Wednesday, October 16, 2013

இதெல்லாம் நம்புகிறமாதிரி இல்லையே


உலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள். அதாவது அவர்கள் அநாகரிகமாகக் கருதும் சில பழக்க வழக்கங்கள்.

1)ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

2)சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் அது அவர்களுக்கு மரணச்சின்னம் ஆகும்

3)கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கையுறை அணிந்து கொண்டு கைலாகு கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

4)எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

5)என்ன வேலை செய்கின்றீர்கள்? என்று இத்தாலி நாட்டில் கேள்வி கேட்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

6) படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜென்டினாவில் அநாகரிகமாகக் கருதப்படுகின்ற்து.

7) ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

8) சிவப்பு மையில் பெயர் எழுதுவதை கொரியாக்காரர்கள் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

9)அறிமுகமாகாத பெண்களுக்கு உதவி செய்தலை பிலிப்பைன்சில் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.ஏனெனில் அது நம் ஆசையை வெளிப்படுத்துவதாக அங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

10)தாய்லாந்தில் தலையில் கைவைத்து வாழ்த்துவதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

*********************************

"எந்த மனிதனும் தன் மரியாதைக்குக் கேடு நேரும் வகையில் நன்றியுடன் இருக்க முடியாது. எந்த நாடும் தன் சுதந்திரத்திற்குக் கேடு நேரும் வரையில் நன்றியுடன் இருக்க முடியாது!"

- - தோழர் சே குவேரா


4 comments:

  1. வணக்கம்
    சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள் பற்றிய பதிவு நன்று வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சுவையான தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. படிக்க படிக்க சுவாரசியம்

    ReplyDelete
  4. சுவாரசியமான தகவல்கள்.......

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...