Wednesday, August 31, 2011

மங்காத்தா - அதிரடி விமர்சனங்கள்... mankatha review




நீண்ட இடைவேளைக்கு பிறகு அதிரடியாக வந்து 
அஜித் ஆடியிருக்கும் ஆட்டம்தான் மங்காத்தா... 
இன்றுமுதல் பட்டையை கிளப்ப களம் இறங்கிவிட்டது. 


இதன் விமர்சனங்கள் படம் வெளியான இன்றே நண்பர்களால் கொடுக்கப்பட்டுள்ளது...

அவைகளின் தொகுப்புதான் இவை உங்களுக்கு பிடித்த தளத்திற்க்கு சென்று படித்துக் கொள்ளுங்கள்.. நன்றி...



செங்கோவி 
மங்காத்தா - திரை விமர்சனம் 


பில்லசபி பிரபாகரன் 



தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி...!





Tuesday, August 30, 2011

தூக்கு தண்டனையை குறைத்தால் ராஜீவ் உயிரோடு வருவாரா- இளங்கோவன்


ராஜிவ் காந்தியும் அவருடன் கொல்லப்பட்ட அத்தனை பேரும் திரும்ப உயிரோடு திரும்ப வந்தால் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டி:

கேள்வி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் தண்டனையை குறைக்க வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதே?

இளங்கோவன்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். தலைவர் ராஜீவ் காந்தியும், தியாகி லீக் முனுசாமியும் அவர்களுடன் கொல்லப்பட்ட அத்தனை பேரும் திரும்ப உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம். 

கேள்வி: தூக்கு தண்டனை விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று கொடுத்த விளக்கம் பற்றி?

இளங்கோவன்: இந்தப் பிரச்சனையில் ஜெயலலிதா சரியான தகவலை தந்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு 3 பேரையும் தூக்கில் போடலாம் என்று சொல்லி விட்டு இப்போது கூடாது என சொல்வது கருணாநிதியின் அரசியல் நாடகம். 

கேள்வி: 3 பேரையும் தூக்கிலிட்டால் தமிழகத்தில் காங்கிரசின் எதிர்காலம் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறதே?

இளங்கோவன்: கொலை செய்தவனுக்கு என்ன தண்டனை என்று கோர்ட்டு சொல்லியிருக்கிறது. அதை நிறைவேற்றுவதால் காங்கிரசின் எதிர்காலம் எந்த விதத்திலும் பாதிக்காது என்றார்.

Monday, August 29, 2011

ராஜிவ் கொலையாளிகள்‌ தூக்கு தண்டனை: தலையிட முடியாது- சட்டசபையில் முதல்வர் ஜெ.,




ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் துரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரையும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல்வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவித்தார். 

ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெ., சட்டசபையில் இது தொடர்பான விஷயத்திற்கு விளக்கம் அளித்து இவர்களை காப்பாற்றும் அதிகாரம் தமக்கு இல்லை , இதில் தான் தலையிட முடியாது. என முற்றுப்புள்ளி வைத்தார். 

தற்கொலை செய்ய வேண்டாம் முதல்வர் ஜெ., : 

இது தொடர்பாக சபையில் அவர் பேசியதாவது: ராஜிவ் கொலையாளிகளுக்கான கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து இதில் நான் தலையிட முடியாது. 3 பேரும் மீண்டும் ஜனாதிபதியை அணுக வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்ற கூடாது எனவலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்த செங்கொடி சம்பவம் வருத்தமளிக்கிறது. யாரும் தற்கொலை முடிவுக்கு செல்ல வேண்டாம்.

ராஜிவ் கொலையாளிகள்‌ தூக்கு தண்டனை: தலையிட முடியாது- சட்டசபையில் முதல்வர் ஜெ.,


ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் துரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரையும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல்வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவித்தார். 

ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெ., சட்டசபையில் இது தொடர்பான விஷயத்திற்கு விளக்கம் அளித்து இவர்களை காப்பாற்றும் அதிகாரம் தமக்கு இல்லை , இதில் தான் தலையிட முடியாது. என முற்றுப்புள்ளி வைத்தார். 

தற்கொலை செய்ய வேண்டாம் முதல்வர் ஜெ., : 

இது தொடர்பாக சபையில் அவர் பேசியதாவது: ராஜிவ் கொலையாளிகளுக்கான கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து இதில் நான் தலையிட முடியாது. 3 பேரும் மீண்டும் ஜனாதிபதியை அணுக வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்ற கூடாது எனவலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்த செங்கொடி சம்பவம் வருத்தமளிக்கிறது. யாரும் தற்கொலை முடிவுக்கு செல்ல வேண்டாம்.

Saturday, August 27, 2011

சரித்திரத்துக்கு திரும்பும் தமிழ்ப் படங்கள்!


ஊமைப் படமாக இருந்த காலத்திலும் சரி, பேசும் படமாக அது பரிணமித்த கட்டத்திலும் சரி... தமிழ் சினிமாவை புராண அல்லது வரலாற்றுக் கதைகளே முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தன.

தமிழ் மன்னர்கள், சரித்திரத்தில் இணையில்லாத வீராதி வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மகாபாரத-ராமாயணக் கதைகள் போன்றவைதான் பெரும்பாலும் சினிமாவாக எடுக்கப்பட்டன.

ஆனால் அறுபதுகளுக்குப் பின் சரித்திரப் படங்கள் வருவது படிப்படியாகக் குறைந்தது. எண்பது, தொன்னூறுகளில் சரித்திரப் படங்கள் வருவதே அடியோடு நின்று போயின. அப்படியே ஓரிரு படங்கள் வந்தாலும் அவை ரசிகர்களை கவராமலேயே போய்விட்டன.

