Tuesday, April 26, 2011

நாஞ்சில் மனோ அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டாரு..



கவிதை வீதி  : ஆமா... மக்கா மனோ நல்ல ஆளாச்சே  அவர் எதுக்கு சரிபட்டு வரமாட்டாரு....
 
பாட்டு ரசிகன் : (**********************************)
 
கவிதை வீதி : ஆமா...  அவர் அதுக்கெல்லாம் அவர் சரிபட்டு வரமாட்டாரு...
 
நாஞ்சில் மனோ : டேய் மக்கா எல்லாத்துக்கும் நான் சரிபட்டு வருவேன்... எதுக்குடா நான்  சரிபட்டு வரமாட்டேன்..

கவிதை வீதி : யோய் அதுக்கெல்லாம் நீ சரிபட்டு வர‌மாட்டே...
வந்தமா நாலு ஜோக் படிச்சமா கமாண்டும்,   ஓட்டும் போட்டாமான்னு போயிடு...
 
நாஞ்சில் மனோ : ................
 
பாட்டு ரசிகன் : புரிஞ்சதா யாராவது... எதுக்கு சரிபட்டு வரமாட்டார்ன்னு கேட்டிங்க அவ்வளவுதான் அவரு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரு....

**************************************************************

ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...

பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?

வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.

பெற்றோர் : அப்படியா!!

வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.

**************************************************************

ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?

மாணவன்: சந்திரந்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: ?!?!?!

**************************************************************

நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......

நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??

நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...

**************************************************************

தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..

மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..

தாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்..

மகன் : 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!

தாய் : இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!

மகன் : நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..

தாய் : சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!

**************************************************************

அடிங்க எஜமான் அடிங்க வலிக்காம அடிங்க...

9 comments:

  1. ஹ ஹ...ஆமாம் ஆமாம் மனோ அதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டாறு

    ReplyDelete
  2. எல்லாமே கலக்கல் ஜோக்ஸ்

    ReplyDelete
  3. அட கொன்னியா எப்பிடியெல்லாம் கிளம்பி இருக்காயிங்கய்யா.....

    ReplyDelete
  4. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    அட கொன்னியா எப்பிடியெல்லாம் கிளம்பி இருக்காயிங்கய்யா.....
    ////

    மனோவைப்பற்றி இதுபோன்று போட்டதற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

    ReplyDelete
  5. //தாய் : சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!///

    இதுதான் டாப்பே....

    ReplyDelete
  6. //
    மனோவைப்பற்றி இதுபோன்று போட்டதற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்..//

    ஹே ஹே ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  7. ஆஹா... ஆஹா.. நம்ம சகோவின் டவுசரை கிழி கிழி என்று கிழித்து விட்டீர்களே பாட்டு ரசிகன்..

    ReplyDelete
  8. ஆமா...

    ஆமா

    சத்தியமா

    சரிப்பட்டு

    வரமாட்டாரு.

    வரமாட்டாரு.

    வரவே மாட்டாரு.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...