Friday, December 30, 2011

2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்... மங்காத்தாவுக்கு முதலிடம்!


2011-ம் ஆண்டு சினிமா உலகத்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. 

2010-ம் ஆண்டு வெளியான ரஜினியின் எந்திரன் தாக்கமே 2011 முதல் காலாண்டு வரை பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்தது. 

இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலித்து வாய் பிளக்க வைத்துவிட்டதால், அதன் பிறகு வெளியான பல நடிகர்களின் படங்களுடைய வர்த்தக எல்லை, அளவு பற்றிய எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்தது. 

ஆனால் ஒரு படம் கூட அதில் கால்வாசியைக் கூட தொடவில்லை என்பதுதான் பரிதாபம். ஆனால் விளம்பரங்களில் எந்திரனுக்கு நிகராக அல்லது எந்திரனுக்கு அடுத்து என போட்டு பீற்றிக் கொண்ட காமெடி அரங்கேறியது!

ஹாலிவுட் போல உண்மையான வசூல் விவரங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள கோலிவுட்டில் வழியில்லை. நஷ்டம் என்றாலும் அதை கவுரமாக லாபம் அல்லது சாதனை என்று கூறும் போக்கு, வீம்புக்காக மகாலட்சுமி அல்லது கோபிகிருஷ்ணாவில் 250 நாட்கள் ஓட்டிக் காட்டும் வழக்கமும் இங்கு தொடர்வது.

இதையெல்லாம் தாண்டி, பளிச்சென்று வெற்றிப் படங்களாக தெரிந்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.

1. மங்காத்தா

அஜீத் - அர்ஜுன் - த்ரிஷா - லட்சுமிராய் - ப்ரேம்ஜி என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் கடந்த ஆண்டின் பெரிய வெற்றிப்படம் எனலாம். கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்கு மேல் வர்த்தகமான ஒரே படம் மங்காத்தா. வசூல் என்று பார்த்தால் ரூ 130 கோடி என்று கூறப்பட்டது. 

ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற, எந்த ஆதாரமும் தரப்படாமல் தயாரிப்பாளரால் சொல்லப்பட்ட விவரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அஏஜீத், யுவன் சங்கர் ராஜா, எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் அவற்றைக் கவனிக்கவிடாமல் பார்த்துக் கொண்ட வெங்கட் பிரபுவின் இயக்கம். 

2. காஞ்சனா

சின்ன பட்ஜெட்... மிகப் பெரிய லாபம் என்ற வகையில் தமிழ் - தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்த படம் காஞ்சனா. பெரிய ஸ்டார் வேல்யூ, செட்டிங்குகள், செலவுகள் எதுவும் இல்லாமல், இன்ஸ்டன்டாக ஜெயித்த பேய்ப் படம் இது. ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர் என மீண்டும் இதில் நிரூபித்திருந்தார். 

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், நகைச்சுவை மற்றும் அமானுஷ்ய காட்சிகளை இயல்பாக, சரியான விகிதத்தில் அமைத்திருந்தது. குறிப்பாக கோவை சரளா!

3 கோடி செலவு, ரூ 30 கோடிக்கு மேல் லாபம், பிற மொழி உரிமையாக மட்டுமே பல கோடிகளைப் பெற்றது என, காஞ்சனா ஒரு உண்மையான 'ப்ளாக்பஸ்டர்' என்றால் மிகையல்ல.

3. எங்கேயும் எப்போதும்

எதிர்பாராமல் ஜாக்பாட் அடிப்பது என்பார்களே, அது இந்தப் படத்துக்குப் பொருந்தும். புதிய இயக்குநர், பெரிதாக மார்க்கெட் இல்லாத நடிகர்கள் என சாதாரணமாக வந்த இந்தப் படம், ஏ ஆர் முருகதாஸ் - ஸ்டார் பாக்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் முக்கியத்துவம் பெற்றது. 

அந்த மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவு கதை-திரைக்கதை வித்தியாசமாக அமைந்ததால், நல்ல வெற்றியைப் பெற்றது படம். மிகக் குறைந்த முதலீட்டில் வெளியாக, பெரிய லாபத்தைப் பெற்ற இந்தப் படம், நூறாவது நாளையும் தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

4. கோ

ஜீவா - கார்த்திகா நடிப்பில் வெளியான படம். சொல்லப் போனால், இருவருக்குமே லைஃப் கொடுத்த படம் இது. பத்திரிகை உலகை அடிப்படையாக வைத்து கே வி ஆனந்த் இயக்கிய இந்தப் படத்திலும் நிறைய ஓட்டைகள். ஆனால், பரபரவென நகர்ந்த காட்சிகளால், அந்த ஓட்டைகளை கண்டுகொள்ளாமல் ரசித்தனர் மக்கள். 

படத்தின் பெரிய பலம் இயக்குநர் கே வி ஆனந்த், ஹீரோ ஜீவா. ரொம்ப அநாயாசமாக தனது பாத்திரத்தை கையாண்டிருந்தார் ஜீவா. 

5. தெய்வத் திருமகள்

விக்ரம் - அனுஷ்கா - சந்தானம் - அமலா நடித்திருந்த இந்தப் படம் ஏ எல் விஜய்யின் இன்னுமொரு வெற்றிப் படம். ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்தான் என்றாலும், விக்ரம் நடிப்பில் அதை மக்கள் மறந்தே போனார்கள்.

விக்ரமைத் தாண்டி படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானம், அனுஷ்கா. அப்புறம் அந்த அழகான குழந்தை பேபி சாரா. 

6. 7ஆம் அறிவு

இந்த ஆண்டில் பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக வெளியானது 7 ஆம் அறிவு. காரணம், ரமணா, கஜினி தந்த ஏ ஆர் முருகதாஸ் என்ற திறமையான இளைஞர் மீது தமிழ் ரசிகர்கள் வைத்திருந்த மரியாதை ப்ளஸ் நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை முதல் முறையாக இந்தப் படத்தில் தோற்கடிக்கப்பட்டது. 

படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் கொஞ்சமல்ல. ஆனால் இதையெல்லாம் தாண்டி தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் புண்ணியத்தில் இந்தப் படத்துக்கு ஏக விளம்பரங்கள். அந்த விளம்பரங்களின் தயவிலேயே படமும் ஓரளவு தாக்குப் பிடித்துவிட்டது. வசூலைப் பொருத்தவரை தயாரிப்பாளர் திருப்தி. 2011 ஹிட் படங்களில் 7-ஆம் அறிவும் இடம்பெற்றுவிட்டது.

7. வேலாயுதம்

தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த விஜய்க்கு, காவலன் சின்ன ஆறுதலைக் கொடுத்ததென்றால், வேலாயுதம் பெரிய நிம்மதியைக் கொடுத்தது எனலாம். படம் ஏற்கெனவே வந்த திருப்பாச்சியின் உல்டா, சுமார்தான் என்றாலும், சந்தானம், ஹன்ஸிகா, ஜெனிலியா என திறமையான கலைஞர்களின் பங்களிப்பால் ரசிகர்களை கவர்ந்தது. நல்ல வசூல். 

8. அவன் இவன்

இந்தப் பட்டியலில் அவன் இவனா... அது ஓடவே இல்லையே என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். அந்தப் படத்தின் வெற்றி ஓடிய நாள் கணக்கில் இல்லை. வசூல் கணக்கில்தான் இருக்கிறது!

விஷாலுக்கு நல்ல பெயர், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு நல்ல லாபம், குறிப்பாக அதன் தெலுங்கு பதிப்பு மட்டுமே ரூ 17 கோடியை வசூலித்ததாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையான இழப்பு பாலாவுக்கு மட்டும்தான். பணமல்ல, இத்தனை படங்களில் அவர் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர்!

9. காவலன்

விஜய்யின் 6 தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த படம் காவலன். சுமாரான வெற்றிதான் என்றாலும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு லாபத்தைத் தந்தது இந்தப் படம். வடிவேலுதான் படத்தின் பெரிய ப்ளஸ். ரொம்ப நாளைக்குப் பிறகு விஜய் இந்தப் படத்தில் 'நடித்திருந்தது' குறிப்பிடத்தக்கது!

10. ஆடுகளம்

தனுஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். மேலும் பல தேசிய விருதுகளையும் வென்ற இந்தப் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக வெளியானது (எந்த அடிப்படையில் இந்த விருதுகள் தரப்பட்டன என்பதுதான் இதுவரை யாருக்கும் புரியாத புதிர். பாலு மகேந்திராவைத்தான் கேட்க வேண்டும்!!). சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்கள் இந்தப் படத்தை வசூல் ரீதியாக சுமாரான வெற்றி பெற உதவின!

Tuesday, December 27, 2011

2011-ல் வெளிவந்த தமிழ்படங்கள் பட்டியல்



2011 -ல் நேரடியாகவும், மொழிமாற்று படங்களாகவும் 165 திரைப்படங்கள் வெளிவந்தன.

