Saturday, July 20, 2013

ரஜினி ஷங்கர் சந்திப்பு...! விலகாத மர்மம்..!


இயக்குநர் ஷங்கர் ரஜினியைச் சந்தித்துப் பேசினார் எனவும், இருவரும் அடுத்த படத்தில் இணையப் போகிறார்கள் எனவும் செய்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.


ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' தான் ரஜினி நடித்து கடைசியாக வெளிவந்த படம். வசூலில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படம் வெளிவந்து 3 ஆண்டுகள் ஆகின்றன.

அதன்பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'ராணா' படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அந்தப் படம் டிராப்பானது.

அதைத் தொடர்ந்து மகள் செளந்தர்யா இயக்கத்தில் 'கோச்சடையான்' படத்தில் நடித்தார். மோஷன் கேப்சரிங் முறையில் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.



இதுவரை 'கோச்சடையான்' படத்தின் 3 ஸ்டில்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. பாடல் வெளியீடு, டிரெய்லர் வெளியீடு குறித்து எந்தத் தகவலும் இதுவரை சொல்லப்படவில்லை.

இந்த நிலையில், ரஜினியுடன் இயக்குநர் ஷங்கர் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் நட்பு ரீதியாகச் சந்தித்தார்களா இல்லை அடுத்த படம் குறித்துப் பேசினார்களா என்பது தெரியவில்லை.

ஒருவேளை, 'கோச்சடையான்' படத்தின் டிரெய்லரை போட்டுக் காட்டுவதற்காக ரஜினியே ஷங்கரை வரச்சொல்லி இருக்கலாம் என்றும் பேச்சுக்கள் நிலவுகிறது. 

இதற்கிடையில், ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போகிறார் என்றும் தகவல் பரவியது.

ரஜினியின் படம் திரைக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்த வெற்றியைக் கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்திலா அல்லது ஷங்கரின் இயக்கத்திலா என்பதை ரஜினி தான் முடிவு செய்ய வேண்டும்.

2 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...