Tuesday, February 8, 2011

பிற மொழியில் நடிப்பது தவறில்லை


'களவாணி' ஓவியா கூறியது: கன்னடம், தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘களவாணி'. அதிலும் நானே நடிக்கிறேன். இயக்குனர் சற்குணம் எனக்கு கொடுத்த வாய்ப்புதான் இது. கன்னட ரீமேக்கில் மற்றொரு பாடல் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன் ஷூட்டிங் தொடங்கியது. 

தெலுங்கு பட ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது. எனது நடிப்பை மெருகேற்ற இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘மன்மதன் அம்புÕ படத்தில் எனது காட்சிகள் எடிட் செய்யப்பட்டு ஒன்றிரண்டு சீன் மட்டுமே தியேட்டரில் பார்த்தபோது அப்செட் ஆனேன். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக என் காட்சிகள் எடிட்டிங் செய்யப்பட்டது பற்றி இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் சொன்னபோதுதான் உண்மை தெரிந்தது. கமல் ஹீரோ. ரவிகுமார் டைரக்ஷன், மாதவனின் முறைப்பெண் என்று சொன்னபோது அந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. இதற்கிடையில் ராசு மதுரவன் இயக்கத்தில் ‘முத்துக்கு முத்தாகÕ படத்தில் நடிக்கிறேன். இதுவொரு மாறுபட்ட திரைக்கதையை கொண்டது. குழந்தைகள், பெற்றோர்களுக்கு இடைப்பட்ட சம்பவங்கள்தான் முக்கிய கரு. 

பிறமொழி படங்களில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். அதில் என்ன தவறு? நல்ல வாய்ப்புகள் வரும்போது மொழி ஒரு பிரச்னை இல்லை. கன்னடத்தில் நடிப்பதால் அம்மொழியை கற்று வருகிறேன்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...