2011 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
  1. கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்
  2. தம்பி வெட்டோத்தி சுந்தரம்
  3. வித்தகன்
  4. கருவறைப் பூக்கள்
  5. மயக்கம் என்ன
  6. நா சிவனாகிறேன்
  7. மருதவேலு
  8. காதலர்கதை
  9. ஒத்திகை
  10. பாலை
  11. தமிழ்தேசம்
  12. சிவப்பு சாமி
  13. சொல்லித்தரவா
  14. தெய்வத் திருமகள்
  15. போட்டாபோட்டி
  16. வேங்கை
  17. ஆடுகளம்
  18. ஆடு புலி
  19. அழகர்சாமியின் குதிரை
  20. அவன் இவன்
  21. காவலன்
  22. கண்டேன்
  23. நஞ்சுபுரம்
  24. சீடன்
  25. புலிவேசம்
  26. பதினாறு
  27. பொன்னர் சங்கர்
  28. மங்காத்தா
  29. சிறுத்தை
  30. சிங்கம் புலி
  31. வானம்
  32. வெப்பம்
  33. இளைஞன்
  34. வாடா போடா நண்பர்கள்
  35. யுத்தம் செய்
  36. தூங்கா நகரம்
  37. பயணம்
  38. நந்தி
  39. வர்மம்
  40. தம்பிக்கோட்டை
  41. இது காதல் உதிரும் காலம்
  42. காதலர் குடியிருப்பு
  43. தப்பு
  44. நடுநிசி நாய்கள்
  45. ஆரானின் காவல்
  46. மார்கழி 16
  47. அன்வர்
  48. அய்யன்
  49. பவாநி ஜ. பி. எஸ்
  50. ஜவர்
  51. முத்துக்கு முத்தாக
  52. அவர்களும் இவர்களும்
  53. மின்சாரம்
  54. லத்திகா
  55. படைசூழ
  56. குள்ளநரிக்கூட்டம்
  57. சிங்கையில் குருஷேத்திரம்
  58. சட்டப்படி குற்றம்
  59. குமரா
  60. அப்பாவி
  61. தென்காசி பக்கத்துல
  62. மாப்பிள்ள
  63. விகடகவி
  64. கோ
  65. காதல் மெய்பட
  66. பூவா தலையா
  67. மாப்பிள்ளை
  68. எங்கேயும் காதல்
  69. பாசக்கார நண்பர்கள்
  70. அழகர்சாமியின் குதிரை
  71. இவன் சத்திரியன்
  72. நர்த்தகி
  73. இதயத்தில் ஒருவன்
  74. சுட்டும் விழி சுடரே
  75. கண்டேன்
  76. மாவீரன்
  77. சபாஷ் சரியான போட்டி
  78. மைதானம்
  79. எத்தன்
  80. ஆண்மை தவறேல்
  81. ஒரு சந்திப்பில்
  82. ஆரண்ய காண்டம்
  83. ஆசை படுகிறேன்
  84. சாந்தி
  85. எதிர்மறை
  86. அவன் இவன்
  87. உதயன்
  88. பிள்ளையார் தெரு கடைசி வீடு
  89. 180
  90. தேநீர் விடுதி
  91. அரும்பு மீசை குறும்புப் பார்வை
  92. கருங்காலி
  93. காஞ்சனா
  94. போடிநாயக்கனூர் கணேஷன்
  95. வெப்பம்
  96. மார்க்கண்டேயன்
  97. சிங்கக்கோட்டை
  98. ராமநாதபுரம்
  99. போட்டாபோட்டி
  100. டூ
  101. சகாக்கள்
  102. சங்கரன் கோவில்
  103. கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
  104. உயர்திரு 420
  105. சுசி அப்படித்தான்
  106. நானே என்னுள் இல்லை
  107. ரௌத்திரம்
  108. திருமங்கலம் பேருந்து நிலையம்
  109. பரிமலா திரையரங்கம்
  110. முதல் இடம்
  111. எந் உள்ளம் உன்னைத் தேடுதே
  112. வெங்காயம்
  113. மிட்டாய்
  114. மெய்யல்ல பொய்யல்ல
  115. கல்லூளி மங்கன்
  116. மெய்யல்ல பொய்யல்ல
  117. யுவன் யுவதி
  118. அகராதி
  119. மங்காத்தா
  120. மாசி
  121. புலிவேஷம்
  122. காவல்துறை
  123. அம்மு கொலை வழக்கு
  124. மேதை
  125. உன் வசமானேன்
  126. ஆயுதப் போராட்டம்
  127. மதிகெட்டான் சாலை
  128. பத்ரா
  129. காசேதான் கடவுளடா
  130. இளவரசி
  131. சே. கூடலூர்
  132. எங்கேயும் எப்போதும்
  133. வந்தான் வென்றான்
  134. நாம் ஒருவர்
  135. ஆயிரம் விளக்கு
  136. அடுத்தது
  137. வெடி
  138. முரண்
  139. வேலூர் மாவட்டம்
  140. ரா ரா
  141. வருடங்கள் 20
  142. வர்ணம்
  143. உயிரின் எடை 21 கிராம்
  144. கீழ்த்தெரு கிச்சா
  145. காதல் அல்ல அதையும் தாண்டி
  146. அன்புள்ள கமல்
  147. மை
  148. காதல் கொண்ட மனசு
  149. சதுரங்கம்
  150. ரா 1
  151. ஏழாம் அறிவு
  152. வேலாயுதம்
  153. போராளி
  154. குருசாமி
  155. வெண்மணி
  156. ஒஸ்தி
  157. நீயே என் காதலி
  158. யுவன்
  159. மம்பட்டியான்
  160. மௌன குரு
  161. உச்சிதனை முகர்ந்தால்
  162. பாளை சிறைச்சாலை
  163. இந்திர சேனா
  164. விண்
  165. காதலுக்காக போராட்டம்

Monday, December 26, 2011

நாட்டைத் துண்டாடும் அரசியல்வாதிகள்...! மௌனமாய் உடைப்படும் ஒற்றுமை...


"ஊரு ரெண்டு பட்டா, கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' இது பழமொழி. "ஊரு ரெண்டு பட்டா, அரசியல்வாதிக்கு ஆதாயம்' இது புதுமொழி. தொல்லை தரும் முல்லைப் பெரியாறு பிரச்னை, அரசியல்வாதிகள் பலரது வெறும் வாய்க்கு கிடைத்த அவல். "சந்துலே சிந்து பாடற மாதிரி' திராவிடர் கழகத்தினர் கோவிலையும் சாடுவதற்கு ஒரு வாய்ப்பு. 

தேனியில், வைகோ கூட்டத்தில் பேசிய கோவை ராமகிருஷ்ணன், "கேரள கோவில்களுக்குச் செல்வதை தவிர்த்து, தமிழக கோவில்களுக்குச் செல்லுங்கள். அரிசியைக் கூட சுமந்து சென்று, ஏன் கேரளாவுக்கு காணிக்கையாக்குகிறீர்கள்?' என்று கூறுகிறார். வேறு சிலர், பழனி மற்றும் மதுரை கோவில்களுக்குச் செல்லும் படி ஆலோசனை கூறுகின்றனர். 

அய்யப்ப சாமிக்கு ஊரு தோறும், தமிழகத்திலேயே கோவில் கட்டி கும்பிடச் சொல்கிறார் விஜயகாந்த். இவர்கள் கூறுவது, பிரச்னைக்குத் தீர்வாகத் தெரியவில்லை. புது பிரச்னைகளுக்கு வித்திடுவதாகவே தெரிகிறது. இரண்டு பேர் சண்டையிடும் போது, அவர்களுக்குள் சமாதானம் செய்து வைக்க முயற்சிப்பதை விடுத்து, மேலும் பல ஆயுதங்கள் கொடுத்து, "இன்னும் நல்லா அடிச்சிக்கங்கடா' என சொல்வது போலுள்ளது, இந்த அரசியல்வாதிகள் செயல். 

தமிழகத்திலுள்ளவன் பழனி, மதுரை கோவில்களுக்கும், ஆந்திராவிலுள்ளவன் திருப்பதிக்கும், கேரள மக்கள் சபரிமலை மற்றும் குருவாயூர் கோவிலுக்கும், மகாராஷ்டிர மக்கள் மகாலெட்சுமி கோவிலுக்கும், கர்நாடக அன்பர்கள் கொல்லூர், உடுப்பி கோவில்களுக்கும் மட்டும் செல்ல முடியும் என்ற நிலைமை வந்தால், இந்திய ஒருமைப்பாடு என்பது வெறும் கேலிக்கூத்தாகும். 

புண்ணியத் தலமான காசி வட மாநிலத்திலும், மற்றொரு புண்ணியத் தலமாம் ராமேஸ்வரம் தமிழகத்திலும் உள்ளன. காசி தரிசனம் முடித்து, ராமேஸ்வரம் சென்று வந்தால் தான், புனிதச் சுற்றுலா முடிவடைந்ததாய் பொருள். அப்படியிருக்க, மாநிலங்களை தொகுதிப் பங்கீடு செய்து கொண்டால், ஆன்மிக அன்பர்களின் நிலை என்னவாகும்? 

காசிக்குப் போகக் கூட விசா, பாஸ்போர்ட் தேவைப்படும் படியல்லவோ நிலைமை மாறிவிடும். இது தேவையா? கோவில், சாமி, பக்தர்கள், புனிதப் பயணம், காணிக்கை, விரதம் ஆகியவற்றை, அரசியல்வாதிகள் பகடைக் காயாய் மாற்ற வேண்டாம்.

Monday, December 19, 2011

பிரபல பெண்பதிவரிடம் பல்பு வாங்கிய சிபி செந்தில்குமார்...


பதிவுலகில் எப்போதும் பரபரப்பாக பேசப்படுபவர் அட்ராசக்க சிபி செந்தில் குமார் இவருக்கு வேலை சினிமா விமர்சனம் எழுதுவது  அதற்கடுத்து காமெடி கும்மி என்ற பெயரில் இருக்கிற பதிவர்களை போட்டு கலாய்ப்பது தான் இவருக்கு வேலை...

இதைவிட்டு இன்னும் வேற ஏதாவது சொன்ன பயபுள்ளைக்கு கோவம் வரும் நான் மேட்ருக்கு வந்துடுறேன்.

கடந்தவாரம் அவரோட பிளாக்கில் இவர் போட்ட பதிவுதான்


பிரபல பதிவர்கள் சுயம்வரத்தில் செய்த சலம்பல்கள் காமெடி கலாட்டா

இந்த பதிவுல பிரபல பதிவர்கள் சுயம்வரம் சென்று அங்கு மாட்டை அடக்க சொல்லியிருந்தா என்ன பண்ணுவாங்க என்ற கருத்தை மையமா வச்சி ஒரு பதிவு போட்டிருந்தாரு.

அந்த பதிவுல நம்ம மனோ அண்ணாச்சி, விக்கி உலகம் விக்கி, தமிழ்வாசி பிரகாஷ்,  சூர்ய ஜீவா, ஐ.ரா ரமேஷ்பாபு, போகுலத்தில் சூரியன் வெங்கட், நல்லநேரம் சதீஷ், சிரிப்பு போலீஸ் ரமேஷ் ஆகியோர் சுயம்வரத்தில் கலந்துக்கொண்டு மாடுபிடிச்சா எப்படியிருக்கும்ன்னு நல்ல அவருக்கே உரிய பாணியில் நல்ல நகைச்சுவையுடன் சொல்லியிருந்தார்.

அந்த பதிவு கமாண்ட்டுல நம்ம காணாமல் போன கனவுகள் ராஜி அக்கா வந்து போட்டாங்க பாருங்க ஒரு கமாண்டு....


எல்லோரையும் சிபி கலாய்ச்சா, சிபியை இவங்க கலாய்ச்சிட்டாங்க...

அந்த கமாண்ஸ்ல சிபி சுயம்வரத்தில் கலந்துக்கொண்டு மாட்டை அடக்க சொன்னால் எப்படியிருக்கும் என்று போட்டிருந்தார்கள்...

