Thursday, January 20, 2011

விமலாராமனுக்கு பாலிவுட்டிலிருந்து அழைப்பு


இன்னும் எத்தனை நாளைக்குத்தான் குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது..! சில மலையாளப் படங்களில் நடித்தாகிவிட்டது.. தெலுங்கில் ஆடிக் களைத்தாகிவிட்டது. தமிழில் நடித்த ‘பொய் சுமாராக ஓடியது.. ‘ராமன் தேடிய சீதை பரவாயில்லை என்றானது..!

ஆனாலும் விடாப்பிடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவில் கால் பதித்தற்கு எதையாவது சாதித்துவிட்டுத்தான் செல்வேன் என்ற கங்கணத்துடன் இருந்த விமலாராமனுக்கு ஆஃபர் இப்போது பாலிவுட்டில் இருந்து வந்திருக்கிறது.

30 வருடங்களுக்கு முன்பு வைஜயந்திமாலா நடித்து வெளிவந்த இந்தி படம் `அமரபாலி.` ஒரு இளவரசியை பற்றிய கதை அது. முப்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் அதேபெயரில் இப்படம் இப்போது தயாராகிறது.

அதில், வைஜயந்திமாலா நடித்த வேடத்தில் விமலா ராமன் நடிக்கிறாராம். `ஜோதா அக்பர்` (இந்தி) படத்தை இயக்கிய அதுல் கே.கார்க், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். சல்மான்கானின் உறவுப் பையன் ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார்.

`அமரபாலி` படத்தில் நடிப்பதற்காக, விமலாராமனுக்கு ஒரு பெரிய தொகை அட்வான்சாக கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். இது, முழுக்க முழுக்க கதாநாயகியை சுற்றிவரும் கதை என்பதால், விமலாராமன் உற்சாகமாக காணப்படுகிறார். இந்த படத்துக்காக அவர், 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார்!

காத்திருந்து, காத்திருந்து ஒரு வாய்ப்பு வருகிறபோது அதைக் கைவிட அவர் என்ன முட்டாளா..? இன்னொரு சவுகரியம் விமலாவுக்கு.. பார்ட்டி பிரியரான அவருக்கு மும்பையின் பார்ட்டி லைஃப் ரொம்பவே பிடித்துப் போகலாம்..!

அஸின், த்ரிஷா, பத்மப்பிரியா வரிசையில் பாலிவுட்டுக்கு படையெடுத்திருக்கும் இவராவது வைஜெந்திமாலாவின் சாதனையைத் தொடுவாரா என்று பார்ப்போம்..!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...