ஆனால் 2000-க்குப் பிறகு மீண்டும் சரித்திரப் படங்கள் வரத் தொடங்கிவிட்டன. ஆனால் பழைய காலத்தைப் போலல்லாமல் தொழில்நுட்பம் மற்றும் நம்பகத் தன்மை, பிரமாண்டம் அனைத்தும் கலந்த வகையில் இந்தப் படங்கள் வந்தன.

இந்தி, தெலுங்கிலும் இந்த நிலைதான் நீடித்தது. தெலுங்கில் மகாதீரா வெற்றிக்குப் பிறகு பல படங்கள் அதே பாணியில் தயாராகின்றன. தெலுங்கில் ராமாயணம் ஸ்ரீராம ராஜ்யமாக பிரமாண்டமாகத் தயாராகிறது.

தமிழில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் பெற்ற வெற்றி அனைவரையுமே கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டது.

இந்த 2011-ல் தயாராகும் பல படங்கள் சரித்திர அல்லது புராண காலகட்டத்தைச் சேரந்த படங்களாகவே உள்ளன.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க ரூ 130 கோடியில் உருவாகும் ராணா படம் முழுக்க முழுக்க சரித்திரக் கதைதான். இதில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ஏழாம் அறிவு கதையும் சித்தர்கள் காலத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்கள். போகர் என்ற சித்தர் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம் என்கிறது கோடம்பாக்கம் வட்டம். படத்தின் ஸ்டில்களும் அதைத்தான் காட்டுகின்றன.

விக்ரம் நடிக்கும் கரிகாலன் படம் முழுக்க முழுக்க சரித்திரப் பின்னணி கொண்டது. ஆங்கிலத்தில் வெளியான ட்ராய், கிளாடியேட்டர் மாதிரியான அதிரடி ஆக்ஷன் வரலாற்றுப் படம் இது.

சிம்புதேவன் - தனுஷ் இணையும் மாரீசன், கிமு 12-ம் நூற்றாண்டுக் கதை. கிட்டத்தட்ட 3200 ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது.

சற்குணம் இயக்கும் வாகை சூடவா, சமகால வரலாற்றுப் படமாக உருவாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையை மணிரத்னம் திரைப்படமாக எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இப்போதைக்கு இந்தப் படம் தள்ளிப்போடப்பட்டாலும் நிச்சயம் எதிர்காலத்தில் உருவாகும் என அவர் குறிப்பிட்டிருப்பது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

பாரதிராஜா இயக்கிவரும் அன்னக் கொடியும் கொடிவீரனும் கூட ஒரு சரித்திரக் கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் செல்வராகவன், மிஷ்கின், கமல்ஹாஸன் போன்றவர்களும் சரித்திரப் படம் எடுப்பதற்கான ஆயத்தங்களில் உள்ளனர். மதராஸப்பட்டணம் தந்த இயக்குநர் விஜய்யும் கூட விரைவில் அடுத்த சரித்திரப் பட ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்துள்ளார்.

சரித்திரப் படம் எடுப்பது அத்தனை சுலபமான காரியமல்ல. ஆனாலும் இளம் இயக்குநர்கள் அதில் உள்ள சவாலை விரும்பி ஏற்று சரித்திரப் படம் பண்ணுவது, இந்த கலை மீது அவர்களுக்குள்ள பிடிப்பைக் காட்டுகிறது. இன்னொன்று, முன்பு பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்கள் தங்கள் கிராமத்து அனுபவங்களை அப்படியே செல்லுலாய்டில் செதுக்கித் தந்தார்கள். இன்றைய படைப்பாளிகள் பலருக்கு அந்தப் பின்னணியோ, ஆழந்த அனுபவமோ இருப்பதில்லை.

எனவேதான் ஏற்கெனவே தயாராக உள்ள சரித்திரக் கதைகளை தொழில்நுட்ப பிரமாண்டம் சேர்த்துக் கொடுத்து மக்களை ஈர்க்க முயற்சிக்கின்றனர்.

எப்படிப் பார்த்தாலும் இந்த ஆண்டு மற்றும் அடுத்த சில ஆண்டுகளில் மட்டுமே 20-க்கும் மேற்பட்ட சரித்திரப் படங்கள் வரவிருக்கின்றன. சரித்திரத்தின் மீது இந்த தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ள ஆர்வமே இந்த நிலைக்குக் காரணம் என்கிறார்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள்.

சொல்லும் விதத்தில் சொன்னால் நிச்சயம் சரித்திரம் இனிக்கவே செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்தான்!

Friday, August 26, 2011

17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழகத்தில் தூக்குத் தண்டனை


17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்திற்கு தூக்குத் தண்டனை திரும்பி வந்துள்ளது. தமிழகத்தில் கடைசியாக தூக்கிலிடப்பட்டவர் ஆட்டோ சங்கர்.

பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிடப்படுவர் என்று வேலூர் சிறை நிர்வாகம் தெரிவித்து விட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பும், பதட்டமும் பற்றிக் கொண்டுள்ளது. இதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது 1995ம் ஆண்டுதான். அந்த ஆண்டு, ஏப்ரல் 27ம் தேதி ஆட்டோ சங்கர் சேலம் சிறையில் தூக்கிலிடப்பட்டார். தொடர் கொலைகளில் ஈடுபட்டு கைதான சங்கருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் சிறையில் வைத்து தூக்கிலிடப்பட்டார்.

