Tuesday, June 7, 2011

தூள், சாமி போன்ற கதைக்காக காத்திருக்கிறேன், அதான் லேட்-விக்ரம்



தூள், சாமி மாதிரி அதிரடி ஆக்ஷன் கதைகளில் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன் என்கிறார் நடிகர் விக்ரம்.

சமீபத்தில் தனது புதிய படம் ஒன்றிற்காக நிருபர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "தில், தூள், சாமி போன்ற படங்களில், ஆக்ஷன், ரொமான்ஸ் என எல்லாமே சரியாக இருந்தது.

அந்த மாதிரி படங்களில் நடிக்கததான் நான் விரும்புகிறேன். எனது அடுத்த படம் இந்த மாதிரி அமையும்.

கிளாஸிக், மசாலா என எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல் நடிக்கவே நான் விரும்புகிறேன்.

எனது ஒவ்வொரு படங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி விழுவதை இனி தவிர்க்க முயற்சித்து வருகிறேன். இந்த இடைவெளியை நானாக விரும்பி தேடிப்போவதில்லை. சில படங்களில் அப்படியாகிவிடுகிறது. இதற்காக யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை," என்றார் விக்ரம்.

விக்ரமின் அடுத்த படத்தை இயக்குபவர் சுசீந்திரன். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடி, நாம் முன்பே அறிவித்த தீக்ஷா சேத். பிரபல தெலுங்கு நடிகை.

இந்தப் படத்திலும் சுசீந்திரன் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி தொடர்கிறது.

2 comments:

  1. நீங்க கலக்குங்க விக்கரம்.. இன்னொரு தேசிய விருது வாங்குங்க..

    ReplyDelete
  2. கதாபாத்திரத்திற்காக ரொம்ப உடலை வருத்தி உருவத்தை மாற்றி கலைக்காக அர்ப்பணிப்புடன் நடிப்பவர் விக்ரம். அவருடைய அர்ப்பணிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...