Saturday, March 9, 2013

”எனக்கு கமலை விட ரஜினி தான் நெருக்கம்” - கே.எஸ்.ரவிகுமார்!


கே.எஸ்.ரவிகுமார் கமல்ஹாசன் இணைந்து உருவாக்கிய அவ்வை ஷண்முகி, பஞ்சதந்திரம், தெனாலி தசாவதாரம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஆனால் கடைசியாக இவர்கள் இணைந்த மன்மதன் அம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தகர்த்து கமல்-கே.எஸ்.ரவிகுமார் நட்பிலும் ஒரு விரிசலை ஏற்படுத்தியது. 




மன்மத அம்பு படத்தின் தோல்வியை அடுத்து கே.எஸ்.ரவிகுமார் “மன்மதன் அம்பு என் கதை அல்ல. கமல் சொன்ன கதை. அதன் தோல்விக்கும் எனக்கும் சம்மந்தமல்ல” என்று கூறிவிட்டார். இதையறிந்த கமல் “ தசாவதாரமும் என் கதை தான். அதன் வெற்றிக்கும் எனக்கு சம்மந்தமில்லை என்று சொல்லிவிடுவாரா?” என்று சூடாக திருப்பிக் கொடுத்தார். அதன்பிறகு இருவரும் இணைவதற்கான வாய்ப்பு இல்லாமல் கமல் விஸ்வரூபம் படத்தை இயக்கி முடித்தார்.


விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கலந்து கொண்டு பேசிய கே.எஸ்.ரவிகுமார் “ கமலை வைத்து படம் இயக்க பல இயக்குனர் தவம் கிடக்கும் போது. அவர் ஏன் எல்லா பளுவையும் தன் தலை மேல் ஏற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறினார். கே.எஸ்.ரவிகுமாரின் சுமூகமான அணுகுமுறையினால் கமலும், கே.எஸ்.ரவிகுமாரும் எப்போது இணைவார்கள் என்ற கேள்வி வலுத்திருந்தது. 





சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய போது இந்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.ரவிகுமார் “மன்மத அம்பு படத்திற்கு பிறகு கமலிடம் நான் படங்களைப் பற்றியோ மற்றதைப் பற்றியோ பேசியதே இல்லை. ரஜினியுடன் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது பேசிவிடுவேன். கமலுடன் அதுபோன்ற தொடர்புகளும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

2 comments:

  1. Kamal sir, K.S.Ravikumar udhavi illaama neenga inimael padamae edukka mudiyaadhu?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...