Friday, May 24, 2013

கோடையில் நீங்கள் இதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்


* வெயிலுக்கு உகந்தது கதர்ஆடை. உடலில் உண்டாகும் வியர்வையை உறிஞ்சுவதுடன், வியர்க்குரு வருவதையும் தடுக்கும்.

* வெயில் காலங்களில், ஓட்டை விழுந்துள்ள ஓசோன் மண்டலத்தின் வழியாக, அதிகமான "அல்ட்ரா வைலட்' கதிர்கள் பாயும். இதனால், கண்கள் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க 'ஆட்டோ ரிப்ளக்ஷன் கிளாஸ்' அணிவது நல்லது.

* உடல் சூட்டையும், தோல் நோயையும் தவிர்க்க, அதிக இளநீர் அருந்துவதுடன், நுங்கு, வெள்ளரி, தர்பூசணி ஆகியவற்றையும் அதிகம் சாப்பிட வேண்டும்.

* வியர்வை நாற்றத்தைப் போக்க, குளிக்கும்போது, எலுமிச்சம் பழத்தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பு தடவி, கழுத்து, அக்குள் உள்ளிட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால், வியர்வை நாற்றம் வராது.



* கோடைக்காலத்தில் வரும் அக்கி, அம்மை நோய்க்கு வெள்ளரியும், கிர்ணிப்பழமும் மகத்தானது.

* காஸ் நிரம்பியுள்ள குளிர்பானங்களை, அருந்துவதைத் தவிர்த்து இந்த சீசனில் கிடைக்கும் பழ வகைகளை அதிகம் சாப்பிடுவது அவசியம்.

* ரோஜாப்பூ, குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால், உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

* வட்டமாக அரிந்த வெள்ளரியை, கண்கள் மீது வைத்துக் கொண்டு உறங்கினால், கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

* மருதாணியையும், கரிசலாங்கண்ணி இலையையும் சேர்த்துக் காய்ச்சப்பட்ட, தேங்காய் எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து, மறுநாள் காலை வில்வங்காய் கலந்த சிகைக்காய்ப் பொடி தேய்த்துக் குளிப்பது கோடை காலத்துக்கு உகந்தது.

* குளிக்கும்போது, தேய்ப்பதற்கு என்று நாட்டு மருந்து கடைகளில் தனியாகப் பொடி விற்கப்படுகிறது. இதனை வாங்கி, சோப்புக்குப் பதிலாக பயன்படுத்தி வந்தால் முகத்திலும், உடலிலும் எண்ணெய் வழியாமல் நிற்கும்.

* பழ ஜூஸ்களுக்கு, ஐஸ் கட்டிகள் தயாரிக்கும்போது, நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஒரு சிட்டிகை உப்பு கலந்து, "ஐஸ் ட்ரே'யில் ஊற்றி தயாரித்தால், ஜூசில் போடும் போது சுவையாக இருக்கும்.

* இளநீர் காய்களை வாங்கியவுடன், குளிர்ந்த நீரில் போட்டு விட வேண்டும். வெயில் காலத்தில், பனை நுங்குகளை தோலுரித்து சிறு துண்டுகளாக்கி, இளநீருடன் கலந்து குடித்தால், குளிர்ச்சியாக இருக்கும்.

* கோடையில், அதிகமான ஐஸ் கட்டிகள் தேவைப்படும். "ஐஸ் ட்ரே'யில் கொதித்து ஆறிய நீரை ஊற்றி வைத்தால், சீக்கிரமாக "ஐஸ்' கிடைக்கும்.

* கோடையில், குளிர்பானம் அருந்துவதற்கு பதில் சோடா குடிக்கலாம். சிறிது எலுமிச்சை சாறும், உப்பும் சேர்த்து சாப்பிட தாகம் தணியும்.

3 comments:

  1. பயனுள்ள தகவல்கள், நன்றி.

    ReplyDelete
  2. இன்னும் ஒரு மாதத்திற்குள் குளிர்ந்தால் நல்லது... பயன் தரும் தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  3. அன்பு நண்பரே வணக்கம்.எனக்குத் தாங்கள் அனுப்பிய முதல் பதிவு.சிறப்பான பதிவு.ஆனால் நான் வசிப்பது கொச்சியில். தமிழகம் அளவு வெயில் இங்கு இல்லை.மே 24 முதல் மழையும் பெய்ய ஆரம்பித்து விட்டது.
    இருந்தாலும் பதிவில் உள்ள விசயங்கள் எப்பொழுதும் பயன்படக்கூடிய தகவல்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...