Thursday, June 23, 2011

ராணாவில் வடிவேலு... ரஜினியின் பெருந்தன்மை...


ரஜினியின் ராணா படத்தில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு தர ரஜினி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, நடிகர் வடிவேலு தாறுமாறாக விஜயகாந்தை விமர்சித்தார். அவரது இந்தப் போக்கால் அதிருப்தியடைந்த ரஜினி, ராணாவில் வடிவேலுவுக்கு தருவதாக இருந்த பாத்திரத்தை கஞ்சா கருப்புக்கு கொடுத்தார்.

திரையுலகில் இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஏற்கெனவே அரசியல் காரணங்களால் வாய்ப்புகளை இழந்துவிட்ட வடிவேலுவுக்கு இது பெரும் சரிவாகவும் பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, தனது நிலை குறித்து விளக்கமும், ராணா பற்றிய தனது கருத்துக்களுக்கு வருத்தமும் தெரிவித்திருந்தார். உடல்நலம் சீரடைந்து, மீண்டும் ராணா பட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள ரஜினிக்கு, வடிவேலுவின் நிலை சொல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராணாவில் மீண்டும் வடிவேலுவை சேர்க்க முடிவு செய்து, அதை இயக்குநர் ரவிக்குமாரிடமும் கூறிவிட்டாராம். அதேநேரம், வடிவேலுவுக்கு பதில் சேர்க்கப்பட்ட கஞ்சா கருப்புவும் படத்தில் இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம்.

1 comment:

  1. தன்னை தரக்குறைவாய் திட்டியவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது உதவும் உயர்ந்த மனித நேயர் ரஜினி என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மெய்ப்பிக்கிறார்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...