/////////
மாட்டை அடக்க நீளும் வரிசையில் நின்னுட்டு இருந்த சிபி, பொண்ணோட அப்பாக்கிட வரார்...,
சிபி: சார், இன்னிக்கு வெள்ளிக்கிழமை
மாமனார்: அதுக்கு என்ன இப்போ,
சிபி: இன்ன்னிக்கு புதுப்படம் 4 ரிலீஸ். நாலு படத்தையும் பார்த்து விமர்சனம் போடனும்.அதுக்கு என்னை முதல்ல அனுப்பினா நான் மாட்டை அடக்கிட்டு போயிட்டு சிமர்சனம்லாம் போட்டுட்டு வருவேன்.
மாமனார்: ஏம்பா, ஒருவேளை நீ மாட்டை அடக்கிட்டால் எப்போ கல்யாணம்?
சிபி: நாளைக்கும் நான் ரெண்டு போஸ்ட் போடனும். அதுக்கு டைப் பண்ணனும், படம் இணைக்கனும், மொய் வைக்கனும். எனக்கு நிறைய வேலைலாம் இருக்கு. சோ ஞாயிற்று கிழமை கல்யாணத்தை வச்சுக்கலாம்.
பொண்ணு: கிர்ர்ர்ர்ர்ர் டமால்
///////////

எனகருத்திட்டு அனைவரையும் பரவசப்படுத்தினார்.

Thursday, December 15, 2011

பதிவுலகிற்கு விடிவு வந்துவிட்டது...!


2003-ம் ஆண்டு முதல் தமிழ் வலைப்பூக்களுக்கு வாசல் திறந்து வசந்தத்தை காட்டியது கூகுள் நிறுவனம். 2004 ம் ஆண்டு முதல் விஸ்வரூபம் எடுத்து வந்த தமிழ் வலைப்பூக்கள் நூற்றுக்கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் மாறியது. 

புதிய புதிய பதிவர்கள் வந்து தன்னுடைய படைப்புகளையும், தன்னுடைய ஆக்கங்களையும் இந்த வலைப்பூக்கள் மூலமாக உலகம் முழுவதும் பரவவிடப்பட்டது.

அடுத்தக்கட்டத்தில், தமிழ்10, இண்டிலி, தமிழ்மணம், உலவு, தமிழ்வெளி போன்ற திரட்டிகள் வந்து தமிழ் வலைப்பூக்களின் வாசகர்களை அதிக அளவில் ஈர்த்தது. இதனால் வலைப்பதிவர்களும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் எழுத ஆரம்பித்தார்கள். பதிவுலகம் பரபரப்பாக போய்க்கொண்டிருந்தது.

ஆனால் சில ஆண்டுகளாக கூகுள் பஸ் வந்தபிறகு அதன் வசதியை காரணமாக கொண்டு பிளாக்கில் எழுதுபவர்கள் அப்படியே கூகுள் பஸ்க்கு சென்று விட்டனர். இதனால் பதிவு எழுதும் பதிவர்களின் எண்ணிக்கையும், பதிவுகளின் எண்ணிக்கையும் குறைந்தது.

கூகுள் நிறுவனம் கூகுள் +  என்ற சமூக வலைதளத்தை பேஸ்புக்கிற்கு போட்டியாக ஆரம்பித்தது. ஆரம்பித்த உடன் கூகுள் பிளஸ்க்கு கிடைத்த ஆதரவு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கூகுள் பஸ்ஸைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையாத பட்ச்சத்தில் கூகுள் பிளஸ்-ன் தாக்கம் குறைய தொடங்கியது இதனால் கூகுள் நிறுவனம் கூகுள் நிறுவனம் கூகுள் பஸ்ஸை மூட முடிவெடுத்துள்ளது என்று நினைக்கிறேன்.

இன்று காலை முதல் கூகுள் பஸ் மூடப்பட்டுள்ளது. (கூகுள் மெயிலை ஓபன் செய்து பார்க்க) கூகுள் பஸ்ஸில் எவ்வளவோ தகவல்கள் பகிரப்பட்டிருந்தது ஆனால் அது மூடப்பட்டவுடன் அவை அனைத்தும் அதோடே போய் விட்டது. இதையே தன்னுடைய பிளாக்கில் எழுதியிருந்தால் அவைகள் கால பொக்கிஷமாக இருந்திருக்கும் என்பதை கூகுள் பஸ் வாடிக்கையாளர்கள் கருதுவார்கள்.

இதனால் மீன்டும் பிளாக் பக்கம் அவர்கள் பார்வை திரும்ப வாய்ப்பிருக்கிறது. இனி தொடர்ந்து பிளாக் எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று நம்புகிறேன். இதனால் பிளாக் படிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிரிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆகையால் நண்பர்களே தங்களின் படைப்புகளை, கருத்துக்களை விவாதங்களை தங்களுக்கு என்று ஒரு பிளாக் ஆரம்பித்து அதில் பறிமாறிக்கொள்ளுங்கள். அவைகள் காலத்திற்கும் அடையாளம் காட்டப்படும்.

Tuesday, December 13, 2011

நான் உங்க வீட்டு பிள்ளை: தமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...

தமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...



விழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்துச் சென்று, தவறிழைத்த காவலர்கள், அவர்களை கதறக் கதற கற்பழித்திருப்பது கொடுமையிலும், கொடுமை. 


இதற்கு முன், வாச்சாத்தியில் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த, 17 பெண்கள், வனத்துறை மற்றும் ரெவன்யூ துறையினரால் கற்பழிக்கப்பட்டது நமக்கு தெரியும். இவ்வழக்கில் தண்டனை பெற்றவர்கள், தற்போது ஜாமினில் வெளியே இருப்பதும் தெரியும். "கண்ணைக் காப்பாற்றும் இமைகள் போல செயல்படுகின்றனர் நம் காவல்துறையினர்' என, ஜெயலலிதா பெருமைப் படுகிறார். 


ஆனால், "பயிரை மேயும் வேலிகள்தான் நாங்கள்' என்கின்றனர், நம் "மதிப்புமிகு' காவல்துறையினர் ! இப்படிப்பட்ட காவல் துறையினருக்குத்தான், "மலிவு விலையில் பொருள்கள் வழங்கும் அங்காடிகள் வேண்டும்' என்றும், "ராணுவத்தினரைப் போல், நம் தமிழகக் காவல்துறையினரும், பல பயன்களை பெற வேண்டும்' என்றும் முதல்வர் ஆசைப்படுகிறார்.

ராணுவத்தினர் லஞ்சம் பெறுவதில்லை; கட்டப்பஞ்சாயத்து நடத்தி, யாரிடமும் கமிஷன் வாங்குவது இல்லை. தண்ணி அடித்து விட்டு, ரோட்டில் செல்லும் பெண்களை அழைத்து வந்து அசிங்கப்படுத்தும் கேவலமான செயல்களில் ஈடுபடுவதில்லை. 


நம் காவல்துறையினர் எப்படியெல்லாம் செயல்படுகின்றனர் என்பதை, தமிழ்த்திரைப்படங்கள் தெளிவாக காட்டுகின்றன. "காவல்துறையின் ஈரல்கெட்டுப் போய்விட்டது' என்றார் கருணாநிதி. ஈரல் மட்டுமல்ல, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என அனைத்தும் கெட்டுப் போயிருக்கின்றன என்பதற்கான அடையாளம் தான், இந்த கற்பழிப்புச் சம்பவங்கள்! 


கற்பை இழந்த வாச்சாத்தி பெண்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் தான் கிடைத்தது. தற்போது, விழுப்புரம் மாவட்ட பெண்கள், தங்கள் கற்பை இழந்ததற்காக, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றிருக்கின்றனர். உண்மையிலேயே, தற்போது கற்பின் மதிப்பு கூடியிருக்கிறது! எத்தனை சட்டங்கள் போட்டாலும், யாரும் திருந்தப் போவது இல்லை. 


சிறையிலிருந்து விடுதலையாகும் குற்றவாளிகள், மனம் திருந்தி வாழ, மனநலம் பேணும் மருத்துவர்களை நியமிக்க உள்ளாராம், நம் தமிழக முதல்வர்! உண்மையில், மனநல வைத்தியம் தேவைப்படுவது குற்றவாளிகளுக்கு அல்ல; இப்போது, காவல்துறையினருக்குத் தான், அது அவசியம் தேவைப்படுகிறது!

Monday, December 12, 2011

ஸ்டைலின் உலக நாயகன்....


ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 62 வது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

உடல் நலமின்றி சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ள ரஜினி புதிதாய் பிறந்த வருடம் இது என்றால் மிகையல்ல. அதனால்தான் 61 ஆண்டுகளுக்கும் இல்லாத மகத்துவம் இந்த ஆண்டு கிடைத்துள்ளது. மறுபிறவி எடுத்துள்ள ரஜினியின் பிறந்தநாளை அதீத உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் இந்த பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12 நாள் பிறந்த சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற சாதாரண மனிதர் பெங்களூரு நகரில் பேருந்து நடத்துனராக தனது பணியை தொடங்கினார். அதற்கு முன்பு அவர் போர்ட்டராகவும் இருந்துள்ளார். பின்னர் இயக்குநர் பாலசந்தரின் கண்களில் சிக்கி இன்று உலக ரசிகர்கள் போற்றும் உன்னத நடிகராக உயர்ந்திருக்கிறார்.

உலகளாவிய சிறந்த நடிகர்களுள் ஒருவராக ரஜினி பார்க்கப்படுவதற்குக் காரணம் அவர் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு தன்னை மாற்றிக்கொள்வதுதான். அபூர்வராகங்களில் தொடங்கிய ரஜினியின் திரையுலக வாழ்க்கை எந்திரன் வரை 36 ஆண்டுகாலம் சினிமா வெற்றி தோல்விகளுக்கப்பால் தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சில் அவரை மண்ணின் முடிசூடா மன்னனாக வலம் வர வைத்துள்ளது.

ஸ்டைல் மன்னன்

ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களில் புகுத்திய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதற்காகவே அவருக்கு ஒரு தனி ரசிகர்வட்டம் உருவானது.

நினைத்தாலே இனிக்கும், முரட்டுக்காளை, மனிதன், ராஜாதிராஜா அண்ணாமலை,தளபதி உள்ளிட்ட படங்களும், இன்றைய எந்திரன் வரை ரஜினியின் ஸ்டைல் மற்றும் பஞ்ச் வசனத்திற்காகவே தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் இருக்கின்றனர்.

உலகளாவிய ரசிகர்கள்

ரஜினி மீது அதீத அன்பு கொண்டுள்ளவர்கள் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல அவரை திரைத்துறை என்பதையும் தாண்டி ரசிக்கும் ஏராளமான மக்கள் என்பது தற்போது ரஜினிக்கு உடல்நலமில்லாமல் போனபோது தான் உண்மையாக அறியமுடிந்தது. அந்த அளவிற்கு அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம்பிடித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் மிகையாகாது.

அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் பிறந்தநாள் உலக பிரசித்தி பெற்ற நாளான 12-12-12 அன்று வருவதை ஒட்டி மிகச்சிறப்பான முறையில் கொண்டாட ரஜினி ரசிகர்களும், அவருடைய குடும்பத்தினரும் இப்போதே திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, December 10, 2011

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு.. இதில் திமுக-வும் உடந்தையா..?


மத்திய அரசு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை நிறைவேற்றாமல், தமிழக அரசிற்கு உரிய நிதியை ஒதுக்காமல், பாரபட்சம் காட்டுவதும், பாராமுகமாகவே இருப்பதும், வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மாநில அரசிடமிருந்து வரும் வருவாய் மட்டும் பெற்றுக் கொண்டு, தக்க சமயத்தில் போதுமான நிதி தராமல், பல வகையில் இழுத்தடிப்பது சரியல்ல. காங்கிரஸ், தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள், ஆளும் மாநிலங்களுக்குத் தேவையான நிதியை அள்ளித் தருகிறது. ஆனால், மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு, தேவையான நிதியை ஒதுக்காமல், பாரபட்சமாக செயல்படுகிறது. 

நேரடியாகவும், மறைமுகமாகவும் மாநில அரசிடமிருந்து, மத்திய அரசுக்கு வருவாய், பல வகை வரிகளின் மூலமாக கிடைக்கிறது. இதை வேண்டாம் என்று சொல்ல, மத்திய அரசு முன் வருமா? மத்தியில் ஆளும் காங்கிரஸ், மாற்றாந்தாய் மனப்பக்குவம் கொண்டிருப்பதால், தமிழகம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மத்தியில் நிதி அமைச்சராக உள்ள பிரணாப் முகர்ஜியோ, "காங்கிரஸ் மாற்றாந்தாய் மனப்பக்குவத்தோடு செயல்படவில்லை' என்று கூறி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். 

அவர் கூறியதை, தமிழக மக்கள் நம்பத் தயாராக இல்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், வரலாறு காணாத வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களும், சுனாமி போன்ற பேரழிவுகளும் ஏற்பட்டன. ஆனால், அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், தமிழகத்திற்கு உரிய நிதியைத் தராமல் வஞ்சித்து விட்டன. 

மேலும், வறட்சி மற்றும் வெள்ள நிவாரணக் குழு, தமிழகத்தைப் பார்வையிடவே வரவில்லை. தொடர்ந்து காலம் தாழ்த்திவிட்டு, "மங்களம்' பாடிவிட்டன. இதற்கு, தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பார்லிமென்ட் உறுப்பினரும், நிதி அமைச்சரும் உடந்தை என்பது மிகவும் வேதனையான ஒன்று. 

மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்ற போதிலும், மத்தியில் ஒட்டிக்கொண்டு, அழையா விருந்தாளியாக இருந்து கொண்டு, மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடைக்கல்லாக இருப்பது, தமிழனே தமிழனுக்கு எதிரியாக இருப்பதாகவே தோன்றுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி ஏற்பட்டால், இணக்கமான சூழல் ஏற்படும். "தேனாறும், பாலாறும் ஓடும்' என்று வாய்ச்சவடால் பேசி, ஆட்சியை மக்களுக்கு விரோதமாகவே நடத்தியதை, மக்கள் மறக்கவில்லை. 

தமிழகத்தின் கடனை, லட்சம் கோடியாக உயர்த்திவிட்டதையும், கஜானாவை துடைத்து வைத்துவிட்டு, தங்களுடைய கஜானாவை நிரப்பிக்கொண்டதையும், யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மத்திய அரசு, கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் செயல்பட்டு, தமிழக அரசுக்கு நியாயமாகத் தர வேண்டிய நிதியைத் தராமல், வஞ்சம் செய்தால், வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி கட்டாயம் காணாமல் போய்விடும் என்பது மட்டும் நிதர்சனம். 

மாற்றாந்தாய் மனப்பக்குவத்தை மாற்றிக்கொண்டு, கேட்பார் பேச்சைக் கேட்டு, கெட்டுப் போகாமல், தங்கள் மிச்சம் மீதி கவுரவத்தை, காங்கிரஸ் காப்பாற்றிக் கொள்ளுமா?

Thursday, December 8, 2011

வெப்பமயமாதலால் ஒரு உயிரினத்தின் நிலை...


எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய பிரச்சனை உலகம் வெப்பமயமாதல் என்ற பிரச்சனை.

இந்த வெப்பமயமாதலால் உலக உயிரினங்கள் அனைத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.


நாளைய எதிர்காலம் என்னவாகும் என்று ஒரு விலங்கிடம் சோதனை நடத்தியபோது அது வேடிக்கையாய் செய்த நிகழ்வு இங்கே...


Monday, December 5, 2011

புதிய குழந்தை பதிவரா நீங்கள்.. இது புரட்சிக்காக இல்லீங்க...


வாங்கோ எதிர்கால சாதனைப்பதிவர்களே... மற்றும் புதிய தோழர்களே/ தோழிகளே, 

அப்புறம் நீங்க
ஷேமமாக இருக்கேளா? ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா?  அப்படின்னு கேட்க நான் ஐயர் ஆத்து பிள்ளை இல்லிங்க... உங்க வீட்டுப்பிள்ளை...

நீங்கள் பதிவுலகில் தற்போதுதான் புதியவராக வந்துள்ளீர்களா? பலே. இந்தப்பதிவு உங்களுக்குத்தான். பத்திரிகைகளில் சாதிக்கும் ஆர்வமும், திறமையும் இருந்தாலும் வாய்ப்பு மிகச்சிலருக்கே கிடைக்கிறது. எனவே உங்களுக்கென ஒரு வலைப்பூவை தொடங்கி அதில் தங்கள் திறமையை நிரூபித்து வெற்றி பெற காலடி எடுத்து வைத்து இருப்பீர்கள். 

அப்படி வெற்றிப்பெறவரும்போது முன்னோடி பதிவர்களையும், தங்கள் தளத்துக்கு வரும் பதிவர்களையும் வரவேற்க மறக்காதீர்கள். பதிவுலகத்திற்கு வந்தபிறகு, ஏன் தாங்கள் தனியாக யாரும் இல்லாத ஆள்போல் இருக்க வேண்டும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து செயல்படுவோம்.. அதற்காக அறிவுரைகள் இங்கே வழங்குகிறேன்.. வாருங்கள்...


********* நல்ல பதிவுகளை போடுங்கள்.... மற்ற பதிவுகளை வாசித்து அந்த பதிவு எப்படியிருக்குன்னு பார்த்து உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்க. பதிவு பிடிச்சிருந்தா பிளஸ் ஓட்டு போடுங்க.. பிடிக்கலையா மைனஸ் ஓட்டுப்போடுங்க தப்பே இல்லை. பதிவர்களில் என்ன கலப்பட பதிவர்கள் இங்க என்ன பால் வியாபாரமா செய்யுறோம் கலப்படம் செய்ய.

********* பதிவை படிங்க, சும்மா சிம்பிளா ஒரு கமாண்ட் போட்டுட்டு போங்க.. அதுல தப்பே இல்ல. உதா. ஒரு கவிதைப்படிக்கிறோம்ன்னு வச்சிக்கங்க.. அது பிடிச்சிருந்தா சூப்பர், அருமை, வாழ்த்துக்கள் அப்படின்னு போடுங்க தப்பேயில்லை. கவிதை பிடிச்சிருக்கு அதுக்காக பத்து பக்கத்தில கமண்ட்ஸ் போடனுமா என்ன...? விருப்பம் இருந்தா விவரமா கருத்துப்போடுங்க. இல்லன்னா சுருக்கமா.. அம்புட்டுத்தான்.

********* உங்க வலைப்பூ ஆரம்பிச்ச உடனே வரக்கூடய பாளோவர்களை அன்போடு அழையுங்கள். அவருக்கு நன்றி சொல்லுங்க. முதலில் வருவதால் உங்க சொத்தையா கேட்க போறாங்க. சிலர் இருக்காங்க நீங்க வளர்ந்து பெரிய ஆளா ஆனப்பிறகு வந்து ஒட்டிப்பாங்க அவங்கள நம்பாதீங்க. முதலில் வருபவர்கள் ஓட்டுக்குத்தான் வராங்க அப்படின்னு நினைக்காதீங்க. நீங்க ஓட்டுப்போட்டு பிரதமர் பதவிக்காக வரப்போறாங்க. எல்லாம் ஒரு நட்புதான்.

********* முதலில் பாளோவரான வந்து சேர்ந்தால் அவர்களுக்கு ஒரு அறிவிப்பு வையுங்கள் அதற்கு பரிசாக அன்பு பகிரப்படும் அப்படின்னு போர்டு வையுங்க. அப்படி அன்பே காட்டவில்லையென்றாலும் நம்ம பதிவுலக எதார்த்தவாதிகள் பிழிடா சக்கை, புலவர் வீதி மற்றும் 'வேடம்'தாங்கி பதிவர்கள் ஆகியோர் கண்டிப்பாக வந்து சேருவாங்க. ஏன்னா அவர்களுக்கு  குஷிப்பட ஜோதிகா மாதிரி ஈகோ-வெல்லாம் கிடையாது. புதியதாக வரும் பதிவர்களை கண்டிப்பாக இவர்கள் அன்போடு வரவேற்பார்கள். அம்புட்டு நல்ல மனசு.

********* பதிவுலக அரசியல் கத்துக்கங்க. நீங்க யாரையும் மதிக்காம, யாருடைய வலைப்பூவுக்கும் போகாமல், யாருடைய பதிவையும் வாசிக்காமல், யாருக்கும் கருத்திடாமல், வாக்களிக்காமல் இருந்துவிட்டு என் கடைப்பக்கம் யாரும் வரவில்லை என்று சொன்னால் எப்படி. அதனாலே வினைவிதைப்பவன் வினைஅறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது போல நீங்கள் மற்றவர்களிடம் அன்பை விதையுங்கள் அன்பை அறுவடை செய்யலாம்.

********** உங்க கருத்தை, உங்க சிந்தனையை, உங்க படைப்புகளை பதிவா போடுறீங்க அதை யாரும் படிக்க கூடாதுன்னு க‌தவை அடைச்சிட்டா எப்படி. அதை எல்லோருக்கும் அறிமுகம் செய்யுங்க..

********** இங்கு இதைத்தான் எழுதவேண்டும் என்ற வரையறை இல்லை. எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். என்ன தலைப்பு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், தங்கள் மனதுக்கு பட்டதை சொல்லுங்கள். அதில் மற்றவர் மனசு சங்கடப்படாமல் இருந்தால் மட்டும் போதும்.

