Friday, January 28, 2011

அர்னால்டின் அடுத்த படம்


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில கவர்னர் பதவியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர், மீண்டும் வெள்ளித்திரையில் கால் பதிக்கிறார். உலகப் போர் பற்றிய படத்தில் நாஜி கமாண்டராக நடிக்கிறார். ஆஸ்திரியாவில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலானவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் (63). கான்கன் த பார்பேரியன், டெர்மினேட்டர், கமாண்டோ என்று அதிரடி ஆக்ஷன் ஹாலிவுட் படங்களில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தியவர். குடியரசு கட்சியில் சேர்ந்த இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில கவர்னராக 2003-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2-வது முறையாக கவர்னர் தேர்தலில் வெற்றி பெற்ற அர்னால்டின் பதவிக்காலம் கடந்த 3-ம் தேதி முடிந்தது. கவர்னராக இருந்த காலத்திலும் சில படங்களில் தலை காட்டினார்.

ஓய்வுபெற்ற பிறகு அர்னால்டு சில படங்களுக்கு கதை கேட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இரண்டாம் உலகப் போர் கதையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் அவர் நடிக்க இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. ‘வித் விங்ஸ் ஆஸ் ஈகிள்’ என்பது படத்தின் பெயர். தாய்நாடான ஆஸ்திரியாவில் வெளியாகும் குரோனன் ஜீடங் என்ற நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அர்னால்டு கூறியதாவது:

வயது 63 ஆகிறது. ஆக்ஷன் படம் செய்தாலும் லாஜிக்கோடு செய்ய வேண்டும். முன்பு செய்ததுபோல ஆக்ஷன் செய்தால் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள். அதற்கேற்ப 3 கதைகள் கேட்டிருக்கிறேன். தற்போது நடிக்கும் ஈகிள் படம் 2-ம் உலகப்போர் பற்றியது. இதில் நாஜி கமாண்டராக நடிக்கிறேன். வயதான ராணுவ அதிகாரி ரோல். போர் முடிவின்போது, கூட்டமாக குழந்தைகளை கொல்ல வேண்டிய பொறுப்பு தரப்படுகிறது. அதற்காக புறப்பட்டு செல்லும் நான் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் நேராமல் பத்திரமாக காப்பாற்றும் கதை. வீரதீர சாகசங்கள் நிறைந்த படமாக இருக்கும். இவ்வாறு அர்னால்டு கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...