Friday, March 22, 2013

ராஜபக்சே தூக்கிலிட உத்தரவு வாத விவரம் மற்றும் தீர்ப்பு... படங்களுடன்...




மதுரை நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று (22.03.2013) சர்வதேச நீதிமன்றம் போல் மேடை ஒன்றை வடிவமைத்தனர். சர்வதேச மாதிரி நீதிமன்றம்போல் அமைக்கப்பட்ட அந்த மேடையில், ராஜபக்சே உருவபொம்மை வைக்கப்பட்டிருந்தது. நீதிபதி கேள்வி கேட்கும்போது, ராஜபக்சேவுக்கு ஆஜரான வழக்கறிஞர், அந்த உருவபொம்மையின் காதில் பேசிவிட்டு, நீதிபதிக்கு பதில் சொன்னார்.


சர்வதேச நீதிமன்றம் மதுரை. வழக்கு எண் 1/2003. குற்றவாளி: ராஜபக்சே என்ற சர்வதேச மாமா. தந்தை பெயர் ரத்தவெறி காளியப்பன். இலங்கை.


மனுதாரர்: ஈழத்தமிழகம். இலங்கை. 


நீதிபதி நக்கீரன் கருகாராலன் மற்றும் ஏ.கே.ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வு. 


ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக முன்வரவில்லை என்பதால், நீதிமன்றமே இலவச சட்ட ஆலோசகராக உசிலை சிங்கம் செல்வராஜ் என்பவரை ஆஜராக உத்தவிட்டது. ஈழமக்களுக்காக வழக்கறிஞர் முத்துக்குமார் ஆஜரானார்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 313 சிஆர்பிசியின்படி கேள்விகளை குற்றவாளியிடம் கேட்டனர்.


நீதிபதி: ஏன் தலையை தொங்கப்போட்டு வருகிறாய். வெட்கமா?


ராஜபக்சே: என்னை எல்லோரும் சர்வதேச மாமா என்று அழைப்பதால் வெட்கமாக இருக்கிறது.


நீதிபதி: சர்வதேச மாமா என்று உங்களுக்கு பட்டம் கொடுத்தவர் யார்?


ராஜபக்சே: எனக்கு சோனியாவும், மன்மோகன் சிங்கும் கொடுத்தார்கள் அய்யா. இந்த பட்டத்தை அவமானமாக கருதுகிறேன்.


நீதிபதி: இது சரியான பட்டம்தானே என்ற நீதிபதிகள், ஒழுங்காக கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று எச்சரித்தனர்.


நீதிபதி: நீ ஆயிரம் பெண்களை கற்பழித்தாயா? உன் மீது குற்றம் சுமத்தப்படுகிதே.


ராஜபக்சே அமைதியாக இருக்கிறார்.


நீதிபதி: குற்றம் செய்தாயா? இல்லையா?


ராஜபக்சே: நான் கற்பழித்தது உண்மைதான். ஆனால் பெண்களை தனி அறையில் வைத்து கற்பழிக்கவில்லை. எங்கள் நாட்டு ராணுவத்துடன் பாதுகாப்புடன் கற்பழித்தேன். 


நீதிபதி: அது என்ன பாதுகாவல்


ராஜபக்சே: கணவன் முன்பு அவன் மனைவியை, தாய், தகப்பன் முன்னால் மகள்களையும், சாட்சிகளாக உற்றார் உறவினர்கள் முன்னிலையில் நான் கற்பழித்தேன். என் படை பாதுகாப்புடன்தான் கற்பழித்தேன். இது எப்படி குற்றமாகும். ஆயிரம் பெண்கள் என்று குறைவாக சொல்லுகிறீர்கள். ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களை கற்பழித்தேன்.


நீதிபதி: 50 ஆயிரம் ஈழத்தமிழர்களை கொன்றாயா?

ராஜபக்சே: இல்லை அய்யா. ஒன்றரை லட்சம் பேர்.

நீதிபதி: நீ கொலை குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?

ராஜபக்சே: நான் கொலை செய்யவில்லை. என் ராணுவ வீரர்கள் கொன்றார்கள்.

நீதிபதி: உன் சம்மதத்துடன்தானே கொன்றார்கள்.


ராஜபக்சே: தாயிடம் கேட்டு தகப்பனை கொன்றேன். தகப்பனை வைத்து தாயை கொன்றேன். கணவனை வைத்து மனைவியை கொன்றேன். மனைவியை சம்மதிக்க வைத்து கணவனை கொன்றேன். தாய், தகப்பன், பிள்ளைகளை வைத்து பெரியவர்களை கொன்றேன். இது எப்படி குற்றமாகும். நீதிபதி மயங்கி விழுகிறார்.


நீதிபதி: நீ குற்றவாளியா இல்லையா


ராஜபக்சே: நான் குற்றவாளி இல்லை. ஆனால் ஒரு லட்சம் பேரை கற்பழித்தேன். ஒன்றரை லட்சம் பேரை கை, கால்களை கட்டி சாட்சியாக கொன்றிருக்கிறேன். 


நீதிபதி: ஒன்றரை லட்சம் பேரை கொன்ற உன்னை பொதுமக்கள் முன்னிலையில் உன் கை, கால்களை கட்டி சர்வதேச நீதிமன்றத்தில் தூக்கிலிட உத்தரவிடுகிறேன். வழக்கில் கொலைக்கான அனைத்து சான்றுகளும் இந்த நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதால், சாகும் வரை தூக்கிலிட்டு செருப்பால் அடித்து கல்லால் அடிக்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 


இதையடுத்து அந்த மேடையில், ராஜபக்சே உருவபொம்மையை கொண்டு வந்து தூக்கிலிட்டனர். தூக்கு நிறைவேற்றப்பட்டதும், ராஜபக்சேவின் உருவபொம்மையை செருப்பால் அடித்தும், அந்த உருவபொம்மைக்கு தீவைத்தும் எரித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.




இந்த நிகழ்வு விரைவில் கண்டிப்பாக உண்மையாகும்...

நன்றி நக்கீரன் படங்கள்: அண்ணல்

2 comments:

  1. அடி முடடாளகளது அரங்கம்

    ReplyDelete
  2. Height of stupidity is, doing agitations in Tamilnadu. This will no way affect killer Rajapakse and his cohorts. Some tamilnadu political leaders have met Rajapakse and enjoyed his hospitality in the past. After returning back from Colombo they bark about Rajapakse for political mileage. Plight of current state of tamils in srilanka is more due to tamilnadu politicians misguide than Lankan political leaders. Saatchikaran kaalil vizhuvadhai vida sandaikaran kaalil vizhuvadhu mEl.- Thanks - Rob Anderson

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...