பிரெட்சிக்காரன் என்ற பேரில் ஒருவர் பதிவுலகில் நுழைந்து இந்த பதிவுலகையே புரட்டிபோட்டுவிடலாம் என்று, ஜேம்ஸ்பாண்டு 009 மாதிரியும், புரட்சிபுயல் வடிவேலு மாதிரியும் வந்திருக்கிறார்


அவரை யாரும் நம்பாதீர்கள். அவரிடம் பெரிய புரட்சியெல்லாம் ஒன்றும் இல்லை பதிவுலகில் வளர்ச்சிப்பாதையில் இருக்கும் பிழிடா சக்கை, புலவர் வீதி மற்றும் 'வேடம்'தாங்கி ஆகிய மூவரை மட்டுமே தாக்கி எழுத வந்திருக்கும் புதிய அவதாரம். 

அவரு்டைய பதிவுகளை பாருங்கள் அதில் இந்த மூவரை மட்டுமே தாக்கி எழுதியிருக்கும் பதிவுகள் மட்டுதான் இருக்கும். இவர்கள் தானும் வாழமாட்டார்கள் மற்றவர்களையும் வாழ மாட்டார்கள்.

பிரெட்சிக்காரன் என்ற போலி முகத்தைக் கொண்டு யாரும் இந்த பதிவுலகை ஆட்சிசெய்து விடமுடியாது. அன்புக்கு மட்டுமே தலைவணங்கும் இந்த பதிவுலகில் யாவரும் மன்னர்களே..!

அவர் பெரியவர் இவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி ஒற்றுமையுடன் வலம் வருவோம்.  என்றாவது ஒருநாள் முகம் பார்க்காத நாம் முகம்பார்க்கும் போது அன்பை வெளிக்காட்டி அரவணைப்போம். அப்போது ஒரு துளி கண்ணீர் நம் கண்களில் எட்டிப்பார்க்கும் அப்போது புரியும் நம் பந்தங்களின் உறவு.

Sunday, November 27, 2011

தமிழக மக்களின் காதுகளில் பூசுற்றுவதில் வல்லவர் யார்..? ஜெ-வா..? கலைஞரா..?



"பொதுத் துறை நிறுவனங்கள் போண்டியானதற்கு, தி.மு.க., ஆட்சிதான் காரணம் என பொய்யான காரணங்களை சொல்லி, தமிழக மக்களின் காதுகளில் அழகாக பூ சுற்றுகிறார் ஜெயலலிதா' என, கருணாநிதி தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். 

எந்த சந்தர்ப்பத்தில் எப்படி, யாருக்கு பூ சுற்றுவார் கருணாநிதி என்பது, தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். கம்யூனிஸ்ட்கள் மத்தியில் பேசும்போது, நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லி, காம்ரேட்களின் காதுகளில் மிக அழகாக பூ சுற்றுவார். 

பிராமணர்கள் மத்தியில் பேசும்போது, "நான் பிராமணர்களை வெறுக்கவில்லை. ராஜாஜியை உண்மையிலேயே நேசிக்கிறேன். பிராமணீயத்தைத்தான் ஈ.வெ.ரா., வெறுத்தார். அவரின் பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்த நான், அதைத்தான் வலியுறுத்த விரும்புகிறேன்' என்று அவர்களின் காதுகளில் (ஏற்கனவே அவர்கள் பூக்கள் சூடியிருந்தாலும்) தன் பங்குக்கு, கருணாநிதியும் பூ சுற்றுவார். 

தாழ்ந்த குடியினர் மத்தியில் உரையாடும் போது, "நானும் தாழ்ந்த குடியில் அவதரித்தவன். நான் ஒரு ஆண்டி' என்று, பாவம் அவர்களின் காதுகளில் அழகாக பூ சுற்றுவார். 

முஸ்லிம்களின் தோழராக தன்னை காட்டிக்கொள்ள, குல்லா அணிந்து ரம்ஜான் கஞ்சியை விரும்பி குடிப்பார். இயேசுநாதரிடம் இவர் கொண்டிருக்கும் பற்றும், நேசமும் உண்மையான கிறிஸ்தவர்களுக்கே இருக்குமா என்பது சந்தேகம் தான்!அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சொல்லாததையெல்லாம், தன்னிடம் அவர்கள் சொன்னதாக, அழகாக புனைந்துரைப்பார். 

ஜெயலலிதாவுக்கு இந்த கலையெல்லாம் சுத்தமாக தெரியாது. தமிழகத்தின் நிதி நிலையை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். யார் காதிலும் பூ சுற்றும் அவசியம் நிச்சயம் அவருக்கு கிடையாது. விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்யும் வித்தகரும் அவரல்ல. 

தன் மனதில் பட்டதை தைரியமாக பேசுவார். தமிழகத்தைக் காப்பாற்ற அவர் எடுத்திருக்கும் நடவடிக்கை கசப்பானது என்றாலும், தவிர்க்க முடியாதது என்பதை எதிர்காலம் நிச்சயம் உணர்த்தும். தமிழர்களின் காதுகளில், கருணாநிதி சுற்றியிருக்கும் பூக்களே நிறைந்திருக்கும் போது, ஜெயலலிதா புதிதாக பூக்களை எப்படி சுற்ற முடியும்?

Tuesday, November 22, 2011

ஜெ., கொடுத்திருக்கும் கசப்பு மருந்து..!


நம் தமிழக அரசு, பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. மேலும், விரைவில் மின் கட்டணமும் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இவை, உடனடியாக கசப்பை விளைவிக்கின்றன. இருப்பினும், கசப்பு மருந்து சில சமயங்களில் நன்மை பயக்கவே கையாளப்படுகிறது. அதுபோல், நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க, சில தவிர்க்க முடியாத நடவடிக்கை தேவைப்படுகிறது. 

மேலை நாடுகள், தங்கள் வரம்பை மீறிய வாழ்க்கை முறையை பின்பற்றி, இன்று பல இடையூறுகளை சந்தித்திருக்கின்றன. நாமும் அந்நிலைக்கு தள்ளப்பட வேண்டுமா?இன்று, நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலை ஓரளவுக்கு உயர்ந்துள்ளது. நடுத்தர மக்களின் சராசரி விகிதமும் அதிகரித்துள்ளது. அதனால், பல தேவையற்ற செலவுகளை செய்கின்றனர். 

உதாரணமாக, ஒரு சினிமா டிக்கெட் இன்று, 100 ரூபாய்க்கு குறைவில்லை. அதனால் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக உள்ளதா?விடுமுறை உல்லாச பயணம் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்த போதிலும், 14 சதவீதம் வட்டி கொடுத்து, கார் வாங்குவோரின் எண்ணிக்கை குறையவில்லை. ஆகவே, யாவரும் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. 

கீழ்மட்ட மக்கள் பெரிதும் கஷ்டத்திற்கு உள்ளாவர் என்பது உண்மை. அரசு, இம்மாதிரி சில முடிவுகள் எடுக்கும் போது, இந்த கஷ்டத்தை தவிர்க்க முடியாது. அரசும் சில முக்கிய விதிகளை கடைபிடிக்க வேண்டும். வீண் செலவுகள் அறவே தவிர்க்கப்பட வேண்டும். 

உணவு பொருட்கள், தானியம், பால், இறைச்சிப் பொருட்களின் உற்பத்திக்கு கைகொடுக்க வேண்டும். ஆடம்பர பொருள் வரிச்சுமையை அதிகரிக்க வேண்டும். பொது போக்குவரத்து நடைமுறை முற்றிலும் சீர்படுத்தப்பட வேண்டும்.பொது வினியோகத் துறையில் அதிக கவனம் தேவை. வினியோகிக்கும் பொருள்கள், கீழ்மட்ட மக்களை சென்றடைகிறதா என்ற கண்காணிப்பை தீவிரமாகச் செயல்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யும் பட்ச்சத்தில் எதிர்கால பிரச்சனைகளில் இருந்து அரசும் மக்களும் காப்பாற்றப்படுவார்கள்.

Thursday, November 17, 2011

நல்லா இருக்க மாட்டான் தமிழன்!... இப்படிக்கு தன்மானத்தலைவர்...



"தமிழனுக்குள்ள ஒரே சாபக்கேடு, எத்தனை முறை குட்டுபட்டாலும் புத்தி வராது' என, அங்கலாய்த்திருக்கிறார் கருணாநிதி. உண்மைதான்! தமிழினத்திற்காகப் போராடும், "தமிழினத் தலைவன்' கருணாநிதியை, வீட்டுக்கு அனுப்பி விட்டனரே, இந்த நன்றி கெட்ட தமிழர்கள். 
 
தன் அளப்பரிய சேவையால், தமிழக மக்களை, குறிப்பாக, "குடிமகன்களை' வாழ வைத்த இந்த பெருந்தகையை, தமிழர்கள் புறக்கணித்தது முறைதானா? முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததுமே, மதுவிலக்கை ரத்து செய்து, "குடிமகன்'களை மகிழ்வித்தவர் அல்லவா? இவர் ஏற்றி வைத்த இந்த தீபம், இன்றளவும் அணையாமல், சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறதே, இதற்காகவே இவரை தமிழினம் உள்ளவரை நினைவில் கொள்ள வேண்டாமா? எதைப் பற்றியும் கவலைப்படாமல், அதிகாலை முதல், நள்ளிரவு வரை, "குடிமகன்கள்' ஓயாமல் தம், "கடமையை' செய்ய, அதைக் கண்டு, அவர்கள் வீட்டுப் பெண்கள் இன்றளவும், "ஆனந்தக் கண்ணீர்' வடித்துக் கொண்டிருக்கின்றனரே, அதைத்தான் மறக்க முடியுமா? 
 
இப்படி, கடமையே கண்ணாக, "குடிமகன்கள்' இருந்ததால், இவர்கள் இல்லங்கள், "நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக' செல்வச் செழிப்பில் வளர்ந்து வருகிறதே, அதைத் தான் மறுக்க முடியுமா?"ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதற்கிணங்க, இவரது, "நல்' ஆட்சிக்கு, இது ஒன்றே சான்றாகாதா? "தன் மக்கள்' பதவிகளுக்காக, டில்லி சென்று சோனியாவை சந்தித்துப் பேசிய, "தமிழினத்' தலைவர், நம் தொப்புள்கொடி உறவுகள், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட போது, அறிக்கைவிட்டு, கடிதம் எழுதி, மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம் நடத்தி, மூன்று மணி நேர உண்ணாவிரதம் கூட இருந்தாரே, அதைத்தான் மறக்க முடியுமா? 
 
