந்த அளவு அவர் தன் ஸ்டைலோடு, மக்களையும் சிந்திக்க வைத்துள்ளார். என்ன நண்பர்களே! உங்களுக்கு பிடித்த டயலாக் என்னன்னு, எங்களோடயும் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

Tuesday, September 11, 2012

ரஜினி படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் பவர் ஸ்டார்...


ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தின் ரீமேக்கை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது வேந்தர் மூவிஸ். அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது.

மிர்ச்சி சிவா, பிரகாஷ் ராஜ், இஷா தல்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். பத்ரி இயக்கி வருகிறார்.

ரஜினி வேடத்தில் சிவா, தேங்காய் சீனிவாசன் வேடத்தில் பிரகாஷ்ராஜ், மாதவி வேடத்தில் இஷா தல்வார், செளகார் ஜானகி வேடத்தில் கோவை சரளா என்று அனைவரும் எந்த வேடத்தில் நடிக்கிறார்கள் என்று உறுதி செய்தார்கள்.

தற்போது நாகேஷ் வேடத்தில் நடிக்க இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. 'தில்லு முல்லு' படத்தில் ரஜினியை மீசையோடு ஒரு வேடம், மீசையில்லாமல் ஒரு வேடம் என்று நடிக்க சொல்வார் நாகேஷ். அவருடைய தூண்டுதலின் பேரிலேயே ரஜினி இரு வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார்.

நாகேஷ் நடித்த முக்கிய வேடத்தில் பவர் ஸ்டார் நடிக்க இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Monday, September 10, 2012

ஷங்கர் படத்தில் நடிப்பதோடு, பாடகர் ஆகிறார் நம்ம பவர் ஸ்டார்



ஒரு காலத்தில் நக்கல் நையாண்டிப் பொருளாகப் பார்க்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன், இன்று நிஜமாகவே 'பவர்' கூடி வருகிறார்.

ஷங்கர் படம், பாலா படம், சந்தானத்துடன் ஒரு படம் என ஏகப்பட்ட வாய்ப்புகள், கூடவே சொந்தமாக ஏழெட்டு பட தயாரிப்புகள் என உடம்பெல்லாம் மச்சம் கொண்ட அதிர்ஷ்ட பார்ட்டியாகிவிட்டார்.

இப்போது பாடகராகவும் அவதாரமெடுத்துள்ளார் சீனிவாசன்.

அவரது சொந்தப் படமான இந்திரசேனாவுக்காக அவரே சொந்தக் குரலில் பாடியுள்ளாராம். இந்தப் பாடலை விரைவில் யு ட்யூபில் ரிலீஸ் செய்யும் திட்டத்திலிருக்கிறார் சீனிவாசன்.

இன்றைய சூழலில் பல முக்கிய படங்கள் யு ட்யூபை விளம்பர சாதனமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. எனவே தானும் அந்த யுத்தியைக் கையாளுவதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

யு ட்யூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூகவலைத் தளங்களில் சீனிவாசனுக்கென பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் டிவிட்டருக்கு தடை விதிக்கிறது மத்திய அரசு?



 Govt Was Planning Ban Twitter 8 States
தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட 8 மாநிலங்களில் டிவிட்டர் இணையளதளத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

வடகிழக்கு மாநில மக்கள் இடையே கடந்த மாதம் வதந்தியை கிளப்பும் வகையில் தகவல்களை வெளியிட்டதாக கூறி இந்த நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் கடந்த மாதம் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

கர்நாடகா, தமிழ்நாடு, அஸ்ஸாம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்பட 8 மாநிலங்களில் இந்த வதந்தி கிளப்பப்பட்டதாக மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. இதனையடுத்து இந்த மாநிலங்களில் டிவிட்டர் இணையதளத்தை எப்படி முடக்குவது பற்றி தொழில்நுட்ப வல்லுனர்களிடம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆலோசனை கேட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி இத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலத்தவர் இடையே வதந்தியை கிளப்பியதாக இதுவரை 310 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

Friday, September 7, 2012

ரஜினி விரும்பிப் படித்த மொழிபெயர்ப்புப் புத்தகம்!



சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி 3டி-யை ஒரு புதிய படத்துக்கு நிகரான ஏற்பாடுகளுடன் வெளியிடத் தயாராகிறது ஏவிஎம் நிறுவனம்.

இந்தப் படத்தை ஜப்பானில் அதிக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறார்கள். படத்தின் விளம்பரத்துக்காக ஹீரோயின் ஸ்ரேயாவை ஜப்பானுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் இருக்கிறதாம் தயாரிப்பாளர்களுக்கு. இதை ஸ்ரேயாவே பேட்டிகளில் கூறிவருகிறார்.

சமீபத்திய பேட்டியில், “5 ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தாலும், இப்போது பார்த்தாலும் புத்தம் புதிதாகவே இருக்கும். மீண்டும் மீண்டும்மக்கள் பார்க்க விரும்பும் படம் சிவாஜி. இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது,” என்றார்.

ரஜினி விரும்பிப் படித்த மொழிபெயர்ப்புப் புத்தகம்!



The Legend of the Holy Drinker – இது ஆஸ்திரிய எழுத்தாளர் ஜோசப் ரோத் எழுதிய ஆங்கில நாவல். இதை தமிழில் புனிதமான குடிகாரன் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்திருந்தார் சுரா.

இந்த நூல்குறித்து சுரா எழுதியுள்ளது:

“அதிர்ஷ்டம் பல தடவைகள் வந்து ஒரு மனிதனின் கதவைத் தட்டிக் கொண்டே
இருக்கும். அதை அவன் அந்தச் சமயத்தில் கவனமாக இருந்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

கவனமாக இல்லாமல் போய்விட்டால், இந்த புதினத்தின் கதாநாயகனான ஆண்ட்ரியாசின் நிலைதான் அவனுக்கும். இது கதை அல்ல- வாசிப்பவர்களுக்கு பாடமும் கூட. சில வருடங்களுக்கு முன்பு, நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னுடைய இந்த மொழி பெயர்ப்பு நூலை முழுமையாக வாசித்து, மிகவும் ஈர்க்கப்பட்டார்!”

-Thanks என்வழி ஸ்பெஷல்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...