இந்தியாவைப் பொறுத்தவரை கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது 2004ம் ஆண்டு கொல்கத்தாவில். அந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி அலிப்பூர் மத்திய சிறையில் தனஞ்செய் சாட்டர்ஜி என்பவர் தூக்கிலிடப்பட்டார். 14 வயது சிறுமியை மிகக் கொடூரமாக கற்பழித்துக் கொலை செய்ததற்காக அவருக்கு இந்தத் தண்டன நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கு மீண்டும் தூக்குத் தண்டனை திரும்பி வந்துள்ளது. தூக்கில் போடும் தேதியை சிறை நிர்வாகம் முடிவு செய்து விட்டதைத் தொடர்நது தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளும் அமைதியான முறையில் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

தூக்குமரத்தை தயார் செய்வது, தூக்கில் போடுவதற்கான நபரை தேடுவது, கயிறு உள்ளிட்டவற்றை வாங்குவது உள்ளிட்ட பணிகள் தொடங்கியிருப்பதாக தெரிகிறது. தூக்கு மரத்தை எண்ணெய் போட்டு தயார் செய்யும் பணியும் நடந்து வருகிறதாம்.

வேலூர் சிறையைப் பொறுத்தவரை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் எப்போதோ தயார் நிலையில் வைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

வேலூர் சிறையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சிலர் ஏற்கனவே அடைக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரான முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோர் இங்குதான் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

17 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் தூக்குத் தண்டனை, அதுவும் ஒரே நேரத்தில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது!


அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா அமெரிக்காவில் மட்டும் 70 திரையரங்குகளில் வெளியாகிறது.

அஜீத்தின் படம் ஒன்று அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மங்காத்தாவில் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, ப்ரேம்ஜி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'மல்டி ஸ்டாரர்' படம் இது என வெங்கட் பிரபு கூறி வருகிறார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இடையில் படம் வெளியிடுவதில் ஸ்டுடியோ கிரீன், சன் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் என தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே ஒரு 'மங்காத்தாவே' நடந்து வந்த நிலையில், இப்போது புதிதாக ராதிகாவின் ராடான் நிறுவனமும் மங்காத்தா வெளியீட்டில் களமிறங்கியுள்ளது.

படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாவது உறுதி என தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி திரும்ப திரும்ப உறுதி கூறினாலும், இன்னும் நிச்சயமற்ற நிலைதான் நிலவுகிறது.

Monday, August 22, 2011

காங்கிரசை அடியோடு அழித்துவிட்டுத்தான் ஓய்வு - மன்மோகன் சிங்


சுதந்திரத்திற்குப் பிறகு, "காங்கிரஸ்' என்ற பெயரை, எந்த ஒரு அரசியல் கட்சியும் உபயோகப்படுத்தாமல், தடை செய்திருக்க வேண்டும். அன்று, அப்படி செய்யாததாலே, இன்று, கறை படிந்த ஊழல் கட்சியாக அது திகழ்கிறது.அதிலும், 2004ம் ஆண்டு முதல், காங்கிரஸ் ஆட்சியில், லட்சம் கோடிகளில் ஊழல் செய்து, முழுமையான ஊழல் கட்சியாகவும் திகழ்கிறது. உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும், இதைப் பார்த்து வெட்கி, கதர் சட்டை அணிவதையே விட்டு விடுவரோ என, நினைக்கத் தோன்றுகிறது.

காந்தியவாதிகளில் ஒருவரான அன்னா ஹசாரேவை, ஒரு பயங்கரவாதியைப் போல பார்க்கிறது மத்திய அரசு. மேலும், அறவழியில், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் அவரையும், அவர் ஆதரவாளர்களையும், மக்கள் விரோத சக்தியாகப் பார்க்கிறது.இந்திய காங்கிரஸ் கட்சி, சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியாகவோ 

அல்லது லிபியா, எகிப்து நாட்டில், ஊழல் ஆட்சி செய்த அதிபர்களைப் போன்றோ, சர்வாதிகாரி ஹிட்லரைப் போன்றோ செயல்பட்டு, ஊழலுக்கு எதிராக போராடுபவர்களை அடக்க நினைக்கிறது."ஊழல் அற்றவர்' எனக் கூறிக்கொள்ளும் பிரதமர், 2004ம் ஆண்டு முதல், இன்று வரை, பதவியில் ஒட்டிக்கொண்டு, "ஊழலை ஒழிப்பேன்' என கூறி, 
ஊழலை வளர்த்தது தான் மிச்சம். 

"ஊழலை ஒழிக்க, மந்திரக்கோல் ஏதும் நம் கைகளில் இல்லை' என, பேட்டி கொடுக்கிறார்.தன் அதிகாரத்தை கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளில், ஊழலை அவரால் ஒழிக்கவோ அல்லது குறைக்கவோ முடியவில்லை; இனியும் அது நடக்கும் என நினைத்தால், நாம் தான் முட்டாள்கள் ஆவோம். மேடையில் வெறுமே பேச 
மட்டும், பிரதமருக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டிருக்கிறது; செயல்பட அல்ல.அனேகமாக மன்மோகன் சிங், மீதமுள்ள தன் பதவிக் காலத்தில், காங்கிரசை அடியோடு அழித்துவிட்டுத்தான், ஓய்வு பெறுவார் போலும்!

Thursday, August 18, 2011

போர் குற்றம் பற்றி ஜெ. பேசக்கூடாது; தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எல்லாம் கிடையாது-கோத்தபய


ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறையிருந்தால் அவர்களின் மறுவாழ்வு பற்றி மட்டுமே பேச வேண்டும். அதை விட்டுவிட்டு போர்க் குற்றம், விசாரணை என்றெல்லாம் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசக் கூடாது என்று இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளரும் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய கூறியுள்ளார்.

ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், இலங்கை போர் குறித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அரசியல் ஆதரவு பெறுவதற்கான முயற்சியே தவிர வேறல்ல.

தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சி தான். அவை இலங்கையின் உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். இலங்கை மக்கள் மீது எங்களுக்கு யாரை விடவும் அக்கறை அதிகம் உண்டு.

ஜெயலலிதாவிற்கு இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இலங்கை தமிழர்கள் அதிகம் வசிக்கும் கடற் பரப்பிற்குள் வந்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை முதலில் தடுத்து நிறுத்தட்டும். இது தான் இலங்கைத் தமிழர்களுக்கு அவர் செய்ய வேண்டிய முதல் வேலை.

இலங்கைத் தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும், அதுதான் முக்கியமானது. இதற்குத் தான் ஜெயலலிதாவும் முதலில் முக்கியத்துவம் தர வேண்டும்.

அதை விட்டுவிட்டு போர்க் குற்றம் என்றெல்லாம் பேசுவது எந்தப் பயனையும் தராது. எப்படி இங்கே சர்வதேச விசாரணை நடத்த முடியும்?. நாங்கள் அப்படி என்ன தவறு செய்துவிட்டோம்?. பன்னாட்டு விசாரணை என்று சொல்வதே தப்பு. சில நாடுகள் மட்டுமே அதை ஆதரிக்கின்றன.

எங்களுக்கு ரஷ்யா, சீனா, இந்தியாவும் என்று நிச்சயமாக நம்புகிறேன், பாகிஸ்தான், ஏராளமான ஆப்பிரிக்க நாடுகள், வளைகுடா நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆதரவாக உள்ளன. இவர்கள் தான் உண்மையான சர்வதேச நாடுகள். ஒரு சில நாடுகள் சொல்லும் கருத்து சர்வதேச கருத்து ஆகிவிடாது.

தமிழர்களுக்கு இதற்கு மேலும் அதிகாரப் பகிர்வு எல்லாம் தர முடியாது. இப்போது உள்ள அரசியல் சட்டத்தின் கீழ் சிங்களர்களும் தமிழர்களும் சேர்ந்து வாழ முடியும். விடுதலைப் புலிகள் போய்வி்ட்ட நிலையில், அதிகாரப் பகிர்வு என்பதெல்லாம் இனி எடுபடாது.

இதற்கு மேல் எதைத் தந்துவிட முடியும்?. என்ன தர வேண்டுமோ அதைத் தந்தாகிவிட்டது.

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக் களங்கள் என்ற ஆவணப்படம் போலியானது, அந்த தொலைக்காட்சியின் நடவடிக்கை நேர்மையற்றது என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் வாழ்ந்த வீட்டைப் பார்வையிட தமிழர்களுக்குத் தடை:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வசித்து வந்த வீட்டைப் பார்வையிட வட பகுதி தமிழர்களுக்கு இலங்கை அனுமதி மறுக்க ஆரம்பித்துள்ளது.

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள வீட்டில் பிரபாகரன் வசித்து வந்தார். முதலில் இந்த வீட்டைக் காண வட பகுதி தமிழர்களுக்கு அனுமதி தந்த அரசு, இப்போது அனுமதி மறுக்க ஆரம்பி்த்துள்ளது.

Wednesday, August 17, 2011

ரஜினி-ஷங்கர் திடீர் சந்திப்பு...


பாலிவுட்டில் ஷோ மேன் ஆப் இந்தியா என்ற பெருமைக்குரிய அடைமொழியைப் பெற்றவர்கள் இருவர்தான். ஒருவர் ராஜ்கபூர். அவருக்குப் பிறகு சுபாஷ் கய்.

இன்று அந்தப் பட்டப்பெயர் பாலிவுட்டில் யாருக்குமே இல்லை. மாறாக தென்னிந்திய திரைப்பட உலகின் பாக்ஸ் ஆபீஸ் கிங் எனப் புகழப்படும் இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமாகியுள்ளது.

எந்திரனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஷங்கரைத்தான் பாலிவுட்டிலிருப்பவர்களும் ஷோமேன் ஆப் இந்தியா எனப் புகழ்கின்றன.

அந்த ஷோமேன் இன்று தனது 48வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்! 

இதுவரை 10 படங்களை இயக்கியுள்ளார் ஷங்கர். அவற்றில் இந்தியில் அவர் எடுத்த நாயக் (முதல்வன் ரீமேக்) தவிர மற்ற அனைத்தும் வெற்றிப் படங்கள்தான். குறிப்பாக பாய்ஸ் மட்டும்தான் இவற்றில் 100 நாட்கள் ஓடியது. மற்ற படங்கள் வெள்ளி விழா கண்டன.

அவரது கடைசி இரு படங்கள் சிவாஜி மற்றும் எந்திரன் சூப்பர் ஸ்டார் ரஜினி நாயகனாக நடித்தவை. எந்திரனின் வெற்றிதான் ஷங்கரின் இத்தனை வருட திரைவாழ்க்கையின் உச்சம் என்றால் மிகையல்ல.

பொதுவாக ரஜினியின் படங்களில் அவரைத் தவிர, வேறு யாரையும் ரசிகர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் எந்திரன் வெற்றியில் ரஜினிக்கு இணையான முக்கியத்துவத்தை ஷங்கருக்கும் அளித்தனர் ரசிகர்கள். வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு ரீமேக் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இந்தப் படம் அவரது வெற்றிப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையுமா என்ற கேள்வியோடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

பிறந்த நாள் காணும் அவருக்கு ரசிகர்களும் திரையுலகப் பிரமுகர்களும் இன்று வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

ஷங்கரின் ஹீரோ ரஜினியும் இன்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார்.

