Sunday, June 2, 2013

கல்யாணத்துக்கு அப்புறம் ஏன் ஆண்கள் இப்படியாயிடறாங்க...!




ஒரு டீச்சர் பாடம் நடத்திட்டு இருந்தாங்க....

"திமிங்கலத்தால மனுஷன முழுங்க முடியாது அது பெரிசு தான் ஆனா வாய் சின்னது அதனால மனுஷன முழுசா முழுங்க முடியாது" 

உடனே ஒரு பொண்ணு கேட்டுச்சு,"இல்லையே எங்க பக்கத்து வீட்டு ஜானை ஆறு மாசம் முன்னாடி திமிங்கலம் முழுங்கிச்சே"

டீச்சருக்கு கடுப்பு திரும்பவும் சொன்னாங்க,

"இல்ல கண்டிப்பா திமிங்கலத்தால முழுங்க முடியாது" 

அந்தப்பொண்ணு,

"சரி ... நான் சொர்க்கத்துக்கு போனா ஜான் கிட்ட கேப்பேன்" 

டீச்சர்,

"ஒரு வேளை ஜான் நரகத்துக்கு போயிருந்தா...." 

" நீங்க கேளுங்க"



*********************************



ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.

அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது. 

''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.

எலி சொல்லியது,

"சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.." 


*************************************


சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?

இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

******************************************

இப்படிக்கு உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...