Wednesday, January 19, 2011

தமிழ் சினிமா என்னை கைவிடாது : ஜோதிர்மயி


மலையாளத்தில் ‘சீனியர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவர் கூறியதாவது: தமிழ் சினிமா மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இப்போது தமிழில் நடிக்கவில்லை என்றாலும் எனது கவனமும், ஆர்வமும் தமிழ் மீதுதான் இருக்கிறது. கொஞ்சம் திறமை காட்டினால் கூட தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்துக்கொண்டாடுவார்கள். 

அதனால்தான் ஒவ்வொரு மலையாள நடிகைகளுக்கும் தமிழ்ப் படங்கள் மீது ஆர்வம் இருக்கிறது. எல்லோரையும் ஆதரிக்கும் தமிழ் சினிமா என்னை கைவிடாது என்ற நம்பிக்கை இருக்கிறது. 

தற்போது ‘சீனியர்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன். அதற்கு பிறகு முக்கியமான படத்தில் நடிக்கிறேன். படத்திற்கு பெயர் வைக்கவில்லை. கேரளாவில் உள்ள மலபார் பகுதியில் வாழும் ‘டெம்ப்யம்’ என்ற இன மக்கள் கோவில்களில் நடனம் ஆடுபவர்கள். இந்த இனத்துப் பெண்ணாக நடிக்கிறேன்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...