Monday, January 24, 2011

வில்லத்தனத்திற்கே முக்கியத்துவம் - முமைத்


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


‘நேனு நான் ராட்ஷசி’ என்ற தெலுங்கு படத்தில் வில்லியாக நடித்து வருகிறார் முமைத்கான். இதுபற்றி அவர் கூறியதாவது: எனது கண்ணும், உடல்வாகும் வில்லிக்கு ஏற்ற மாதிரி இருப்பதாக, பல படங்களில் வில்லியாக நடிக்க அழைப்பு வந்தது. 
 
நான்தான் மறுத்து வந்தேன். ஆனால் வில்லியாக நடிப்பதும் நடிப்புதானே என்று தோன்றியதால் இப்போது ஒப்புக் கொண்டேன். ராணா, இலியானா ஹீரோ, ஹீரோயினாக இருந்தாலும் எனது வில்லி கேரக்டர்தான் அனைவரையும் கவரும். 
 
இதுதவிர கன்னட படம் ஒன்றிலும் வில்லியாக நடிக்க இருக்கிறேன். தமிழில் ‘பவுர்ணமி நாகம்’ படத்தில் வில்லியாகவும், ஹீரோயினாகவும் நடித்தேன். இப்போது மலையூர் மம்பட்டியானில் நல்ல கேரக்டரில் நடித்து வருகிறேன். வேறு படங்கள் இல்லை.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...