Monday, September 23, 2013

ஏன் இந்த ஆவேசம் விஜயகாந்த் அவர்களே...!


‘தொண்டர்கள் உள்ளவரை என்னை யாரும் அழிக்க முடியாது, என்னை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார். தேமுதிக தொழிற்சங்க பேரவை மாநில பொருளாளர் முஜிபுர்ரகுமான் மகள் சபினா , சேக் அப்துல்லா திருமணம் மதுரையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

எனக்கு எம்மதமும் சம்மதம். எனக்கு ஜாதியில்லை, மதமும் இல்லை. பணம், காசு முக்கியமல்ல. காசு அதிகமிருந்தால் தூக்கம் வராது. நாட்டில் லஞ்ச லாவண்யங்கள் பெருகி விட்டன. மக்களிடம் நிம்மதியில்லை. நம்புகிறார்களோ, நம்பவில்லையோ தெய்வம் இருக்கிறது. நான் நம்புகிறேன். அதேநேரம் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது. 

என் மீது 34 வழக்குகள் போட்டிருக்கிறார்கள். ஆனாலும் பயப்படவில்லை. மனசாட்சிக்கு மட்டுமே பயப்படுவேன். எந்தத் தவறும் செய்யவில்லை.

மக்கள் பிரச்னையை பேசக்கூடாது என்றால், நான் கட்டாயம் பேசுவேன். யாருடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். தேர்தல் அறிவித்ததும் இந்த கேள்வியைக் கேளுங்கள். காலம் முன்னேறி விட்டது. அதேபோல் நாட்டில் லஞ்ச லாவண்யங்களும் முன்னேறி விட்டன. 

எப்படியும் காசு சேர்க்க நினைக்கிறார்கள். உழைத்தால்தான் காசு நிற்கும். உழைப்பை மட்டுமே நம்பியுள்ளேன். எல்லோருக்கும் நேரம் நன்றாக இருக்கும் வரை எதுவும் நன்றாக இருக்கும். தெய்வத்தையும், மக்களையும் நம்பித்தான் உள்ளேன். தொண்டர்கள் உள்ளவரை யாரும் என்னை எதுவும் செய்யமுடியாது. அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். தெய்வம் நின்று கொல்லும். என் கட்சியை யாரும் அழிக்கமுடியாது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

கொஞ்சம் ஆவேசத்தை குறைத்துக்கொண்டு செயலில் காட்டுங்கள் விஜயகாந்த் அவர்களே...!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...