கட்சிக்காக ஓடாக உழைத்து, தியாகங்கள் பல புரிந்த அழகிரி, கனிமொழி, தயாநிதி போன்ற தம் குடும்ப உறுப்பினர்களுக்கு, பதவி கொடுத்து, இவர்கள் மூலம் தமிழகத்தில் பல சேவைகளைப் புரிந்தாரே, அதைத்தான் மறக்கலாமா? தன் பேரன்கள் மூலம், "ரெட் ஜெயண்ட் மூவிஸ்' என்றும், "கிளவுட் நைன்' என்றும், சுந்தரத் தமிழில் பெயர் வைத்து, "வா குவாட்டர் கட்டிங்' என்று, "பண்பாடு' காக்கிற படங்களை எடுக்க வைத்து, தமிழ் சேவை செய்கிறாரே, அதைத்தான் மறக்க முடியுமா?
 
எல்லாவற்றையும் விட, "கையிலே காசு இல்லாத போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக, கழகத்தையே காட்டிக் கொடுக்க முனைகின்றனர்' என, தமது கட்சியைச் சேர்ந்தவரை பற்றிக் கூறி, தாங்கள் அடித்த கொள்ளைப் பற்றி, திறந்த மனதோடு ஒப்புக்கொள்கிறாரே, இப்படிப்பட்ட உன்னதத் தலைவரைத்தான் மறக்கலாமா?
 
"நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும், நான் கட்டு மரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்' என்று, மேற்சுட்டியவாறு, பல சாதனைகள் புரிந்தவரை நிந்திப்பதுதான் நியாயமாகுமா? "தமிழனுக்குள்ள சாபக்கேடு; எத்தனை முறை குட்டு பட்டாலும் தமிழனுக்கு புத்தி வராது' என, தமிழர்களைப் பற்றி, "புகழ்ந்து' அரசியல் நாகரிகத்தோடு, நற்சான்றிதழ் வழங்கும், இத்தகு சிறப்புக் குரிய தலைவரை, 75 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரரை, ஐந்து முறை முதல்வராக இருந்தவரை, தேசிய அரசியலில் பங்கேற்ற மூத்த அரசியல்வாதியை மறக்காமல், இவரிடமிருந்து பாடம் பெற்று, இனியாவது, விழித்துக் கொள்ளுமா தமிழினம்?

இப்படிக்கு...
கழகத்தொண்டன்...

Saturday, November 12, 2011

இந்த சில்லறைங்க தொல்ல தாங்க முடியலடா சாமி...


25 பைசா நாணயத்தை, புழக்கத்திலிருந்து அரசே நிறுத்திவிட்டது. பிச்சைக்காரர்கள் கூட, 50 பைசா நாணயங்களை வாங்குவதில்லை. பணப்பரிவர்த்தனை நடக்கும் எல்லா இடங்களிலும், 10.49 ரூபாய் எனில், 10 ரூபாய் எனவும், 10.51 ரூபாய் எனில், 11 என்றும், "ரவுண்ட் ஆப்' செய்யப்படுகிறது. மக்களும் இந்த, "ரவுண்ட் ஆப்' முறையை ஏற்றுக் கொள்ள பழகிவிட்டனர். 

ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் பிடிவாதமாக பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுவின் விலையை, அவ்வப்போது கூடுதலாக்கி அறிவிக்கும் போது, பைசா சுத்தமாகவே அறிவித்துக் கொண்டிருக்கின்றன. 

சமீபத்தில் பெட்ரோல் விலையை, 1.82 ரூபாய் உயர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. மக்கள் மீது கரிசனம் இருந்தால், விலையை உயர்த்தி இருக்கக் கூடாது. கரிசனம் இல்லை என்றான பின், அந்த 18 பைசாவில் என்னவாகிவிடப் போகிறது; பெட்ரோல் விலை இரண்டு ரூபாய் கூடுதல் என்று அறிவித்துவிட்டு போக வேண்டியது தானே! 

இனிமேலாவது, ஐ.ஓ.சி., எச்.பி., மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள், விலையை கூடுதலாக்கி அறிவிக்கும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்று அறிவித்துத் தொலைக்கலாமே! எண்ணெய் நிறுவனங்களின் செவியில் ஏறுமா?

‌பெட்ரோல் வங்கிகளில் பெட்ரோல் போடும்போது இந்த  சில்லரை விஷயம் எவ்வாறு கையாளப்படுகிறது என்றும் தெரியவில்லை. அங்கு உள்ள மீட்டர்களில் ரூபாய்க்கான அளவு உள்ளதால் பெட்ரோல் போடுவோர்கள் 50 ரூபாய், 100 ரூபாய் எனதான் பெட்ரோல் போடுகின்றனர்.

இனியாவது இந்த பைசா பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமா நாடு..?

Tuesday, November 1, 2011

ஆணவம் வேண்டாம் ஜெயலலிதா அவர்களே...



தமிழகம் திமுக-வின் ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு அந்த ஆட்சியை தற்ப்போது தங்களுக்கு கொடுத்துள்ளார்கள். அதற்க்கு அடுத்து உள்ளாட்சித்தேர்தலிலும் அதே வெற்றி மக்களால் தங்களுக்கு அளிப்பபட்டுள்ளது. இந்த வெற்றியால் தங்களின் கட்சிகாரர்களுக்கு கர்வம் தலைக்கேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..
உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சி அடைந்துள்ள, பிரமிப்பூட்டும், இமாலய வெற்றியைக் கண்டு, அ.தி.மு.க.,வினர், குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பெருமிதமும், உவகையும் அடைவது இயற்கையே; புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால், இந்த வெற்றிக்களிப்பு மமதையாக மாறிவிடக்கூடாது. 
 
ஏனெனில், சட்டசபைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வின் படுதோல்விக்கு, வேறு சில வலுவான காரணங்கள் உண்டு. மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளின், தி.மு.க., உறுப்பினர்கள் வசூல் வேட்டை, கட்டப் பஞ்சாயத்து என, ஆடிய ஆட்டமும் இத்தோல்விக்கு ஒரு காரணம் என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது. 
 
சட்டசபைத்தேர்தலுக்கு முன், "சென்னையில் தி.மு.க., தோற்றால், அதற்கு கவுன்சிலர்களின் செயல்பாடுதான் காரணமாக இருக்கும்' என, கருணாநிதியே நொந்து போய்ச் சொன்னதை, நினைவில் கொள்ளவேண்டும். 
 
எனவே, இப்போது, அ.தி.மு.க.,வினரும் அதே பாணியில் செயல்பட்டால் ஆபத்து தான். ஆகவே, பொறுப்புணர்வும், கடமையுணர்வும் கொண்டு திறம்படப் பணியாற்றி மக்களைக் கவரவேண்டும்.

Tuesday, October 25, 2011

அதுக்கு நல்லதாம் முருங்கைப் பூக்கள்!




முருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்புகள் அலாதியானது. உடலின் வெப்பத்தை தணித்து குளிர்ச்சி தரக்கூடிய சக்தி முருங்கைப் பூக்களுக்கு உண்டு. கண்களை பாதுகாக்கும், பித்த மயக்கம் போக்கும். நல்ல தாது பலம் கொடுக்கும். மொத்தத்தில் முருங்கைப் பூவானது பிணி தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.


உடல்சூடு தணிய


சிலருடைய உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல காணப்படும். அத்தகையவர்கள் ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களைச் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டியளவு அளவு பசு நெய் விட்டு வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் ஏழே நாட்களில் உடல் சூடு தணிந்து சம அளவை அடையும்.


விந்து விருத்தியடையும்


ஒரு பிடி அளவு முருங்கைப் பூவை சுத்தமாக ஆய்ந்து அலம்பி, பசும் பாலில் போட்டுக் காய்ச்சி கற்கண்டு தூள் போட்டுக் கலக்கி மாலை 6 மணிக்கு சாப்பிட்டால் உடல் வலுப்பெறும் தாது விருத்தியாகும். முருங்கைப் பூவுடன் முருங்கைப் பிஞ்சையும், தோலுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வெப்பம் தவிர்த்து ஆண்மை பெருகும்.


வீக்கத்தை கட்டுப்படுத்த


முருங்கைப் பூவை அரைத்து வீக்கங்கள் மீது பற்றுப்போடலாம். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று விழுங்கலாம்.


கண் வலிக்கு


இரவு நேரத்தில் முருங்கைப் பூவை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை பூவின் சாறை 2 துளிகள் வீதம் கண்களில் விட கண் வலிகள் நீங்கும். விரை வீக்கம் சுருங்க முருங்கைப் பூவை அவித்து விரை மீது மூன்று நாட்கள் கட்டினால் நீர் வற்றி சுருங்கி விடும்.


வயிற்று வலிக்கு


பிரண்டை, முருங்கைப் பூ, பொடியாக நறுக்கப்பட்ட தேங்காய் மூன்றையும் வகைக்குக் கைப்பிடியளவு எடுத்து மூன்றையும் ஆவியில் வேகவைத்து அம்மியில் வைத்து நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்துக் குடித்து விட்டால் வயிற்றுவலி நின்றுவிடும்.

Monday, October 3, 2011

உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது..?



உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது என்ற கருத்து கணிப்பை அமெரிக்காவைச் சேர்ந்த, "நியூஸ்வீக்' என்ற நாளிதழ் நடத்தியது.மொத்தம், 165 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், இந்தியா, 141வது இடத்தை பெற்றது. இதன் மூலம், நமது நாடு சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகளை கடந்தாலும், அரசியல், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பில் பெண்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை என்பதை காட்டுகிறது. 

அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு ஏற்ற நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து பெற்றுள்ளது. இதற்கு அடுத்து, சுவீடன், கனடா, டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள், முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இதே நேரத்தில் மாலி, காங்கோ, ஏமன், ஆப்கானிஸ்தான், சாத் ஆகிய நாடுகள் கடைசி ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இப்பட்டியலில், அயர்லாந்து, மொத்தமாக, 100க்கு 100 சதவீதம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இதில் பொருளாதாரத்தில், 100க்கு 88, சுகாதாரத்தில், 100க்கு 90.5, அரசியலில், 100க்கு 92.8, கல்வியில், 96.7 சதவீதத்தை பெற்றுள்ளது. 

ஆனால், இந்தியா, 100க்கு, 41.9 மதிப்பெண்களை மட்டுமே பெற்று, 141வது இடத்தை பெற்றுள்ளது. இதில், அரசியலில், 14.8 சதவீதமும், நீதித் துறையில், 54, பொருளாதாரத்தில், 60.7, சுகாதாரத்தில், 64.1, கல்வியில், 64.9 சதவீதமும் பெற்றுள்ளது. 

நமது நாட்டை விட, சிறிய நாடாக இருக்கும், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர், இலங்கை உள்ளிட்ட நாடுகள், இந்தியாவை விட, மேலிடத்தில் உள்ளன. இப்பட்டியலில், முதல் 20 இடங்களுக்குள் வந்த ஒரே ஆசிய நாடு பிலிப்பைன்ஸ் (17வது இடம்) மட்டுமே.