Tuesday, August 16, 2011

ஆந்திராவிலும் தமிழ்ப் படங்களுக்கு நெருக்கடி ஆரம்பித்துவிட்டது


தமிழ் சினிமாக்களுக்கு தமிழகத்துக்கு வெளியே அதிக வரவேற்புள்ள மாநிலம் ஆந்திரா. இங்கு எந்த தமிழ்ப்படமாக இருந்தாலும் அதன் டப்பிங் மற்றும் ஒரிஜினல் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது வழக்கம்.

ரஜினியின் அனைத்துப் படங்களும் நேரடியாகவும், தெலுங்கு டப்பிங் ஆகவும் ஆந்திராவில் வெளியாகி வசூல் சாதனைப் படைக்கின்றன. எந்திரன் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரேநேரத்தில் இங்கு வெளியானது. ரூ 45 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது இந்தப் படம். 

அவன் இவன் படம் வாடு வீடு என்ற பெயரில் வெளியாகி 18 கோடிகள் வரை குவித்தது. கோ படம் ரங்கம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு நல்ல வசூல் கண்டது.

சூர்யாவின் கஜினி, கார்த்தியின் நான் மகான் அல்ல போன்ற படங்கள் தெலுங்கில் நல்ல வசூல் கண்டன.

சமீபத்தில் தமிழில் வெளியான ராகவா லாரன்ஸின் காஞ்சனா, தெலுங்கில் அதே பெயரில் டப் செய்யப்பட்டது. இந்தப் படம் ரூ 3 கோடிக்கு விற்கப்பட்டது. இதுவரை ரூ 15 கோடிக்குமேல் அள்ளிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தெலுங்கு விநியோகஸ்தர்கள் தமிழ்ப் படங்கள் மூலம் ரூ 35 கோடி வரை சம்பாதித்துள்ளனர். 

இதனால் விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் நேரடி தமிழ் மற்றும் தமிழ் டப்பிங் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நேரடி தெலுங்குப் படத்தைவிட, நேரடி தமிழ்ப் படத்துக்கு நல்ல ஸ்கிரீன்களை ஹைதராபாத்தில் ஒதுக்குகிறார்களாம்.

இந்த நிலை தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. தமிழ் டப்பிங் படங்களுக்கு இப்போது ஆந்திராவில் 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனை 50 சதவீதமாக உயர்த்துமாறும், தமிழ்ப் படங்களின் பிரிண்ட் எண்ணிக்கையை 50க்குள் கட்டுப்படுத்துமாறும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்கம் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இனி வரவிருக்கும் தமிழ்ப் படங்கள் முக்கியமானவை என்பதால் இந்த கட்டுப்பாட்டை இப்போதே விதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

தெலுங்கு சினிமாக்களின் தரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு, நன்றாக போய்க் கொண்டிருக்கும் வியாபாரத்தைக் கெடுக்கிறார்களே என புலம்புகிறார்கள் ஆந்திர விநியோகஸ்தர்கள்.

Monday, August 15, 2011

ஆக 30-ல் அஜீத்தின் மங்காத்தா! - வெங்கட் பிரபு


அஜீத்தின் பொன்விழா படமான மங்காத்தா வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தத் தகவலை சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.

அஜீத், திரிஷா, அர்ஜுன், லட்சுமிராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்தப் படத்துக்காக காத்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. ரஜினியின் எந்திரன் படத்துக்குப் பிறகு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ஆடியோ சிடி மங்காத்தாதான் என்று விற்பனையாளர்கள் பாராட்டும் அளவுக்கு பரபரப்பான விற்பனையில் உள்ளது இந்த சிடிக்கள்.

சமீபத்தில் மங்காத்தா பட வெளியீடு குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறுகையில், "மங்காத்தா படத்தில் அஜீத் கெட்டவனாக நடித்துள்ளார். இந்தக் கதையில் மொத்தம் 5 கேரக்டர்கள். அதில் 4 பேர் கெட்டவர்கள். 5-வது ஆள் ரொம்ப ரொம்ப கெட்டவர். 

எனது படங்களின் கதை கிரிக்கெட்டோடு தொடர்புடையதாகவே இருக்கும். சென்னை 28-ல் பசங்களோட ஏரியா கிரிக்கெட்டை சொன்னேன். "சரோஜா"வில் கிரிக்கெட் போட்டி பார்க்க போனவர்கள் கதையை சொன்னேன். "மங்காத்தா"வில் கிரிக்கெட் பின்னால் உள்ள சூதாட்டங்களைச் சொல்லி இருக்கிறேன். 

அஜீத்துக்கு பிடித்தமான மோட்டார் சைக்கிள் ரேசையும் படத்தில் சேர்த்துள்ளோம். இந்த படத்தின் பாடல்களை யுவன்ஷங்கர்ராஜா பிரமாதமாக கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியமான கெட்டப்பில் வெள்ளை முடியோடு அஜீத் வருகிறார். வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இம்மாதம் 30ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் படத்தில் அஜீத்துக்கு இணையான வேடத்தில் வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இது அஜீத்தின் பொன்விழா படம். அஜீத்துக்குதான் முக்கியத்துவம் இருக்கும் எனத் தெரிந்தும் அர்ஜூன் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார்," என்றார். 

மங்காத்தாவை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் வெளியிடுகிறது.

