பக்கத்து வீட்டுல ஒரே சத்தம்.
என்ன? ஏதுன்னு விசாரிக்கிறதுக்காக ஓடினேன்.
அந்த வீட்டுக்காரர் சமையலறையை நோக்கி நின்றுகொண்டு படு பயங்கரமாகக் கத்திக்கொண்டிருந்தார்.
"என்ன சார் ... யாரை திட்டுறீங்க?" கேட்டேன் நான்.
"நீங்க போங்க சார் ... நான் என் மனைவியைத்தான் திட்டிகிட்டிருக்கேன்"
அவங்க ஊருக்கு போயிருக்காங்கன்னு சொன்னீங்க...
அதான் தைரியா திட்டிகிட்டு இருக்கேன்...!
+++********************************+++
மதிய நேரம்.
அலுவலகத்தில் சக நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்தி கொண்டிருந்தேன்...
அப்போது ஒரு நண்பரிடம்,
"சார் ... உங்க கேரியர்ல மறக்க முடியாதது எது ?" என்று கேட்டேன் நான்.
அதற்கு அவர் சொன்ன பதில்,
"போனா மாசம் ஒரு நாள் என் பொண்டாட்டி எனக்கு கொடுத்தனுப்பிய பழைய சாதமும், பச்சை மிளகாவும் தான் ... உங்களுக்கும் ஒரு நாள் எடுத்து வரவா?"
+++********************************+++
நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா?
ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன்.
அங்கே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து கேட்டார்,
"நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?"
கொஞ்சம் வித்தியாசமாக பதிலளிக்கலாமே என்று எண்ணிய நான்,
"இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறாங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க." அப்படின்னுதான் சொன்னேன்.
அதுக்குள்ள அந்த லூசு சொல்லுது,
"ஓ.கோ.. .என்னை மாதிரி ஓசில சாப்பிட வந்தவர்தானா நீங்களும். .."
+++********************************+++
டாக்டர் : தினமும் காலையில வெறும் வயித்துல அரை மணி நேரம் நடந்தா உங்க வெயிட் குறைஞ்சிடும்.
பேஷண்ட் : யார் வயித்துல டாக்டர் நடக்கணும்?
டாக்டர் எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு...
டாக்டர் கிட்ட சொல்றதுக்கு என்னம்மா கூச்சம், தயங்காம சொல்லுங்க...
அட நீங்க வேற டாக்டர், எனக்கு பல்லு கூச்சமா இருக்குனு சொன்னே
+++********************************+++
வீட்டு ஓனர் : வாடகையை எப்ப சார் தருவீங்க?
குடியிருப்பவர் : சம்பளம் வாங்கினதும் தந்துடுறேன்ங்க...
வீட்டு ஓனர் : அப்படியா... அப்போ உங்களுக்கு எப்போ சம்பளம் போடுவாங்க...?
குடியிருப்பவர் : என்ன சார், சின்னப்புள்ளத் தனமா கேக்குறீங்க. வேலை கிடச்சா தானே சம்பளம் கிடைக்கும்..
ஹா... ஹா... கலக்கல்ஸ்...
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Success-is-our-choice.html
ReplyDeleteநானும் இரசித்தேன்.
ReplyDeleteநம்ம ஊர்லே நீங்க சொன்ன மாதிரியான பெரிய மனிதர்களுக்கு பஞ்சமே இல்லை !
ReplyDelete