Friday, September 30, 2011

பிறந்த நாள் பரிசு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா விடுவிப்பு.. நிலுவையிலுள்ள வழக்கு பட்டியல்..!


முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாள் பரிசாக ரூ 2 கோடி காசோலைகள் வந்தது தொடர்பான வழக்கிலிருந்து அவரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, அவரது பிறந்த நாளுக்குப் பரிசாக ரூ. 2 கோடி அளவிலான காசோலைகள் வந்தன. இதை அரசுக் கணக்கில்சேர்க்காமல்தனது கணக்கில் அவர் போட்டுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிஐ நடத்தி வந்தது. இத்தனை காலமாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை பத்து ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்ஷா, சிபிஐ காலதாமதமாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதற்கான காரணத்தை அது கூறவில்லை என்று கூறி இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டார்.

தற்போது அழகு திருநாவுக்கரசு திமுகவில் இருப்பது நினைவிருக்கலாம். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜெயலலிதா மீதான வழக்குகளில் மேலும் ஒன்று குறைந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மீது திமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகள்

1995ம் ஆண்டு ரூ. 8.5 கோடிக்கு 45,302 கலர் டிவி பெட்டிகளை வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு (விடுதலை), டான்சி நில வழக்கு (விடுதலை) , ரூ. 2 கோடி கிப்ட் காசோலை வழக்கு (விடுதலை), பிளசன்ட் ஸ்டே வழக்கு (தண்டனை-அப்பீல் நிலுவையில் உள்ளது), நிலக்குமதி இறக்குமதி ஊழல் (நிலுவை), திராட்சைத் தோட்ட வழக்கு (விடுதலை), சாப் விளையாட்டு விளம்பர ஊழல் (விடுதலை), சொத்துக் குவிப்பு வழக்கு (நிலுவை), கிரானைட் குவாரி ஊழல் (நிலுவை) , டிட்கோ முதலீட்டு விலக்கு ஊழல் (விடுதலை), வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது (நிலுவை).

Thursday, September 29, 2011

ரஜினிக்கு ரசிகர்கள் நடத்தும் பிரமாண்ட பிறந்த நாள் விழா... ரஜினிக்கும் அழைப்பு....


வரும் டிசம்பர் 12 -ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள். இந்த நாளை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாகக் கொண்டாட சென்னை மாவட்ட ரஜினி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.

உடல்நிலை சீரடைந்து, புதுப்பிறவி எடுத்து வந்துள்ள ரஜினிக்கு, மிகப் பிரமாண்டமாக இந்த விழாவை எடுப்பதற்கான ஏற்பாடுகளில் சென்னை மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் என் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.

டிசம்பர் 12-ம் தேதி ரசிகர்கள் அந்தத்தப் பகுதியில் எளிமையாக ரஜினி பிறந்த நாளைக் கொண்டாடுவதென்றும், அதற்கடுத்த நாள் டிசம்பர் 13-ல் வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பங்குபெறும் பெரிய நலத்திட்ட விழாவாக நடத்துவதென்றும் ரஜினி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கவிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதி ரசிகர் மன்றமும், தங்கள் பெயரிலேயே இந்த உதவிகளை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து வழங்கலாம்.

ரஜினிக்கும் அழைப்பு

ரஜினி சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பிறகு, ரசிகர்களைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியிருந்தனர். ஆனால் போயஸ் தோட்ட இல்லத்தின் பணிகள் மற்றும் ரஜினியின் ஓய்வு கருதி இதுவரை அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

எனவே, ரஜினி ரசிகர்களை அழைத்துச் சந்திப்பதைவிட, ரசிகர்கள் ஒன்று திரளவிருக்கும் அவரது பிறந்த நாள் விழாவுக்கே வருகை தந்து அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டால், ரசிகர்களின் மனக்குறை தீரும் என்ற நோக்கத்தில், ரஜினியையே விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே இதுகுறித்து லதா ரஜினியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அழைப்பாக இல்லாமல் ஒரு கோரிக்கையாக ரஜினியின் முன் வைத்துள்ளனர்.

ஒருவேளை இந்த விழாவுக்கு ரஜினி வரவில்லை என்றால், அவர் ரசிகர்களுக்கு விடுக்கும் பிறந்த நாள் செய்தியை வீடியோவாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் என் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் ஆர் சூர்யா, கே ரவி, சைதை ரவி உள்ளிட்டோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாசரத்தில் வைகை புயல்.... பரபரப்பு தகவல்...


கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஹைலைட்டாக அமைந்தது நடிகர் வடிவேலுவின் பிரச்சாரம்.

விஜயகாந்துக்கு எதிராக அவர் செய்த அந்தப் பிரச்சாரம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போகப் போக நாராசமாகி, அவர் திரையுலக வாழ்க்கையை தற்காலிக ஓய்வு கொள்ள வைத்தது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், வடிவேலு சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார் எனும் அளவுக்கு அமைதியாக உள்ளார். இத்தனைக்கும் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன் அவர்தான். அவரை வைத்துப் படமெடுக்க இயக்குநர்கள் பெரும் ஆர்வத்தோடு இருந்தாலும், அவரிடம் போக முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலிலும் அவர் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

"முன்பாவது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார் விஜயகாந்த். இப்போதோ அவரே ஒரு கூட்டணிக்குத் தலைமை வகிப்பதால், நீங்கள் பிரச்சாரம் செய்ய எந்த தயக்கமும் இல்லையே, முதல்வரும் கூட இதை அமைதியாக ரசிப்பாரே," என்று வடிவேலுவிடம் எடுத்துக் கூறினார்களாம்.

இன்னொரு பக்கம், விஜயகாந்த் அணியை மட்டும் குறிவைத்துப் பிரச்சாரம் மேற்கொள்ள முடியுமா என முக்கிய பிரமுகர் ஒருவரிடமிருந்தும் வடிவேலுவுக்கு தூது வந்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனால் வடிவேலு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லையாம். நமது பிரச்சாரம் எதிர்மறை விளைவைத் தந்துவிடுமோ என்ற நினைப்பு அவருக்கும் இருப்பதால், யோசித்து ஒரு முடிவைச் சொல்வதாகக் கூறியுள்ளாராம்.

எதற்கும் ஒரு முறை கருணாநிதி மற்றும் முக அழகிரியை பார்த்துவிடவும் வடிவேலு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Wednesday, September 28, 2011

அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவுகள்! - அதிர்ச்சி தகவல்


உலகளவில் அதிகளவிலான இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது.

நேற்று உலக கருத்தடை நாள் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் பாலியல் உறவு மற்றும் கருத்தடை முறைகள் குறித்த கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம் உலகளவில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. உலகில் பாதுகாப்பற்ற முறையில் பலரிடம் செக்ஸ் உறவு கொள்ளும் முறை அதிகரித்து வருவது தெரிந்துள்ளது.

புதிய நபருடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளும் இளவயதினரின் எண்ணிக்கை, கடந்த 3 ஆண்டுகளில் 20 சதவீதமும், பிரன்சில் 2 மடங்கும், அமெரிக்காவில் 40 சதவீதமும் அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள இளம்வயதினருக்கு கூட தகுந்த கருத்தடை மற்று பாதுகாப்பான உடலுறவு குறித்த தகுந்த அறிவு இல்லை என தெரிகிறது.

ஐரோப்பிய நாடுகளில் 50 சதவீதம் இளம் வயதினர் பள்ளிகளின் மூலம் செக்ஸ் கல்வியை பெற்றுள்ளனர். தென் அமெரிக்கா, அமெரிக்கா, மற்றும் ஆசியா பசிவிக் பகுதிகளில் 30 சதவீதம் மக்கள் செக்ஸ் கல்வியை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பல நபர்களுடன் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வில் சிலி, போலாந்து, சீனா உள்ளிட்ட 26 நாடுகளை சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் உலகிலேயே தாய்லாந்தில் 62 சதவீதம் மக்களும், அதற்கு அடுத்தப்படியாக சீனாவில் 58 சதவீதமும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 32 சதவீதம் இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, உலகளவில் பாதுகாப்பற்ற உறவுகளால் இளம் வயதினர் இடையே தேவையற்ற கர்ப்பமடைவது அதிகரித்து வருகிறது. கருத்தடை முறைகளை குறித்து கேட்பதற்கு சில நாடுகளில் மக்கள் வெட்கப்படுவதால், அது குறித்த சரியான அறிவு இல்லை. 

எகிப்தில் உள்ள 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளம் வயதினர் உறவு கொண்ட பின்பு, குளித்தால் கருத்தரிக்க மாட்டார்கள் என எண்ணுகின்றனர். இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள 35 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது மிகவும் பாதுகாப்பானது என கருதுகின்றனர். இதில் உலகளவில் பொதுவாக 15 சதவீதம் பேருக்கு கருத்தடுப்பு முறைகளில் விருப்பமே இல்லை என தெரிவித்துள்ளனர். (That's Tamil)

Monday, September 26, 2011

மகிழ்ச்சி செய்தி.... போர் குற்றத்திற்க்காக ராஜபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!


தற்போது அமெரிக்காவில் உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே மீது தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கில், அவருக்கு நியூயார்க் மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது .

விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த கர்னல் ரமேஷின் மனைவி வத்சலாதேவி நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில், போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளார் (வழக்கு எண்: 1:11-cv-06634-NRB). 

இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் தன் கணவர் கர்னல் ரமேஷை படுகொலை செய்துவிட்டதாக, வத்சலாதேவியின் சார்பில் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 -ம் தேதி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

ரமேஷின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கில் இலங்கை ராணுவ தளபதிக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜபக்சேவுக்கும் இப்போது சம்மன் அனுப்ப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து அவர் அவசரமாக இலங்கை திரும்பும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்.

ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்க சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற ராஜபக்சேவுக்கு அங்குள்ள தமிழர் மற்றும் அவர்களுக்கு ஆதரவான இன மக்கள் பெரும் எதிர்ப்பு காட்டினர். இதனால் நியூயார்க்கை விட்டு எங்கும் செல்ல வேண்டாம் என ராஜபக்சேவுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. 

மேலும் அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா இந்த முறை ராஜபக்சேயை சந்திக்கவும் மறுத்துவிட்ட நிலையில், அவருக்கு போர்க்குற்ற வழக்கில் நீதிமன்ற சம்மன் அனுப்பப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Saturday, September 24, 2011

என்னுடைய இந்த கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியுமா...?



