Friday, February 4, 2011

நான் ஹீரோ இல்லை - தனுஷ்


சீடன் படத்தின் விளம்பரங்களின் முழுக்க தனுஷே நிரம்பியிருந்தாலும், இப்படத்தின் ஹீரோ அவர் இல்லை என்பதுதான் உண்மை. இதை இன்று (பிப்ரவரி 3) நடைபெற்ற சீடன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கொஞ்சம் விளாவரியாகவே நமக்கு கூறினார் தனுஷ்.

"இந்த படத்தின் முதல் நாள் அன்று என்னுடைய உதவியாளர் "சார் ஹீரோ வந்துட்டாரு என்று என்னிடம் கூறினான்" எனக்கு சட்டென்று ஒன்றும் புரியவில்லை. சிறிது நொடிகளுக்குப் பிறகுதான் புரிந்தது இந்த படத்தின் ஹீரோ நான் இல்லை என்பது. இந்த படத்தின் ஹீரோ புதுமுகம் கிருஷ்ணாதான். இதில் நான் ஒரு முக்கியமான ரோலில் நடிச்சிருக்கேன். அதுக்காக அது சிறிய வேடமும் இல்லை. 21 நாட்கள் நான் இந்த படத்திற்காக டேட் கொடுத்தேன் அந்த அளவுக்கு அந்த ரோலை மெருகேற்றியிருக்கிறார் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா.

என் வாழ்வில் மிக முக்கியமான பெண்களான எனது அம்மா, என் மனைவி, லதா அம்மா, என் சகோதரிகள் ஆகியோருக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன்." என்றார் தனுஷ்.

இந்த படத்தில் தனுஷ் சமையல்காரராக நடித்திருக்கிறார். அதற்காக வீட்ல சமையல் வேலைகளை செய்து பயிற்சியெல்லாம் எடுத்தாராம். அதுபோல ஹீரோயின் அனன்யாவும், மலையாள 'நந்தனம்' படத்தின் பாடலை பாடி பள்ளியில் பரிசு பெற்றாராம். இப்போது அதே படத்தின் தமிழ் பதிப்பில் ஹீரோயினாக நடிப்பதால் பெரும் மகிழ்ச்சியாம் அவருக்கு. பள்ளியில் மட்டுமல்லாமல், இப்போது நிஜமாகவே மக்களிடமும் பரிசு பெறும் அளவிற்கு படத்தின் க்ளைமாக்ஸ் பாடல் காட்சியில் நடித்திருக்கிறாராம் அவர்.

அந்த பாடலை பார்க்கும்போது ரசிகர்கள் கண்டிப்பாக அழுவார்கள். அந்த அளவிற்கு அனன்யாவின் நடிப்பு இருக்கிறது. அப்படி ரசிகர்கள் கண்களில் கண்ணீர் வந்தால் அது எனக்கு கிடைத்த வெற்றியாக நான் எடுத்துகொள்வேன். என்றார் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா.

2 comments:

  1. நாட்டுக்கு நல்ல செய்தி சொன்னதுக்கு நன்றி ஹி ஹி.....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...