Wednesday, June 12, 2013

மகள்கள் படுத்தும்பாடு...! பாசத்தில் தவிக்கும் ரஜினி!


'எந்திரன்' படத்தினைத் தொடர்ந்து ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் நடித்திருக்கும் படம் 'கோச்சடையான்'.

ரஜினி, தீபிகா படுகோன், நாசர், ஆதி, சரத்குமார், ஷோபனா மற்றும் பலர் நடித்துள்ள 'கோச்சடையான்' படத்தினை ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார்.

படப்பிடிப்பு சுமார் 25 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. ஏனென்றால் 'கோச்சடையான்' MOTION CAPUTRE TECHNOLOGY படம் என்பதால் கொஞ்சம் நாட்கள் படப்பிடிப்பு நடந்தாலே போதுமானது.

ரஜினிக்கு நெருக்கமான பிரபல இயக்குனர்கள், ரஜினி கால்ஷீட்டிற்காக காத்து இருந்து, அவரை அணுகி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பலரை நாசூக்காக ரஜினி தவிர்த்து வருகிறார்.சமீபத்தில் கூட கே.வி.ஆனந்திற்கு கால்ஷீட் கொடுப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த படத்தினை திட்டத்தினை கடைசியில் தள்ளி வைத்து விட்டார் ரஜினி.

இதற்கிடையில் 'செளந்தர்யா இயக்கத்தில் மட்டும் நடிக்கிறீங்களே அப்பா.. என்னுடைய இயக்கத்தில் வரப்போகிற 'வை ராஜா வை' படத்தில் கெஸ்ட் ரோலில் பண்ணுங்கப்பா' என்று செல்லமாக நச்சரித்து வருகிறார் ஐஸ்வர்யா தனுஷ்.

'வெளியில இருக்கிற இயக்குனர்களை எல்லாம் நான் ஈஸியாக சமாளித்து விடுகிறேன். ஆனால் வீட்டிற்குள் இருக்குற இரண்டு இயக்குனர்கள்கிட்ட படுறபாடு இருக்கே... அடங்கேப்பா' என்று பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் சந்தானம் பேசுவது போல் மகள்கள் இருவரிடம் பாசமாய் கோபித்து கொள்கிறாராம் சூப்பர் ஸ்டார்.

4 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...