கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஜீவா நடித்திருக்கும் 'கோ' படத்தினால் பத்திரிகை போட்டோகிராபர்கள் ரொம்பவே கோவமாக இருக்கிறார்கள். இந்த படம் வெளிவந்த பிறகு பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு சமுதாயத்தில் ஒரு தனி மரியாதை கிடைக்குமாம். அந்த அளவுக்கு அவர்களுடைய வேலையை பற்றியும், அதில் இருக்கும் ஆபத்துக்களை பற்றியும் தெள்ளந்தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். அப்படி இருக்க இவர்களுக்கு என்ன கோபம் என்று யோசிப்பது புரிகிறது. இந்த கோபத்திற்கு காரணம் கலைஞர் தொலைக்காட்சி தானாம்.
கோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மற்ற தொலைக்காட்சி கேமராக்களின் கண்களுக்கு காட்டாமல் பிரத்யேகமாக கலைஞர் டிவியே படம்பிடித்தது. ஆது ஒரு பக்கம் இருக்க, இயக்குநர் கே.வி.ஆனந்த், தான் முதலில் பத்திரிகையில் போட்டோகிராபராகத்தான் என் வாழ்க்கையை துவங்கினேன். இந்த படமும் அவர்களைப் பற்றியதுதான் என்பதால் விழாவிற்கு வந்திருந்த அனைத்து போட்டோகிராபர்களையும் மேடை ஏற்றி அவர்கள் மூலம் பாடல் சிடியை வெளியிட செய்தார்.
இதனால் தங்களின் ஃபிளாசை காட்டிலும், அதிகமான பிரகாஷத்தை வெளிப்படுத்திய போடோகிராபர்கள், கலைஞர் டிவியில் நாங்க வரப்போகிறோம் என்று சொந்த பந்தங்களுக்கு தந்தி அடிக்காத குறைதான். ஜனவரி 26ஆம் தேதி, இந்த நிகழ்ச்சியை கலைஞர் டிவி ஒளிபரப்ப, அத்தனை போட்டோகிரபர்களும், அவர்களின் குடும்பத்தாரும் டிவி முன் ஆஜராகி, அந்த இறுதி காட்சிக்காக காத்திருந்தனர். "நான் போட்டோகிராபராகத்தான் இருந்தேன். படமும் அவங்களபத்திதான் அதனால் இந்த பாடல் டிசியை அவங்க வெளியிடட்டோம்" என்று கே.வி.ஆனந்த் மைக்கில் சொல்ல, "ஆஹா நம்ம முகம் வரப்போகுது" என்று எதிர்பார்த்திருந்த போட்டோகிராபர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். அந்த காட்சியை மட்டும் கலைஞர் டிவி போடவில்லையாம். மாறாக வந்திருந்த விஐபிகளின் முகத்தை காண்பித்து விட்டார்கள்.
"இவங்களும் ஒரு மீடியா தானே நம்மள காமிச்சா என்ன. இவங்க சீரியல பத்தி மட்டும் நம்ம செய்தி போடலையா" என்று விழாவுக்கு விழா கூட்டம் கூடி குமுறுகிறார்களாம் இந்த போடோகிராபர்கள்.
No comments:
Post a Comment