Monday, March 28, 2011

அரசியலில் ப்ரிகேஜி கூட படிக்காதவர் விஜயகாந்த்



ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தர்மபுரியில் நேற்று நடந்தது. இதில் தர்மபுரி பா.ம.க., வேட்பாளர் சாந்தமூர்த்தி மற்றும் பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தி.மு.க. வேட்பாளர்கள் இன்பசேகரன், முல்லைவேந்தன் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்து, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். கடந்த சில மாதங்களாக பா.ம.க.வைப்பற்றி, நடிகர் கட்சி விமர்சனம் செய்து வருகிறது. பா.ம.க.வைப் பற்றி விமர்சனம் செய்ய யாருக்கும் அருகதை கிடையாது.

கட்சி தொடங்கியதில் இருந்து 6 மாதங்களுக்கு முன்பு வரை, அ.தி.மு.க., வையும், ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்தவர் விஜயகாந்த். பொதுக் கூட்டங்களில் தனக்கும், எம்.ஜி.ஆருக்கும்தான் கூட்டணி  என்று தற்போது விஜய காந்த் பேசி வருகிறார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியை மதிக்காமல் அரசியலில் ப்ரிகேஜி கூட படிக்காதவர் போல் விஜயகாந்த் பேசி வருகிறார்.

விட்டு கொடுக்கும் மனப்பான்மை கொண்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட் பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று, தமிழக முதல்வர் கருணாநிதியை மீண்டும் 6வது முறை முதல்வர் ஆக்குவோம். வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தர்மபுரி தொகுதியை வழங்கிவிட்டு, பா.ம.க. வேறு தொகுதிகளில் போட்டியிடும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

5 comments:

  1. //கட்சி தொடங்கியதில் இருந்து 6 மாதங்களுக்கு முன்பு வரை, அ.தி.மு.க., வையும், ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்தவர் விஜயகாந்த்.//

    இவர் மட்டும் என்ன யோக்கியமாமா....?

    ReplyDelete
  2. //விட்டு கொடுக்கும் மனப்பான்மை கொண்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணி//

    ஆமாமா பங்கு பிரிப்பதிலும் [கொள்ளை] இதே மனப்பான்மைதான்....

    ReplyDelete
  3. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    //விட்டு கொடுக்கும் மனப்பான்மை கொண்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணி//

    ஆமாமா பங்கு பிரிப்பதிலும் [கொள்ளை] இதே மனப்பான்மைதான்....
    ////

    உண்மையல்லாம் வெளியில சொல்லக் கூடாது..

    ReplyDelete
  4. படிக்காதவர்களே அரசியலில் அதிகம் சாதிப்பார்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...