Saturday, January 22, 2011

இக்கால நடிகைகள் கர்வம் பிடித்தவர்கள் - ராதா


“அலைகள் ஓய்வதில்லை” படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராதா. “முதல் மரியாதை” படத்தில் சிவாஜியுடன் நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றோருடனும் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது அவர் மகள் கார்த்திகா “கோ” என்ற படம் மூலம் ஜீவா ஜோடியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

திருப்பதி கோவிலுக்கு வந்த ராதா அங்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் மும்பையில் வசிக்கிறேன். எனது கணவர் அங்கு ஓட்டல் வைத்துள்ளார். எனக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மகள் கார்த்திகா என்னைப்போல் சினிமாவுக்கு வந்துள்ளாள். தெலுங்கில் “ஜோஷ்” படத்தில் நடித்தாள். தற்போது “கோ” என்ற தமிழ் படத்திலும் நடிக்கிறாள்.

என்னைப்போல் எனது மகளும் சினிமாவில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். 1980-ல் இருந்து 1992 வரை சினிமாவில் இருந்தேன். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.

அப்போது எனக்கு இருந்த புகழ் தெரிய வில்லை. இப்போது என் மகள் வயது உள்ளவர்கள் எனது நடிப்பை புகழ்ந்து பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய நடிகைகள் ஒரு படத்திலேயே தங்களை திறமைசாலிகள் போல் காட்டிக் கொள்கின்றனர்.

சிலருக்கு கர்வம் இருக்கிறது. எனக்கு அப்போது பத்து படங்களில் நடித்தும் கூட பயம் இருந்தது. புது நடிகைகளுக்கு நான் அறிவுரையாக சொல்வது என்னவென்றால் எல்லைளை தாண்டாதீர்கள்.

குடும்பம் நடத்த தேவையான திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். தொழில் தொடங்குவதற்கு அவசரம் காட்டாதீர்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...