Saturday, August 13, 2011

அடடா இதை கட்டாம பாத்துங்க..?


உடன் பிறவாவிட்டாலும், சகோதர அன்பை பரிமாறிக் கொள்ள, ஆண்களின் கைகளில் ராக்கி கட்டும் ரக்ஷாபந்தன் விழாவை இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாட்டு இந்தியர்களிடையேயும் சகோதர அன்பை பகிர்ந்துக் கொள்ள அன்பின் பிணைப்பாக கட்டப்படுவது, ராக்கி. ராக்கி கயிறுகளை ஆண்களின் கைகளில் பெண்கள் கட்டுவார்கள். இதன் மூலம் அந்த ஆண், ராக்கி கட்டிய பெண்ணுக்கு சகோதரன் முறையாகிவிடுகிறான்.

வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழா, தமிழகத்திலும் சமீபக்காலமாக பிரபலமடைந்து வருகிறது. ஆவணி மாத துவக்கத்தில் வரும் பவுர்ணமி அன்று இது கொண்டாடப்படுகிறது.

ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது, மகாபலியின் தீவிர பக்தியில் அகம் குளிர்ந்த விஷ்ணு, என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு மகாபலி, தனது நாட்டை விஷ்ணு தான் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தான். அதையேற்றுக் கொண்ட விஷ்ணு, வைகுண்டத்தில் இருந்து இறங்கி வந்துவிட்டார்.

கணவனை காணாத லட்சுமி, மகாபலியின் நாட்டிற்கு வந்தார். அங்கு காவலனாக இருந்த கணவனை காப்பாற்ற லட்சுமி ஏழை பெண்ணாக உருமாறினார். பின்னர் மகாபலியிடம் சென்று ஒரு கயிறை கட்டிவிட்டு, தனது நிலையை கூறியுள்ளார். இதில் மகிழ்ச்சியடைந்த மகாபலி, விஷ்ணுவை அனுப்பி வைத்தான். இந்த கயிறே பின்னாளில் ராக்கி கயிறாக மாறியதாக கூறப்படுகிறது.

ராக்கி கட்டும் போது, சகோதரரின் சுக வாழ்விற்காக சகோதரிகள் சாமியை வேண்டுகின்றனர். அதன்பின், சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டுகின்றனர். கயிறு கட்டும் போது, சகோதரிகளுக்கு அன்பின் காணிக்கையாக பணம், நகை, பரிசுப் பொருட்களை சகோதர்கள் அளிக்கின்றனர். ஜாதி,மாத, இன, மொழி என எல்லாவற்றை கடந்து, ராக்கி காட்டும் பழக்கம் சகோதர அன்பை தெரிவிப்பதன் ஒரு முக்கிய வெளிப்பாடாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, August 11, 2011

ராமதாஸின் அடுத்த காமெடி... திராவிட கட்சிகளை ஒழிப்பதே முதல் வேலை...


தமிழ்நாட்டை சீரழித்ததே இந்த திராவிடக் கட்சிகள்தான். இவற்றை ஒழிப்பதுதான் பாமகவின் முதல் வேலையாகும் என்று கட்சி தொடங்கிய நாள் முதல் திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்து ஓய்ந்து போய் விட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை முதல் வேலையாக கொண்ட கட்சி பாமக. ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி வைத்து புதிய சாதனை படைத்த கட்சி இது. இந்த நிலையில் திராவிடக் கட்சிகள்தான் தமிழ்நாட்டை சீரழித்து விட்டன. எனவே அதை ஒழிப்பதுதான் பாமகவின் முதல்வேலைஎன்று பேசியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

வேலூர் சத்துவாச்சாரியில் நடந்த பாமக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதுதான் இப்படிக் கூறினார் ராமதாஸ். அவர் பேசுகையில்,

தமிழகத்தில் 1967-க்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் 18 மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் இருந்தன. ஆனால், இன்று 11 ஆயிரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்வழிக் கல்விதான் இருந்தது. கல்விக் கொள்ளையர்களை அனுமதித்தது திராவிடக் கட்சிகள்தான். சாராயக் கடைகளைத் திறந்துவிட்டு சமூகம் கெடுவதற்கும், இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றியதற்கும், விவசாயம் பாழ்பட்டுப் போனதற்கும் காரணமான திராவிட கட்சிகளை அப்புறப்படுத்துவது வரலாற்றுக்கடமையாகும்.

சமச்சீர் கல்வியின் மீது தமிழக அரசுக்கு நம்பிக்கை இருந்தால் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் மட்டுமே இருக்கும் என்ற சட்டத்தைச் சட்டப்பேரவையின் இந்தக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர வேண்டும் 

சமச்சீர் கல்வியில் முழு வெற்றி கிடைக்கவில்லை. கருணாநிதி அரைகுறை சமச்சீர் கல்வியைத்தான் கொண்டுவந்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் மற்ற கட்சிகள் அப்புறப்படுத்தப்பட்டு பாமக மட்டுமே வெற்றி பெற வேண்டும். அனைத்து நிலையிலும் தலைகீழாக மாற்றப்பட்டுள்ள தமிழகத்தை மீட்கும் மீட்பராகப் பாமக வந்துள்ளது என்றார் ராமதாஸ்.

Wednesday, August 10, 2011

இரண்டு பெண் குழந்தைகள் உள்ள வீடா...? ஒரு புதிய ஆய்வு....


