Tuesday, August 30, 2011

தூக்கு தண்டனையை குறைத்தால் ராஜீவ் உயிரோடு வருவாரா- இளங்கோவன்


ராஜிவ் காந்தியும் அவருடன் கொல்லப்பட்ட அத்தனை பேரும் திரும்ப உயிரோடு திரும்ப வந்தால் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டி:

கேள்வி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் தண்டனையை குறைக்க வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதே?

இளங்கோவன்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். தலைவர் ராஜீவ் காந்தியும், தியாகி லீக் முனுசாமியும் அவர்களுடன் கொல்லப்பட்ட அத்தனை பேரும் திரும்ப உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம். 

கேள்வி: தூக்கு தண்டனை விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று கொடுத்த விளக்கம் பற்றி?

இளங்கோவன்: இந்தப் பிரச்சனையில் ஜெயலலிதா சரியான தகவலை தந்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு 3 பேரையும் தூக்கில் போடலாம் என்று சொல்லி விட்டு இப்போது கூடாது என சொல்வது கருணாநிதியின் அரசியல் நாடகம். 

கேள்வி: 3 பேரையும் தூக்கிலிட்டால் தமிழகத்தில் காங்கிரசின் எதிர்காலம் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறதே?

இளங்கோவன்: கொலை செய்தவனுக்கு என்ன தண்டனை என்று கோர்ட்டு சொல்லியிருக்கிறது. அதை நிறைவேற்றுவதால் காங்கிரசின் எதிர்காலம் எந்த விதத்திலும் பாதிக்காது என்றார்.

8 comments:

  1. அப்ப அவங்கல தூக்குல போட்டா மட்டும் ராஜிவ் உயிரோட வந்துருவாரா

    ReplyDelete
  2. ராஜிவ் காந்தி உயிரோடு வ்ந்தால் ஈழத்தில் இந்திய அமைதிபடையால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களும்,பறிபோன பல நூறு தமிழ்பெண்களின் கற்பும் திரும்ப வந்துவிடுமா?உமக்குள் ஒடுவது என்ன ரத்தம்?யார் ரத்தம்?

    ReplyDelete
  3. //தலைவர் ராஜீவ் காந்தியும், தியாகி லீக் முனுசாமியும் அவர்களுடன் கொல்லப்பட்ட அத்தனை பேரும் திரும்ப உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம்//இவன் ஒரு அறிவு கெட்டவன்னு நிருபிச்சிடான் .அவுங்க எல்லாம் சாவலேன்னா எதுக்கு தண்டனை ?

    ReplyDelete
  4. ஈ வி கே எஸ், தங்கபாலு, கருணாநிதி, சிதம்பரம் இவர்களையெல்லாம் மனிதர்களா? ஈவு இரக்கமற்ற பதவி வெறி பிடித்த பேய்கள்.
    www.panangoor.blogspot.com

    ReplyDelete
  5. இந்த மூன்று பேரின் மீதும் கொலை குற்றம் சுமத்தப்பட்டதுதான் இவர்களும் அக்கூட்டத்தில் நின்னுருந்தால் இவர்களும் போயி சேர்ந்து இருப்பார்கள்.

    அறியாமையின் காரணத்தாலும் ராஜிவ் செய்த கொடுமையின் விரக்தியாலும் இவர்கள் உணர்ச்சி வசப்பட்டு அவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்திருக்கிறார்கள் மறுப்பதற்கு இல்லை ஆனால் இருபத்தி ஒரு வருசம் சிறை தண்டனை கொடுத்து விட்டு இப்போ தூக்கில் போட வேண்டும் என்றால் தமிழன் என்ன முட்டாளா?

    முதலில் தூக்கில் போடக்கூடியவர்கள் சுப்பிரமனிய சுவாமியும் சந்திரசுவாமியும்தான் இவர்களை எல்லாம் விட்டு விட்டு இழித்தவர்களை சட்டம் இறுக்குவது ஜன நாயக நாட்டிற்கு உகந்தது அல்ல.

    அமைதி படையின் மூலம் அழிந்து போன தமிழர்களின் உயிரை திருப்பி தந்து விட்டு இம்மூவரையும் தூக்கில் போடு நீயெல்லாம் காங்கிரசின் தலைவன் பேச வந்துவிட்டார்.

    உனக்கு என்ன எதிர்காலம் தமிழ் நாட்டில் ?

    வற்றி போன குலத்தில் தூன்டிலைப் போட்டு மீன் பிடிக்கிற கூ முட்டைகள்தானே நீங்கள்.

    உங்களுக்கு என்ன எதிர்காலம் வேண்டிகிடக்கு.

    ReplyDelete
  6. ஆடு திருடிய மாறி முழிக்கும் இந்த காமெடி பீஸு ஓரு?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...