Wednesday, June 29, 2011

சினிமாவில் இனி நடிக்க மாட்டேன்: சூப்பர் ஸ்டார் அதிரடி


தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார் யாரெனில் அது ரஜினிகாந்த். அதுபோல் தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் யாரெனில் அது சிரஞ்சீவிதான். இவர் ஆந்திராவில் பிரஜா ராஜ்யம் என்ற கட்சியினை துவக்கி, அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வந்தார்.


நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சிரஞ்சீவி கூறியதாவது;
“இனிமேல் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன். சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடப் போகிறேன். சினிமாவில் முதல்வராக நடித்தது போதும், இனி நிஜத்தில் முதல்வராகப் போகிறேன். அதற்காகத்தான் இந்த சினிமா வேலைக்கு முழுக்கு போட்டிருக்கிறேன்.

பிரஜா ராஜ்யம் கட்சியை பலப்படுத்தி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும். என் மக்களுக்கு நல்லாட்சி தரவேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்” என்றார். கடந்த 2007-ல் வெளிவந்த 'சங்கர் தாதா ஜிந்தாபாத்' என்ற படம்தான் இவர் நடித்த கடைசிப் படமாகும்.

2 comments:

  1. என்னமோ ஏதோனு பயந்துட்டேன். நல்ல மனசு சார் உங்களுக்கு . ரஜினி படத்தைபோட்டு எந்த மேட்டர போடுறீங்க? முதல்வர் கனவு யாருக்குத்தான் இல்லை. நம்ம கேப்டனுக்கு இந்தச் செய்தி தெரியுமா? அவர் காதிலும் கொஞ்சம் போட்டு வையுங்க.

    ReplyDelete
  2. யோவ் என்ன பில்டப்பா....???

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...