மனமகிழ விளையாட மழலைச் செல்வம் இல்லையே என்று ஏங்குவோர் பலர் இருக்கின்றனர். ஆனால் பிறக்கும் பிள்ளை பெண்ணாக பிறந்துவிட்டாலே இல்லாத சோகமெல்லாம் அவர்களை சூழ்ந்து கொள்கிறது. ஆஸ்திக்கு ஆணும், ஆசைக்கு பெண்ணும் வேண்டும் என்று வேண்டினாலும் காலச் சூழ்நிலையால் இரண்டுமே பெண்ணாகி விட்டால் என்ன செய்வது?

கவலைப்பட வேண்டாம் என்கிறது ஒரு ஆய்வு. இரண்டு பெண்குழந்தைகள் இருக்கும் வீடுதான் ஆனந்தமயமான வீடு என்கிறது புதிய ஆய்வு ஒன்று. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை ஆய்வு செய்ததில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள் இங்கே…

தொல்லை இல்லா பிள்ளைகள்

ஒரு வீட்டில் இரண்டு பெண்குழந்தைகள் இருந்தால் அங்கே சண்டை சச்சரவு எழ வாய்ப்பே இல்லை என்று தெரியவந்துள்ளது. அந்த குழந்தைகள் சமர்த்தாக விளையாடுமாம். வீட்டு வேலைகளிலும் உதவியாக இருக்குமாம். அரிதாகத்தான் அம்மா, அப்பாவுக்கு தொல்லை தருவார்கள்.

குழந்தைகளின் ஒத்துழைப்பு

ஆண்குழந்தைகளைப் போல பெண் குழந்தைகள் அதிகமாக கூச்சல் போடுவதில்லை. அவர்களுக்கிடையே சண்டைகள் ஏற்படவும் வாய்ப்பில்லை. அம்மாவிடம் செல்லமாக இருக்கும் குழந்தையை அவசர நேரத்தில் அப்பாவிடம் விட்டுச் சென்றாலும் அடம்பிடித்து அழமாட்டார்களாம். அந்த சூழலுக்கேற்ப பெற்றோருடன் அடம்பிடிக்காமல் பிரியமாக இருந்து ஒத்துழைப்பார்களாம்.

இந்த குழந்தைகளின் கலகலப்பான பழக்கவழக்கங்களும், சுற்றி இருப்பவர்களுக்கு உதவும் குணம், ஒத்துழைக்கும் குணம் போன்றவை மற்றவர்களையும் கவர்ந்துவிடுகிறது. இதனால் அக்கம் பக்கத்தவர்கூட இந்த சகோதரிகளை விரும்ப தொடங்கிவிடுவார்கள் என்கிறது ஆய்வு முடிவு.

புத்திசாலி ஆண் குழந்தைகள்

இரண்டு பெண் குழந்தைகளுக்கு அடுத்தபடியாக ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ள வீடு ஓரளவு சந்தோஷமாக இருக்கிறதாம். இந்தக் குழந்தைகள் 86 சதவீத அளவில் ஒருவருக்கொருவர் பாசத்துடன், இணக்கமான நட்புடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

இரண்டும் ஆண் குழந்தைகள் உள்ள குடும்பத்தினர் சந்தோஷம் அனுபவிப்பதில் மூன்றாவது நிலையில் இருக்கிறார்கள். மற்றவருக்காக பல விஷயங்களை புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்பதில் ஆண் குழந்தைகள் கெட்டிக்காரர்களாம். ஆனால் இவர்கள் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் அரவணைப்பைத்தான் விரும்புவதாக தெரிகிறது. மற்றவர் பொறுப்பில் விட்டுவிடும் சூழல் வந்தால் அடம்பிடிப்பார்கள் என்கிறது, அந்த ஆய்வு முடிவு.

இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள குழந்தைகள் குறித்த தர வரிசை...

இரண்டு பெண் குழந்தைகள்.
ஒரு ஆண், ஒரு பெண்.
இரண்டு ஆண்.
மூன்று பெண்.
மூன்று ஆண்
நான்கு ஆண்
இரண்டு பெண் ஒரு ஆண் 
இரண்டு ஆண் ஒரு பெண்
மூன்று ஆண் ஒரு பெண்
மூன்று பெண் ஒரு ஆண்
இரண்டு ஆண் இரண்டு பெண்
நான்கு பெண்

Tuesday, August 9, 2011

அஜீத்தின் மங்காத்தா பாடல்கள்... Mankatha Songs Mp3

அஜீத்தின் மங்காத்தா பாடல்கள்...


சமச்சீர் கல்வி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...


பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்தது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் முதல் கட்டமாக 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் திமுக அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறிய தமிழக அரசு இத்திட்டத்தை நடப்பாண்டில் அறிமுகப்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தது. இதுதொடர்பாக சட்டசபையில் சட்டத் திருத்தமும் கொண்டு வந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்திருத்தத்திற்கு தடை விதித்தது. மேலும் நடப்பாண்டிலேயே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துமாறும் அது உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும். மற்ற வகுப்புகளில் அமல்படுத்துவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கிதலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் தொடர வேண்டும் என தீர்ப்பளித்தது.

இதையடுத்து இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி்மன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. அந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பு, பெற்றோர்கள் தரப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தரப்பு என முத்தரப்பில் வாதங்கள் நடந்தன. கடந்த வியாழக்கிழமையன்று வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. காலை 10.30 மணிக்கு நீதிபதி ஜே.எம்.பன்சால், தீபக் வர்மா மற்றும் செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது.

தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி:

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை கோர்ட் ஏற்கிறது. மொத்தம் 25 காரணங்களை ஆராய்ந்து இந்த கோரிக்கைகளை நாங்கள் ஏற்கிறோம்.

தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.

