Friday, April 12, 2013

விஜய் - தலைவா முன்னோட்டமும், அஜீத்தின் அரசியல் ஆசையும்


தலைவா முன்னோட்டம்



இயக்குனராகவும், நடிகராகவும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த மணிவண்ணன் தற்போது தனது 50-வது திரைப்படத்தை இயக்கிமுடித்துள்ளார். யாருக்கும் பயப்படாமல் நேர்பட பேசுபவர் மணிவண்ணன் என்பது பலரும் அறிந்தது. சமீபத்தில் நடைபெற்ற நாகராஜசோழன் M.A.M.L.A திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குனர் பாரதிராஜா உட்பட பலரையும் தாக்கிப் பேசினார்(உண்மையை பேசினார்).



இந்நிலையில் மணிவண்ணன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் முதலைமைச்சராக வரவேண்டும் என்ற நோக்கத்திலேயே நடிக்கின்றனர்’ என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மணிவண்ணன் “தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் தற்போது ஆதாயம் தேடுவதிலேயே குறியாய் இருக்கின்றனர். 


மேலும் அவர்கள் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு உண்மையான காரணமாக விளங்கியவர்களை பெருமைப்படுத்துவதில்லை. தங்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் ‘என்றாவது முதலமைச்சராக வேண்டும்’ என்ற முடிவிலேயே எடுக்கின்றனர். ஆனாலும் தமிழ் சினிமாவில் சில நேர்மையான மனிதர்களும் இருக்கின்றனர். 


நடிகர் அஜித் அவர்களில் ஒருவர். சுயநலம் கருதாமல் தனது ரசிகர் மன்றத்தையே கலைத்தவர் அஜித். சூர்யா, விக்ரம் ஆகியவர்களும் அஜித்தைப் போல நேர்மையின் மறுவடிவம்” என்று கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...