எனக்கு சில சந்தேகங்கள் உங்களுக்கு எவ்வளவு அறிவு
 இருக்கிறது என்று சோதிக்க... 

அதனால் தான்  இந்த பதிவு..

கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம் அப்படி 
சொல்லிவிட்டால் நீங்கள் அறிவாளிதான்....


பகலில் நிலவு தெரியுமா? தெரியாதா?

தெரியும் என்ற சொல்லுக்கு எதிர்பதம் என்ன..?

பெண்ணின் மனதில் என்ன இருக்கு தெரியுமா?

பாகிஸ்தான் தீவிவாதத்தை கைவிடுமா?

என்ன ஒரு கேள்விக்கும் பதில் தெரியாதா..?

போய் நல்லா படிச்சிட்டு வாங்க பாஸ்..

நான் என்னவே உங்களை அறிவாளின்னு நினைச்சேன்...

எப்பூடி...


Thursday, September 22, 2011

அடப்பாவிகளே என்னையே 'தல' குனிய வச்சிட்டீங்களே! - வருத்தத்தில் அஜீத்


மங்காத்தா தண்ணி பார்ட்டியில் சோனாவை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என ஊரெங்கும் பேச்சாய் கிடப்பது, படத்தின் நாயகன் அஜீத்தை வருத்தப்பட வைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது மங்காத்தா மூலம் அஜீத்துக்கு.

ஆனால் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் தம்பி பிரேம், படத்தில் நடித்த மகத், வைபவ் என எல்லோருமே மது விருந்து கொண்டாடிய லட்சணம், படத்தின் வெற்றிக்கே கரும்புள்ளி போலாகிவிட்டதே என பெரிதும் வருத்தப்படுகிறாராம் படத்தின் ஹீரோவான அஜீத். 

ஏற்கெனவே ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் ஏக நம்பிக்கை கொண்டவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பார்ட்டியில் அஜீத்தும் கலந்து கொண்டார் என்றாலும், அவர் வந்த வேகத்தில் எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

'தல' போனபிறகுதான், தண்ணியில் கவிழ்ந்து தலை கால் புரியாமல் சோனா பலாத்காரம் வரை போய்விட்டதாம் நிலைமை. அடுத்தநாள் சோனா போலீசில் புகார் கொடுத்த பிறகுதான் விவரம் தெரிய வந்ததாம் அஜீத்துக்கு. விளைவு, மதுவிருந்து வைத்தவர், அதில் அத்துமீறியவரின் நண்பர் என அனைவரையும் கூப்பிட்டு, 'என்னங்க இது... தல தலன்னு சொல்லி தல குனிய வச்சிட்டீங்களே... இனி இதை மங்காத்தா பார்ட்டின்னு வெளிய சொல்லாதீங்க," என்று சொன்னதாக கிசுகிசுக்கிறார்கள்.

'பெரிய நட்சத்திரங்களுக்கு வரும் வழக்கமான சங்கடங்களில் இதுவும் ஒன்று. ஆனா ரசிகர்களுக்கு 'தல'யைப் பத்தி தெரியும்... விடுங்க', என்கிறார்கள் அஜீத்துக்கு நெருக்கமானவர்கள்!

Wednesday, September 21, 2011

நியூயார்க்கை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிகாரிகள் திடீர் தடை


ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள ராஜபக்சேவை, ஐநா. கூட்டத்தைத் தவிர வேறு எங்கும் போக வேண்டாம். நியூயார்க்கை விட்டு வெளியேற வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எங்கும் போக முடியாமல் நியூயார்க்கோடு முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜபக்சே.


ராஜபக்சேவுக்கு இலங்கையை விட்டு எங்கும் சுதந்திரமாக இருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து சென்ற அவர் லண்டனில் மிகப் பெரிய தமிழர் எதிர்ப்பைச் சந்தித்தார்.மேலும் அவர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் போன வேகத்தில் அவர் நாட்டுக்கு ஓடி வர வேண்டியதாயிற்று.

இந்த நிலையில் தற்போது ஐநா. கூட்டத்தில் பேசுவதற்காக வந்துள்ள ராஜபக்சேவை, நியூயார்க் நகரை விட்டு வெளியேற வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனராம். வெளியேறினால் போர்க்குற்ற வழக்கில் சிக்கிக் கைதாக நேரிடலாம் என்றும் அவருக்கு எச்சரிக்கப்பட்டுள்ளதாம்.

ஐநா. கூட்டத்திற்கு வருவதற்கு மட்டும்தான் உரிய பாதுகாப்பு தர முடியும். மாறாக பிற இடங்களுக்குப் போவதாக இருந்தால் அந்தப் பாதுகாப்பு தர முடியாது என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் நியூயார்க்கைத் தவிர வேறு எங்கும் போக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜபக்சே.

அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் உடையவர் ராஜபக்சே. இதனால் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புக்கும் அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். தற்போது அதில் அமெரிக்க அதிகாரிகள் மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர்.

Tuesday, September 20, 2011

அரசு கேபிளில் இன்று முதல் விஜய் டிவி, போகோ சேனல்: ஆனால், சன் டிவி இல்லை!


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் இன்று முதல் விஜய் டிவி, போகோ உள்ளிட்ட கட்டணச் சேனல்களைக் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கேபிள் டிவி இணைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நடவடிக்கைகளை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் சென்னை நீங்கலாக ஏனைய 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்கவும் தமிழக அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பின் மூலம் 90 சேனல்கள் ஒளிபரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவையைப் பெறும் சந்தாதாரர்களிடம் இருந்து மாதம் 70 ரூபாய் மட்டுமே கேபிள் டிவி ஆப்பரேட்டர்களால் வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இந்தச் சேவையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 2.9.2011 அன்று தொடங்கி வைத்தார். முதலில் இலவச சேனல்களை மட்டும் ஒளிபரப்பும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பின்னர் கட்டணச் சேனல்களையும் ஒளிபரப்பு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று முதல் விஜய் டிவி, ஜீ தமிழ், டிஸ்கவரி தமிழ், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், அனிமல் பிளாநெட், நியோ கிரிக்கெட், சோனி மேக்ஸ், ஏஎக்ஸ்என், எச்பீஓ, நேஷனல் ஜியாகிரபிக், என்டிடிவி, சிஎன்என், டைம்ஸ் நவ், ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், டென் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டணச் சேனல்களும் எவ்விதக் கூடுதல் கட்டணமும் இன்றி ஒளிபரப்பப்படும்.

இதன் மூலம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைந்துள்ள கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் இன்று முதல் மாதம் 70 ரூபாய் கட்டணத்திலேயே மேலே குறிப்பிடப்பட்ட கட்டணச் சேனல்களையும் கண்டுகளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மையினர் பார்க்கும் சன் டிவி சேனல்கள் குறித்து அதில் எந்தத் தகவலும் இல்லை.

Monday, September 19, 2011

ரா ஒன்னை இந்தியாவின் பரபரப்புக்குரிய படமாக்கிய ரஜினி!!


'ஒரே நிமிடம்... ஜஸ்ட் ஒரே காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கப் போகிறார்' - இந்த ஒரு செய்தி இத்தனை நாளும் தென்னிந்திய மக்களால் பெரிதாக பேசப்படாமல் இருந்த ஷாரூக்கானின் ரா ஒன் படத்தை, தலைப்புச் செய்திளில் இடம்பெறச் செய்துவிட்டது.

இதுவரை இந்தப் படத்தை ரஜினியின் ரோபோ காப்பி என்று பேசி வந்த வட இந்திய ரசிகர்களோ, ரஜினியே நடிக்கிறார் என்று தெரிய வந்ததும் மிக ஆவலுடன் அந்த செய்தி உண்மையாகும் தருணத்துக்காக காத்திருக்கின்றனர்.

அதுதான் 'ரஜினி மாஜிக்'!

வட இந்திய செய்தித் தாள்கள் மற்றும் இணையதளங்கள் இப்படித்தான் தொடர்ந்து சில தினங்களாக எழுதிவருகின்றன.

'ரா ஒன் படத்தை நம்பர் ஒன்னாக்கிவிட்டார் ரஜினி' என குறிப்பிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ். 'ரா ஒன்னை ரெட் ஒன்னாக்கிவிட்டார் சூப்பர் ஸ்டார்' என புகழாரம் சூட்டியுள்ளார் பிரபல சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை.

வட இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் படத்தில் ரஜினி நடித்தால், ரோபோவின் காப்பி என்ற இமேஜ் நிச்சயமாக மாறிவிடும் என்கிறார் பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ்.

சரி... இது சாத்தியம்தானா...ரஜினி உண்மையில் நடிக்கப் போகிறாரா ரா ஒன்னில்?

இந்தக் கேள்விதான் பெரும்பாலான ரசிகர்கள் மனதில்.

ரா ஒன் படத்தின் தயாரிப்பாளர் ஈராஸ் இன்டர்நேஷனல். இவர்கள்தான் ரஜினியின் ராணா படத்தை சௌந்தர்யாவுடன் இணைந்து தயாரிக்கிறார்கள். ஷாரூக்கான் ஏற்கெனவே ரஜினியிடம் 'இந்தக் காட்சியில் நடித்துத் தந்தால், படத்துக்கே அது ஒரு பெரிய கவுரவமாக இருக்கும்' என கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு ரஜினி என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.

ஈராஸ் நிறுவனத்தினரும் இதை தங்கள் விருப்பமாக தெரிவித்துள்ளனர். ஷாரூக்கானுக்காக இல்லாவிட்டாலும், ராணா தயாரிப்பாளர்கள் நலன் கருதியாவது ரஜினி இதைச் செய்யக்கூடும் என்பதுதான் திரையுலகில் பேச்சாக இருக்கிறது.

மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ள ரஜினி, பூரண ஒய்வுக்குப் பிறகு கேமராவுக்கு முன் நிற்கும்போது, அந்த அதி உயர்மின் வெளிச்சம் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும் இந்த ஒரு நாள் ஷூட் பயன்படும் என்று திரையுலகினர் சிலர் தெரிவித்தனர்.

இன்னொரு பக்கம், விநியோகஸ்தர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர், ரஜினி நடிக்கிறாரா இல்லையா என்பதைப் பார்த்த பிறகு இந்தப் படத்தை வாங்க. ரஜினி நடித்தால் தென்னிந்திய உரிமை பெரும் விலைக்குப் போகும் என்பதால், படத்தை நேரடியாக ஈராஸின் துணை நிறுவனமான அய்ங்கரனே ரிலீஸ் செய்யத் தயாராக உள்ளது.

இவை எல்லாமே ரஜினி சொல்லப்போகும் ஒற்றை வார்த்தை பதிலைப் பொறுத்து இருக்கிறது!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...