சமச்சீர்கல்வித் திட்டத்தை இன்னும் 10 நாட்களில் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வி அமலாகிறது

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வருகிறது. நடப்பாண்டிலேயே 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்று தமிழக அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்றே சட்டசபையில் தெரிவித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

Monday, August 8, 2011

உடமபில உள்ள கொழுப்பை குறைக்கனுமா..? இதை படிங்க...


உடல்பருமன் என்பது இன்றைக்கு அனைவரையும் பாதிக்கும் ஒன்றாகிவிட்டது. பாஸ்ட் புட் காலமாகிவிட்டதால் உண்ணும் உணவானது தேவையற்ற கொழுப்பாக மாறி ஆங்காங்கே சேகரிக்கப்பட்டு உடலானது பருமனடைகிறது. இதனால் ஏராளமானோர் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

உடல் எடையைக் குறைக்க சிலர் பட்டினி கிடக்கின்றனர். சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழக்கின்றனர். பட்டினி கிடந்தாலே, மருந்து மாத்திரைகளை உபயோகித்தாலோ உடல் எடை குறையாது. உணவும், உடற்பயிற்சியும் தான் உடல் எடையை முறையாகக் குறைக்கும் மருந்தாகும். கொழுப்பை கரைப்பதில் கொடாம்புளி முக்கிய பங்கு வகிக்கிறது.

கொடாம்புளியின் பூர்வீகம் இந்தியாதான். தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விளைகின்றது. இலங்கை மக்களும் புளிக்குப் பதிலாக கொடாம்புளியைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் கொடாம்புளி அதிகம் பயன்படுத்துகிறார்கள்

கொழுப்பு குறையும்

கொடாம்புளியின் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மேல் தோலுடன் உள்ள தசைப் பகுதிதான் மருத்துவத் தன்மை கொண்டது. இதில் உள்ள ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் தான் உடலின் எடையைக் குறைக்க பெருமளவில் உதவுகிறது.

உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான மாவுச்சத்துக்கள் அனைத்தும் கொழுப்புச் சத்தாக மாறுகின்றது. இதனால் கொழுப்புப் படலம் உடலில் தங்கி உடலைப் பருமனாக்குகிறது.

உடல் பருமன் உள்ளவர்கள் சமையலில் இந்த கொடாம்புளியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஹைட்ரஸி சிட்ரிக் அமிலம் மாவுச் சத்தை கொழுப்புச் சத்தாக மாறாமல் தடுக்கிறது. இதனால் உடலில் கொழுப்புச் சத்து உருவாவது தடுக்கப்படுகிறது. மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.

மூட்டுவலி குணமடையும்

கொடாம்புளியின் விதையை நீக்கி அதன் சதைப் பகுதியை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக்கி அருந்தினால் மூட்டுவலி குணமாகும். உடலில் உள்ள வாத பித்த நோய்களை சீராக்கும்.

சீரணமண்டலம் பலப்படும்

புளிக்குப் பதிலாக கொடாம்புளியை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும். கொடாம்புளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். சீரண மண்டலத்தை பலப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வெகு விரைவில் கரையும்.

Sunday, August 7, 2011

அன்னா ஹஸாரே ஒரு தலிபான் காந்தி சிவசேனா தாக்கு


மகாத்மா காந்தியின் பெயரை அன்னா ஹஸாரே தவறாகப் பயன்படுத்துகிறார். அவர் ஒரு தலிபான் காந்தி என்று சாடியுள்ளார் சிவசேனா தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர மாநில அமைச்சருமான சுரேஷ்தாதா ஜெயின் கூறியுள்ளார்.

அன்னா ஹஸாரே மீது ஏற்கனவே இவர் ஒரு அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளார் என்பது நினைவு கூறத்தக்கது. ஹஸாரே குறித்து ஜெயின் கூறுகையில், மகாத்மா காந்தியின் பெயரை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் காந்தியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி வருகிறார் ஹஸாரே.

எல்லோரும்தான் ஊழலை எதிர்க்கிறார்கள். ஆனால் ஏதோ இவர் மட்டும்தான் ஊழலுக்கு எதிராகப் போராடுபவர் போல காட்டிக் கொள்கிறார். நமது நாட்டில் ஏராளமான சட்ட திட்டங்கள், நடைமுறைகள் உள்ளன. அவற்றை தாண்டி விட்டுப் போக முயலக் கூடாது. எல்லாமே நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். அதை பிளாக்மெயில் செய்து பெற முயற்சிக்கக் கூடாது.

தலிபான் காந்தியாக செயல்பட்டு வருகிறார் ஹஸாரே. அவரது செயல்கள் கண்டனத்துக்குரியவை என்று சாடினார் ஜெயின்.

யார் இந்த ஜெயின்?

முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் இந்த ஜெயின். அப்போது மாநில அமைச்சராகவும் இருந்தார். அவர் மீது பல்வேறு ஊழல் புகார்களை சுமத்திய அன்னா ஹஸாரே 2003ம் ஆண்டு போராட்டத்தையும் நடத்தினார். இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி.சாவந்த் தலைமையிலான விசாரணைக் கமிஷனை மாநில அரசு அமைத்தது. இந்த விசாரணைக் கமிஷன் ஜெயின் குற்றவாளி என்று குற்றம் சாட்டியது. இதையடுத்து அவர் பதவி விலக நேரிட்டது. அதன் பின்னர் ஹஸாரேவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜெயின்.

அதன் பின்னர் அன்னா ஹஸாரே மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை ஜெயின், விசாரணைக் கமிஷனிடம் தெரிவித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய கமிஷன், ஹஸாரே மீதும் தவறுகள் இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...