Saturday, September 10, 2011

முல்லைத்தீவில் காமுக தந்தையால் 15 வயது சிறுமி கற்பழிப்பு!


முல்லைத்தீவில் 15 வயதுச் சிறுமி ஒருவர் அவரது தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அச்சிறுமியின் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கடும் நோய்வாய்ப் பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

குறித்த சிறுமி இடம் பெயர்ந்து முகாமில் தங்கியிருந்த வேளையில் தந்தையால் பாலியல் ரீதியான தொந்தரவுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. 

சிறுமி இதுதொடர்பாக தனது தாயாரிடம் தெரிவித்தபோதும் தாயார் அது தொடர்பில் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை.

பின்பு முல்லைத்தீவில் மீளக் குடியமர்ந்த பின்னரும் குறித்த சிறுமியின் தந்தை சிறுமி மீது பாலியல் பலாத்காரம் மேற் கொண்டுள்ளார். 

தொடர்ச்சியாகப் பாலியல் பலாத்காரம் மேற் கொள்ளப்படுவதைப் பொறுக்க முடியாத தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். (இலங்கை செய்தி)

3 comments:

  1. இவனெல்லாம் மனுஷனே கிடையாது...!!!

    ReplyDelete
  2. அவன் ....... அ வெட்டனும்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...