Wednesday, February 2, 2011

'அழகர்சாமியின் குதிரை' கதை


இயக்குநர் கெளதம் மேனன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கிகொண்டிருக்கும் 'அழகர்சாமியின் குதிரை' படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

தேனி அருகே உள்ள மல்லையாபுரம் கிராம மக்கள், ஊர் திருவிழா நடந்தால் தான் ஊரில் மழை பெய்யும் என நம்புகிறார்கள். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருவிழா நடைபெறும் நேரத்தில் சாமியின் வாகனமான மரத்தினால் செய்த குதிரை வாகனம் காணாமல் போய்விடுகிறது.

அதே நேரத்தில் பெரியகுளம் அருகே உள்ள அகமலை என்னும் மலைகிராமத்தில் குதிரையில் பொதியேத்தி பிழைக்கும் அழகர்சாமி தன் திருமணம் நெருங்கும் நேரத்தில் குதிரை காணாமல் போய்விடுகிறது. குதிரை கிடைத்தால்தான் தன் திருமணம் என்னும் சூழ்நிலையில் தன் குதிரையை தேடி புறப்படுகிறான்.

மரக்குதிரை கிடைத்து கிராமமக்களின் திருவிழா நடந்ததா? இல்லையா?

நிஜக்குதிரை கிடைத்து அழகர்சாமியின் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.

இதில் அழகர்சாமியாக சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்து வந்த அப்புகுட்டி நடிக்க, அவருக்கு ஜோடியாக சரண்யா மோகன் நடிக்கிறார்.

3 comments:

  1. வடையும் நமக்குதான்...

    ReplyDelete
  2. பாடல் வந்து விட்டது.கேளுங்கள்.கருத்துக்களை பதிவிடுங்கள்.கார்த்திக்-ஸ்ரேயா குரல்களில் அருமையான மெலோடியை கேட்டு ரசியுங்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...