Tuesday, February 15, 2011

பரபரப்பு இல்லாமல் மும்பையில் ரஜினி..

rajnikanth
"எந்திரன்" படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் "ரானா". இதை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். கடந்த வாரம் இறுதியில் மும்பைக்கு சென்றார் ரஜினிகாந்த். தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த்துடன் சென்ற இவர் மும்பையிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார். பின்னர், 

தனது நண்பர் டாக்டர்.முரளி மனோகர் மற்றும் அவரது மனைவி சுஜாதாவின் 25-ஆம் திருமண நாள் விழாவில் கலந்து கொண்டார். இந்த முரளி மனோகர் என்பவரும் சினிமா துறையுடன் நெருங்கிய தொடர்புகள் உடையவர் தான். ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் பிரஷாந்த் நடித்த "ஜீன்ஸ்" படத்தினை தயாரித்தது இவர்கள்தான். ஆக்கர் புரடக்சன் மற்றும் ஈராஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின்  தயாரிப்பில் முரளி மனோகரும் பங்குகொள்ளப் போகிறார்.

வழக்கமாக பாலிவுட்டில் ஒரு வினோதமான வழக்கம் உள்ளது. சினிமா சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தாங்கள் மேர்கொள்ளும் பயணங்களின் போதெல்லாம், போகும் இடத்தில் எல்ல்லாம் பப்ளிசிட்டி செயய்துக் கொள்வார்கள் பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள். ஆனால் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் நடிக்கும் "ரானா" படத்தின் நடிகர்கள், மற்றும் நடிகையர்களின் இறுதிகட்ட தேர்வு செய்யபோகும் போது கூட, எந்த ஒரு பப்ளிசிட்டியும் செய்து கொள்ளாமல் அமைதியாக சென்று வந்திருக்கிறார். அவரது செய்தி தொடர்பாளர் (அப்படி ரஜினிக்கு யாரவது உள்ளார்களா, என்று நினைக்கும் அளவுக்கு ரஜினிகாந்த் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்), புகைப்படம் எடுக்க கூட யாருக்கும் தகவல் வழங்கவில்லை. அந்த அளவிற்கு எளிமையானவர் நமது ரஜினிகாந்த்.

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...