Tuesday, July 23, 2013

’சொன்னா புரியாது’ படத்தின் கதை

 
 ‘மிர்ச்சி’ சிவா நடித்த தில்லுமுல்லு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, தனது வெற்றியையும் உறுதியாக்கிவிட்டது. இந்நிலையில் சிவா, வசுந்தரா கஸ்யப் ஜோடியாக நடிக்கும் சொன்னா புரியாது திரைப்படம் ஜூலை 26-ஆம் தேதி ரிலீஸாகிறது.





சொன்னா புரியாது திரைப்படத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாக நடிக்கிறாராம் சிவா. சொன்னாபுரியாது திரைப்படத்தில் நடித்தது(!) குறித்து பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு சிவா பேட்டியளித்துள்ளார்.


பேட்டியில் பேசிய போது ” டைட்டிலே இல்லாம தான் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணோம். ஆனா ஷூட்டிங் முடிஞ்சதும் டைட்டிலுக்காக ரொம்ப யோசிச்சோம். அப்ப பல டைட்டில் யோசிச்சாலும் அது புரியாது, இது புரியாதுனு சொன்னாங்க. அதனால ’சொன்னா புரியாது’-னு டைட்டில் வெச்சிட்டோம். டைரக்டர் கதை சொல்லி முடிச்சதும் எனக்கு அவர் சொன்னது எதுவுமே புரியல. உண்மைய சொல்லனும்னா கதைக்கேத்த டைட்டில் தான் இது.





நான் ஸ்பாட்ல பீடா சாப்பிடும்போது டைரக்டர் பாத்துட்டு, எனக்கு இந்தி தெரியும்னு நினைச்சிகிட்டு ’இந்த படத்துல நீ தான் ஒரு இந்தி பாட்டு எழுதி பாடனும்’னு சொல்லிட்டாரு. நானும் பீடா போட்டுகிட்டு 20 நிமிஷத்துல பாட்டு எழுதி 10 நிமிஷத்துல பாடிட்டேன். இந்திலயும் கால் வெச்சிட்டதால இனி என்னோட ஒரே போட்டி ஷாருக் கான் தான்(இத சொன்னதும் அவரே சிரிச்சிட்டாராம்).


தாய்லாந்துல இருக்க 'No Man's Land'(மனிதன் இல்லாத பூமி) தீவுல ஷூட்டிங் எடுக்க போனோம். ஆனா அங்க 30,000 மனுஷங்க இருந்தாங்க. இந்த படத்துல இயக்குனர், ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் என எல்லாரும் புதுமுகம். மக்கள் இந்த மாதிரியான படங்களையும் ஆதரிக்கனும்” எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...