Thursday, March 21, 2013

விஜய், அஜீத்துக்காக காத்திருக்கும் இயக்குனர்!


தமிழ் சினிமாவின் யதார்த்தமான இயக்குனர்களில் ஒருவர் எழில். இவரது இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற படம் வெள்ளி விழா கொண்டாடியது. இதையடுத்து, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘தீபாவளி’, ’மனம் கொத்திப் பறவை’ ஆகிய படங்களை இயக்கியவர். 





அஜீத் நடிப்பில் இவர் இயக்கிய பூவெல்லாம் உன் வாசம் சுமாரான வெற்றியை பெற்றது. தொடர்ந்து ராஜா என்ற படத்தில் அஜீத்துடன் இரண்டாவது முறையாக இணைந்தார். நீண்ட இவைவெளிக்குப் பிறகு தன் நண்பர் லிங்குசாமியின் தயாரிப்பில் தீபாவளி படத்தை இயக்கினார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் மனம் கொத்திப் பறவை படத்தை இயக்கினார். படம் சுமாரான வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் நல்ல படம் என்றும் பரவலாக பேசப்பட்டது.


இவர் தற்போது விமல் நடிப்பில் ‘தேசிங்குராஜா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘தேசிங்கு ராஜா’வில் விமலுக்கென்று இருக்கிற டிரேட் மார்க் காமெடி இருக்கும். சூரி, பிந்து மாதவி என்று கமர்ஷியல் பார்முலாவைக் கலந்து, இமான் இசை மூலம் இப்படத்தை மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் இப்படம் கமர்ஷியல் வெற்றியாகும் என்றார். 


மேலும் அவர், நல்ல கமர்ஷியல் கதைக்களத்துடன் காத்திருக்கிறேன். நிச்சயம் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். என்னைப் பொறுத்தவரை விஜய், அஜீத் இருவருமே என் கண்கள்மாதிரி. அவர்களுடன் மீண்டும் இணைவதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறேன் என்றார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...