Tuesday, November 1, 2011

ஆணவம் வேண்டாம் ஜெயலலிதா அவர்களே...



தமிழகம் திமுக-வின் ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு அந்த ஆட்சியை தற்ப்போது தங்களுக்கு கொடுத்துள்ளார்கள். அதற்க்கு அடுத்து உள்ளாட்சித்தேர்தலிலும் அதே வெற்றி மக்களால் தங்களுக்கு அளிப்பபட்டுள்ளது. இந்த வெற்றியால் தங்களின் கட்சிகாரர்களுக்கு கர்வம் தலைக்கேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..
உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சி அடைந்துள்ள, பிரமிப்பூட்டும், இமாலய வெற்றியைக் கண்டு, அ.தி.மு.க.,வினர், குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பெருமிதமும், உவகையும் அடைவது இயற்கையே; புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால், இந்த வெற்றிக்களிப்பு மமதையாக மாறிவிடக்கூடாது. 
 
ஏனெனில், சட்டசபைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வின் படுதோல்விக்கு, வேறு சில வலுவான காரணங்கள் உண்டு. மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளின், தி.மு.க., உறுப்பினர்கள் வசூல் வேட்டை, கட்டப் பஞ்சாயத்து என, ஆடிய ஆட்டமும் இத்தோல்விக்கு ஒரு காரணம் என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது. 
 
சட்டசபைத்தேர்தலுக்கு முன், "சென்னையில் தி.மு.க., தோற்றால், அதற்கு கவுன்சிலர்களின் செயல்பாடுதான் காரணமாக இருக்கும்' என, கருணாநிதியே நொந்து போய்ச் சொன்னதை, நினைவில் கொள்ளவேண்டும். 
 
எனவே, இப்போது, அ.தி.மு.க.,வினரும் அதே பாணியில் செயல்பட்டால் ஆபத்து தான். ஆகவே, பொறுப்புணர்வும், கடமையுணர்வும் கொண்டு திறம்படப் பணியாற்றி மக்களைக் கவரவேண்டும்.

2 comments:

  1. நல்ல சொன்னிங்க .. இனிதான் ஜாக்கிரதையா இருக்கனும்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...