Friday, June 21, 2013

வடிவேலு மறுத்த கதையில் நடிதது ஹிட் அடித்த விஜய்...! வெளிபடுத்திய பிரபல இயக்குனர்


இயக்குனர் எழில், துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், மனம் கொத்திப் பறவை உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் எடுத்தவர். தற்போது எழில் இயக்கத்தில் தேசிங்கு ராஜா திரைப்படம் வெளியாகவிருக்கிறது. 





நேற்று(20.06.13) நடந்த தேசிங்கு ராஜா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எழில் பற்றி இயக்குனர் கரு.பழனியப்பன் பேசியபோது “ துள்ளாத மனமும் துள்ளும் கதையை பல ஹீரோக்களிடம் சொல்லி கால்ஷீட் கேட்டுக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் அப்போதைய வடிவேலு(ஹீரோ இமேஜ் இல்லாத சாதாரண காமெடியன்) வரை துள்ளாத மனமும் துள்ளும் கதையுடன் சென்றோம்.


கதையை கேட்ட வடிவேலு ’இந்த நல்ல கதையில் நான் நடிக்கணுமா. நல்லா யோசிச்சு பாருங்க. ஒரு நல்ல கதைல நான் நடிச்சு வீணடிக்க விரும்பல. 6 மாசம் காத்திருந்து அப்பறம் வாங்க, அப்பவும் உஙளுக்கு இதேமனநிலை இருந்தா நான் நடிச்சு குடுக்குறேன்’ என்று கூறினார். 


அதன்பிறகு சூப்பர்குட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் நடிப்பில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை எழில் இயக்கி மாபெரும் வெற்றிகண்டார். வடிவேலு நடித்திருந்தால் இந்த திரைப்படத்தில் விஜய் நடித்திருக்க முடியாது. திரைப்படத்தின் ரிசல்ட் எப்படி இருந்திருக்கும் என்றும் சொல்ல முடியாது” என்று கூறினார்.

2 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...